சனி, 7 பிப்ரவரி, 2026

#1230 – கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராயிருக்கிறார் என்று கிறிஸ்து சொல்லியிருக்க, போதகர் என்று தங்களை அடையாளப்படுத்துவது சரியா தவறா?

#1230 –  *கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராயிருக்கிறார் என்று கிறிஸ்து சொல்லியிருக்கபோதகர் என்று தங்களை அடையாளப்படுத்துவது சரியா தவறா?*
 
*பதில்:*
இந்த கேள்விக்கான பதிலுக்கு செல்வதற்கு முன்னர்பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களை புரிந்துக்கொள்வது அவசியம்.
 
பிரஸ்பூடிரோஸ் என்கிற வார்த்தைக்கு – மூப்பர் என்றும்;
பொய்மென் என்கிற வார்த்தைக்கு – பாஸ்டர் அல்லது மேய்ப்பர் என்றும்;
எபிஸ்கோபஸ் என்கிற வார்த்தைக்கு – கண்காணி என்றும் பொருள்.
 
மேலே சொல்லப்பட்ட மூன்று வார்த்தைகளும் ஒரே பொறுப்பையே குறிக்கின்றன.

Pastor (போதகர்/மேய்ப்பர்) / Elder (மூப்பர்) / Bishop (கண்காணி) – இம்மூன்றும் ஒரே அர்த்தங்கள் உடையவை.
 
ஒரே பொறுப்பைக் குறிக்கும் மூன்று வெவ்வேறு வார்த்தைகளேயன்றிதனித் தனிப் பொறுப்புகளை அல்ல.
 
அப். 20:17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பிசபையின் *“மூப்பரை”* வரவழைத்தான்.
 
அப். 20:28; ஆகையால்உங்களைக்குறித்தும்தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை *“மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக”* வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும்எச்சரிக்கையாயிருங்கள்.
 
இதன்மூலம்வேதாகமம் *“மூப்பர் – மேய்ப்பர் – கண்காணி”* என்பதை ஒரே குழுவினருக்குப் பயன்படுத்துவதை தெளிவாகக் காணலாம்.
 
மேலும்பேதுரு தனது நிருபத்தில் எழுதும் போது இந்த வார்த்தைகளை ஒரே அர்த்தத்தில் எழுதுவதை கவனிக்கவும்.
 
1பேதுரு 5:1-3 உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும்கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும்இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் *“மேய்த்து”*,  கட்டாயமாய் அல்லமனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்லஉற்சாக மனதோடும்சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்லமந்தைக்கு மாதிரிகளாகவும், *“கண்காணிப்பு”* செய்யுங்கள்.
 
பாஸ்டர் / போதகர் / பிஷப் / கண்காணிஅல்லது ரபீ / ரபூனி என்பவை யூத போதனைச் சூழலில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் என்றாலும்அவையும் “போதனை அதிகாரம்” என்ற ஒரே கருத்தையே குறிக்கின்றன. செயல்படும் பொறுப்பின் / வேலையின் பெயர்களே.
 
*கிறிஸ்தவர்கள்மற்றவர்களைக் காட்டிலும் தங்களை வேறுப்படுத்திக் காண்பிக்க இடம் இல்லை என்பதால் பட்டங்களாக எதையும் வைத்து தங்களை தனித்துவமாக்க இடமில்லை.*
 
உலகத்தார் தங்கள் வேலையைக் குறிக்கும் பட்டங்களான டாக்டர்எஞ்சினியர்கலெக்டர் போன்றுகிறிஸ்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னதாக *“ஊழியர்கனத்திற்குறிய ஊழியர்போதகர், பாஸ்டர்பிஷப்ரெவரென்டு,”* போன்ற பட்டங்களை போட்டுக்கொள்ள வேதம் அனுமதிக்கவில்லை.  வசனத்தின் படி அனைவரும் *“சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும்”*.  மத். 23:8.
 
இக்காலங்களில், *“சகோதரர்”* என்ற சொல்லே கூட சில இடங்களில் ஒரு பதவியாகப் பயன்படுத்தப்படுவது போல் தோன்றுகிறது.
 
