புதன், 15 ஜனவரி, 2025
மனந்திரும்புதலற்ற ஞானஸ்நானம்!
வெள்ளி, 29 நவம்பர், 2024
கிறிஸ்துவின் சபை என்ற சபை?
கிறிஸ்துவின் சபை என்ற சபை?
- by Eddy Joel Silsbee
ஞாயிறு, 5 மே, 2024
மனதுருகும் தேவன்
*மனதுருகும் தேவன்*
by : Eddy Joel Silsbee
இரக்கமும் மனவுருக்கமும் நிறைந்த நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.
நாம் அவருடைய பிள்ளைகள். அவர் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை. உபா. 31:6
நம்முடைய தேவன் எப்போதும் நம்முடனே இருக்கிறவர். நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களாயிருக்கிறோம். சங். 95:7
நமக்கு ஏற்படும் எல்லா இக்கட்டுகளிலிருந்தும் நம்மை விடுவிக்கும்படிக்கு அவர் நம்மீது மனதுருகுபவர். சங். 86:15
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாய் எண்ணுவதில்லை. தமது முகத்தை அவர் நமக்கு மறைப்பதுமில்லை. அவரை நோக்கிக் கூப்பிடும்பொழுது நம்மை விசாரிப்பவர் அவர். சங். 22:24
அவரது மனதுருக்கத்தை நாம் பெறவேண்டுமெனில் நாம் மனந்திரும்புவது அவசியம்.
தவறுகளைக் அடையளப்படுத்தி,
அதைக் களைந்து விட்டு
மனந்திரும்பி அவரை ஆராதித்த ஜனங்களின் மீது அவர் மனதுருகினார் என்கிறது வேதம். நியா. 10:16
தவறுகளிலிருந்து முதலாவது நாம் நம்மை விலக்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுது தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். ஏசா. 55:7, 1யோ. 5:18, யாக். 4:8
சுய மனந்திரும்புதலின்றி தேவனை தேடி எந்த பிரயோஜனமும் இல்லை !! நேர விரயமே…
அவர் நம்மீது மனதுருகி நம்மை காக்க அவர் நமக்காய் காத்துக்கொண்டிருக்கிறார். 1சாமு. 30:18
சுயசோதனை முதலாவது வரட்டும். ஆசீர்வாதம் தானாக பின்தொடரும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
சனி, 10 ஜூன், 2023
சுய முயற்சியினால் அல்ல
*சுய முயற்சியினால் அல்ல*
by : Eddy Joel Silsbee
கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துகள்.
யாருக்காக வேலை செய்பவர்களாய் இருந்தாலும்,
சம்பளமோ வருமானமோ எவர் மூலமாக நமக்கு வந்துச் சேர்ந்தாலும், அனைத்து கணக்குகளும் நம்முடைய தேவனிடத்தில் இருந்தே வருகிறது.
ஆண்டவரே,
இந்த வேலை வேண்டும் என்று,
நம் கணக்கை அவரிடத்திலேயே துவக்கத்தில் வேண்டி விரும்பி பெற்றோம்.
நாம் “*உழைப்பது தேவனுக்காக*” என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
வேலையை கொடுத்தது அவர்.
நாம் செய்யும் வேலைக்கேற்ற பலனை நமக்கு நிச்சயம் தருவார்.
நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். கொலோ. 3:23-24
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