மருத்துவரை டாக்டர் என்று அழைப்பதும்கலெக்டர்இஞ்சினியர்மேனேஜர் போன்று அழைப்பது போலகுப்பை சுத்தம் செய்பவர்செறுப்பு தைப்பவர்முடி வெட்டுபவரது தொழிலை சொல்லி அழைப்பார்களோஏற்றத்தாழ்வை அங்கே அடையாளப்படுத்துவதை உணர முடிகிறதல்லவாஇதன்மூலம்சமுதாயத்தில் தொழில்கள் கூட மதிப்பீட்டின் அடிப்படையில் அழைக்கப்படுவதைக் காண்கிறோம்.
 
இப்படி எவ்வகை வித்தியாசத்தையும் காண்பிக்க கிறிஸ்தவத்தில் இடமில்லாததால் *“சகோதரர் என்றே நாம் அழைக்கப்படவேண்டும்”* என இயேசு கிறிஸ்து போதித்தார்.
 
மற்றவரை விட நம்மை எந்த வகையிலும் உயர்ந்தவராய் அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடாது. பிலி. 2:3
 
 
மேலும்கிறிஸ்துவின் சகோதரரானயாக்கோபு மீண்டும் தன் நிரூபத்தில் அதை குறித்து எச்சரிக்கிறார். யாக். 3:1
 
 
ஏறத்தாழ 90 வயது நிரம்பிய கிழவனான யோவான் அப்போஸ்தலன் கூட உணர்ச்சி வசப்பட்டு தேவதூதனுடைய காலில் இரண்டாவது முறையும் விழ நேர்ந்தது. 
 
வெளி. 19:10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.”
 
வெளி. 22:8-9 யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோதுஇவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும்இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்தேவனைத் தொழுதுகொள் என்றான்.”
 
தனது தவறை அவர் மறைக்காமல் அப்படியே தனது நிரூபத்தில் எழுதியும் வைத்திருப்பது நமக்கு எவ்வளவு பெரிய பாடம்?
 
 போதகர் என்றும் ஆண்டவர் என்றும் கிறிஸ்து குறிக்கப்பட்டிருக்கிறார். (யோ. 13:13).

நம்மை நாமே கிறிஸ்துவிற்கு இணையாக உயர்த்திக் காண்பிக்க முடியுமோ?
 
கீழ்கண்ட வார்த்தைகளையும் கவனிப்பது நமக்கு கூடுதல் புரிதலையும் தரும்:
 
*சுவிசேஷகர்:*
"சுவிசேஷகர்" என்ற வார்த்தை போர்க்களத்திலிருந்து வெற்றியின் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டுவரும் நபரைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நபர் என்ன செய்கிறார் என்பதைக் குறிக்க அதே வார்த்தை பயன்படுத்தப்படும்போதுஅது பெரும்பாலும் ரோமர் 1:15 இல் உள்ளதைப் போல "சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. அப்படியானால்ஒரு சுவிசேஷகர் என்பது உலகிற்கு நற்செய்தியைக் கொண்டுவரும் நபர்.
 
*பிரசங்கியார்:*
சுவிசேஷகர் என்ற அதே வேலையை "பிரசங்கிப்பது" என்றும் அழைக்கப்படுகிறது.
ரோமர் 1:15-ல் ரோமில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க (சுவிசேஷம் அறிவிக்க) தான் ஆர்வமாக இருப்பதாக பவுல் கூறினார். 2கொரிந்தியர் 1:19-ல்பவுல்சில்வானுவும் மற்றும் தீமோத்தேயு ஆகியோர் கொரிந்துவில் பிரசங்கித்ததாகக் கூறினார்.
 
1தீமோத்தேயு 2:7-ல்பவுல் தான் ஒரு அப்போஸ்தலனாகவும் பிரசங்கியாகவும் நியமிக்கப்பட்டதாகக் கூறினார்.
 
"பிரசங்கிப்பவர்" என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல்ஒரு அறிவிப்பாளர் அல்லது பிரசங்கிப்பவர் என்பதற்கான கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. அத்தகைய நபர் ராஜாவின் செய்திகளையும் கட்டளைகளையும் வழங்கினார்.
பிரசங்கியாளர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்ல
பிரசங்கியாளர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்லஆனால் அதை வழங்குபவர் மட்டுமே”.
 
*ஊழியர்/Minister:*
அதே வேலைக்கு மற்றொரு சொல் ஊழியம்.
ஊழியக்காரன் என்ற இந்த வார்த்தை வேலைக்காரன் என்பதற்கான கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது.
 
ரோமர் 15:15-16 “அப்படியிருந்தும்சகோதரரேபுறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டுதேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்குநான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டுதேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன்."
 
எபேசியர் 3:6-7 “இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோலமுற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்”.
 
ஒரு ஊழியர் தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதன் மூலம் கிறிஸ்துவுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை (ஊழியம்) செய்கிறார்.
 
*ஆசிரியர்/Teacher:*
"ஆசிரியர்" என்ற சொல் ஒரு பயிற்றுவிப்பாளரைக் குறிக்கிறது.
ஒரு ஆசிரியரின் பணி தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குவதாகும்.

பொதுவாக
ஒரு ஆசிரியரின் பணி தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குவதாகும்.
பொதுவாகதேவனது வார்த்தைகளைப் பற்றி மேலும் அறிய விரும்பும் மக்களுக்கு  ஒரு ஆசிரியர் அறிவுறுத்துகிறார். எனவேஇது கற்பிப்பதையும் உள்ளடக்கியது.

ஆசிரியர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்ல

ஆசிரியர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்லஆனால் அதை எடுத்து அறிவுறுத்தி வழங்குபவர் ஆவார்”.
 
*ரபீ / போதகர்:*
ரபி என்ற எபிரேய வார்த்தைக்கு போதகர் என்று அர்த்தம். யோவான் 1:38; 3:2
போதகர் / ரபீ என்பவர் தான் சொல்லும் போதகத்திற்கு அவரே மூலமானவர்அவரே அந்த கருத்திற்கு அதிகாரிதலைவர். போதகர் என்ற சொல்போதனை அதிகாரம் கொண்டவரைக் குறித்தாலும்முழுமையான போதனை அதிகாரம் கிறிஸ்துவுக்கே உரியது.
 
*கடைசியாக:*
சமீபகாலமாககிறிஸ்துவின் சபையில் “போதகர்” என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு கலாச்சாரம் உருவாகி வளர்ந்து வருகிறது. இது வேதாகமத்தின் அடிப்படையில் கிறிஸ்தவர்களால் அனுமதிக்கப்படக் கூடாததும்திருத்தப்பட வேண்டியதுமாகும்.
 
வேதாகமத்தின்படிமற்றவர்களைக் காட்டிலும் தங்களை உயர்த்திக் காண்பிக்கவோபட்டங்களின் மூலம் தனித்துவப்படுத்திக்கொள்ளவோ கிறிஸ்தவர்களுக்கு இடம் இல்லை.
 
அத்தகைய அடையாளப்படுத்தல்களில் விருப்பம் கொள்பவர்கள்கிறிஸ்து போதித்த தாழ்மை மற்றும் சகோதரத்துவத்தின் வழியிலிருந்து விலகிச் செல்லும் அபாயம் இருப்பதை உணர வேண்டும்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
   
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்ய வேண்டி
ய லிங்க்:* https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 
*Website:* http://www.kaniyakulamcoc.wordpress.com
 
*YouTube Channel:* https://www.youtube.com/joelsilsbee
-------------------------
Print Friendly and PDF

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

#1229 – எங்களது பிள்ளையை பரத நாட்டியம் போன்ற நடன பயிற்சிகளுக்கு அனுப்பலாமா?

#1229 – *எங்களது பிள்ளையை பரத நாட்டியம் போன்ற நடன பயிற்சிகளுக்கு அனுப்பலாமா?* வேதத்தின்படி இது முரணானதா அல்லது ஏற்புடையதா என இதற்கான தெளிவை எங்களுக்கு தரவும்.
 
*பதில்* : இந்த தலைப்பில் ஏற்கனவே சிலர் கேட்டிருந்தும், இது போன்ற கேள்வி மீண்டும் எழும்பியதால் நமது பதிவில் அனைவருக்கும் பிரயோஜனமாய் இருக்கும்படிக்கு இதற்கான பதிலை ஒரு முழு நீள பதிவாகவே பதிவு செய்கிறேன்.
 
நான் அறிந்து மொத்தம் 14 இடங்களில் நடனத்தைக் குறித்த குறிப்புகள் வேதாகமத்தில் உள்ளன. அவை:

1. மிரியாம் மற்றும் இஸ்ரவேல் பெண்கள்: யாத்திராகமம் 15:20

2. பொற்கன்று குட்டி வழிபாடு: யாத்திராகமம் 32:19

3. யெப்தாவின் மகள்: நியாயாதிபதிகள் 11:34

4. சீலோவின் குமாரத்திகள்: நியாயாதிபதிகள் 21:21

5. தாவீது கோலியாத்தை வென்றதைக் கொண்டாடிய பெண்களின் நடனம்: சாமுவேல் 18:6, 21:11, 29:5

6. தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி வரும்போது தாவீதின் நடனம்: சாமு. 6:14, 16; 1 நாளா. 15:29

7. புலம்பல் ஆனந்தக் களிப்பாக (நடனமாக) மாறியது: சங்கீதம் 30:11

8. துதிப்பதற்கான அழைப்பு: சங்கீதம் 149:3, சங்கீதம் 150:4

9. நடனத்திற்கான காலம்: பிரசங்கி 3:4

10. இஸ்ரவேலின் மகிழ்ச்சி மற்றும் கன்னிகைகளின் நடனம்: எரேமியா 31:4, 31:13

11. துக்கமாக மாறிய நடனம்: புலம்பல் 5:15

12. உவமை: "குழல் ஊதினோம்நீங்கள் கூத்தாடவில்லை": மத்தேயு 11:17, லூக்கா 7:32

13. ஏரோதியாளின் மகளின் நடனம்: மத்தேயு 14:6, மாற்கு 6:22

14. கெட்ட குமாரன் உவமையில் நடந்த கொண்டாட்டம்: லூக்கா 15:25

 
சூழலைக் குறிக்கும் வரிசை எண் 7, 8, 9 & 10ஐத் தவிர, *மேலேயுள்ள பட்டியலின்படி நடந்து முடிந்த பத்து சம்பவங்களும் துக்கமாய் முடிந்தது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது*.
 
நடனத்தைக் குறித்த சில பார்வைகளை கீழ்வைக்கிறேன்.
 
நடனம் என்பது பரந்த அளவிலான செயல்களை உள்ளடக்கியது.
இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் அசைவாக இருக்கலாம்மகிழ்ச்சி அல்லது உற்சாகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் அசைவாக இருக்கலாம். அல்லது மற்றொரு நபருக்குள் சில உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிக்கலான அசைவுகளாகவும் இருக்கலாம்.
 
நடனம் மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறதுஎனவே மனிதர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் கூடுமான அளவில் பாலின எண்ணங்களை வெளிப்படுத்தும் நடனங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
 
இச்சையான மோகங்களில் ஈடுபடக்கூடாது 1 தெசலோனிக்கேயர் 4:3-5, கொலோசெயர் 3:5.
இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்தவர்களுடன் தொடர்புபடுத்தப்படவுங் கூடாது - எபேசியர் 5:3.
 
இளம் கிறிஸ்தவர்கள் நடனமாடச் விரும்பினாலும் குறைவான பெற்றோர்களே அவர்களைத் தடுக்கிறார்கள்.
 
கிட்டத்தட்ட அனைவரும் நடனமாடுவதில் என்ன தவறு என்பது இப்பொழுது கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
 
பல நடன அசைவுகள் பாலியல் செயலின் இயக்கங்களை பிரதிப்பலிப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
 
"ஆடக்கூடாது" என்று பைபிள் சொல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் கலாத்தியர் 5:19-21 இல் காமவெறி அல்லது களியாட்டு கண்டிக்கப்படுகிறது.
 
இந்த வார்த்தைகள் கட்டுப்பாடு இல்லாததுஅநாகரீகம்கற்பு இல்லாததுஆபாசம் அல்லது வெட்கமற்ற நடத்தையை வெளிப்படுத்தும் எந்தவொரு நடத்தையையும் விவரிக்கின்றன.
 
இந்தியாவில் பிரபிலமான நடனமான பரதம் போன்ற கலைகளில் பெரும்பாலானவை விக்கிரகக் கடவுளை பிரதிபலிக்கும் ஒரு வகை நடனம். கிறிஸ்தவர்கள் நிச்சயம் அதில் ஈடுபடக் கூடாது.
 
அப்படியென்றால் மேற்கத்திய நடனம் ஆடலாமா என்று கேட்கத்தூண்டும்.
 
நடனம் பொதுவாக வசீகரமானவை. தங்களது உடல் மொழியை, நளினத்தை மற்றவர்களுக்கு வெளிக்கொண்டு வர அதை பார்ப்பவர்களுக்கு சரீரத்தின் மீதான உணர்வை வெளிப்படுத்தும் ஒரு கலை அல்லவா?
 
ஒரு ஆண் தனது மனைவியுடன் தங்கள் வீட்டின் தனிமையில் நடனமாடுவதை பைபிள் கண்டிக்கவில்லை.
 
*நடனமாடலாமா? கூடாதா?*
நம் இதயங்களில் மற்றவர்களை இச்சையுடன் தூண்டுவது தவறு – மத். 5:28
மற்றவர்களிடம் இச்சைகளைத் தூண்டும் வகையில் நம்மை நடத்துவது தவறுஅது காமம்இது மாம்சத்தின் வேலையாகக் கண்டிக்கப்படுகிறது – கலா. 5:19-21
 
இரவு சென்றுபோயிற்றுபகல் சமீபமாயிற்றுஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டுஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்களியாட்டும் வெறியும்வேசித்தனமும் காமவிகாரமும்வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல்பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்துகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்ரோமர் 13:12-14


*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229

*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

வியாழன், 22 ஜனவரி, 2026

#1228 – தாவீதின் தாகத்தினிமித்தம் மூன்று பராக்கிரமசாலிகள் பெலிஸ்தரின் பாளையத்தினுள் சென்று பெத்லெகேமன் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலிருந்து கொண்டு வந்த தண்ணீரை ஏன் கர்த்தருக்கென்று தரையிலே ஊற்றினார்?

#1228 – *தாவீதின் தாகத்தினிமித்தம் மூன்று பராக்கிரமசாலிகள் பெலிஸ்தரின் பாளையத்தினுள் சென்று பெத்லெகேமன் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலிருந்து கொண்டு வந்த தண்ணீரை ஏன் கர்த்தருக்கென்று தரையிலே ஊற்றினார்?* 

அது எப்படி அந்த மனிதரின் இரத்தத்தைக் குடிக்கும் செயலாகும்? 

2 சாமுவேல் 23:15-17 “தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார் என்றான். அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்து போய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டு வந்தார்கள். ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்”. இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.  - இந்த பகுதியை விளக்கவும்.

*பதில் *: தாவீதின் ஊர் என்று அன்பாய் அழைக்கப்பட்ட பெத்லெகேமின் ஒலிமுகவாசலிலுள்ள கிணற்றின் தண்ணீரை குடிக்க ஆசைக் கொண்ட (1நாளா. 11:17) தங்களது ராஜாவின் விருப்பத்தை நிறைவேற்ற, போர் நடந்துக்கொண்டிருக்கும் அந்த சூழலிலும் (1நாளா. 11:14-16) அவனுடன் இருந்த மூன்று பராக்கிரமசாலிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் எதிரிகளின் பாளயத்தினுள் சென்று அந்த கிணற்றின் தண்ணீரை மொண்டு கொண்டு வந்தனர். 

ஒரு வேளை, அவர்கள் அங்கே எதிரிகளால் கொல்லப்பட்டிருந்தால், எதிரிகளின் பாளையத்தினுள் உள்ள கிணற்றுத் தண்ணீருக்காய் ஆசைப்பட்டதே அவர்களது உயிர் பறிபோனதன் காரணமாகிவிட்டிருக்கும்.

ஆகவே, அந்தத் தண்ணீர் 'இரத்தத்திற்கு' சமமாக தாவீது கருதினார்.  (1நாளா. 11:19, ரோ. 16:4, நியா. 5:18)

பெலிஸ்தியரின் பாளயத்தைத் தாண்டி, தன் உயிரைப் பணயம் வைத்து அந்த மூன்று வீரர்கள் பெத்லெகேம் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டு வந்த அந்த தண்ணீரை, வெறும் தண்ணீராகப் பார்க்கவில்லை; தன் வீரர்களின் தியாகத்தில் அதை அவர்களது உயிரான இரத்தமாய் பார்த்தார். ஏனெனில், மாம்சத்தின் இரத்தத்தில் உயிர் இருக்கிறது என்று லேவி. 17:11ல் காண்கிறோம்.

தாவீது அந்தத் தண்ணீரை வீணாகத் தரையில் ஊற்றவில்லை மாறாக கர்த்தருக்கென்று ஊற்றினான் என்பது, அதை ஒரு பலி போல தேவனுக்கு முன்பாக ஊற்றினார் என்பதாகும்.  (2 சாமுவேல் 23:16, 1நாளா. 11:18)

மிகத் தெளிவாய் வேதாகமம் இரத்தத்தை நாம் புசிக்கக்கூடாதென விளக்கியிருக்கிறது.

உபா. 12:16 - “இரத்தத்தை மாத்திரம் புசிக்க வேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்”. 

அப். 15:29 - “அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்”. 

வேதாகமக் காலத்தில், திராட்சரசத்தையோ அல்லது விலையுயர்ந்த பொருளையோ கர்த்தருக்குப் படைக்கும்போது அதைத் தரையில் பானபலியாக ஊற்றினார்கள். (ஆதியாகமம் 35:14, யாத்திராகமம் 29:40-41, எண்ணாகமம் 15:5, 7, 10, பிலிப்பியர் 2:17). ஊற்றப்பட்ட பொருளை மீண்டும் எடுக்க முடியாதபடி முழுமையாகக் கர்த்தருக்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது. தரையில் ஊற்றப்பட்டால் அதை மீண்டும் சேகரிக்க முடியாதே. 

ஆகவே, தாவீது அந்தத் தண்ணீரை தரையில் ஊற்றியது, "இது இனி எனக்குச் சொந்தமல்ல, இது தனது பராக்கிரமசாலிகளின் இரத்தம், அது கர்த்தருக்கே உரியது" என முழுமையாக ஒப்படைப்பதைக் குறிக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.blogspot.com
Print Friendly and PDF

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

#421 - அக்கினி போட்டு எரிக்க வந்தேன் என்கிறார் இயேசு? இயேசு கிறிஸ்து இந்த இடத்தில் சொல்லுகிற அக்கினி என்பதின் உண்மையான அர்த்தம் என்ன? இது யாரை குறிக்கும்?

#421 - *அக்கினி போட்டு எரிக்க வந்தேன் என்கிறார் இயேசு? இயேசு கிறிஸ்து இந்த இடத்தில் சொல்லுகிற அக்கினி என்பதின் உண்மையான அர்த்தம் என்ன? இது யாரை குறிக்கும்?*

 

*பதில்* : இங்கே, அக்கினி என்பது கருத்து வேறுபாடு மற்றும் சர்ச்சையை குறிக்கிறது. (மத். 10:34)

 

பாவத்தினால் உண்டாகும் அழிவின் தாக்கத்திலிருந்தும் உலகமுழுவதும் தங்கள் ஆதிக்கத்தை பரப்பும் முயற்சியிலிருக்கும் ரோமானியர்களினின்று உலகமானது விடுவிக்கப்படுவதையும் குறிப்பிடும் வண்ணம் இந்த இடத்திலும் மத்தேயுவிலும் இந்த வார்த்தைகள் குறிப்பிடப்படுகிறது.

 

இந்த இரண்டு புலன்களிலும் இந்த அக்கினி ஏற்கனவே எரிந்து கொண்டிருந்தது. இருப்பினும், அது ஒரு தீப்பொறியாக இருந்தது. ஆனால் விரைவில் அனைத்தையும் நுகரும் சுடராக வெடிக்கும் என்று விளக்குகிறார்.


*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF