#1233
– *யூதமார்க்கத்தமைந்தவர்கள் என்று
அப்போஸ்தலர் 2:10லும், கிரேக்கர்களின் விதவைகள் முறையாய்
விசாரிக்கப்படவில்லையென்று அப்போஸ்தலர் 6:1லும் சொல்லப்பட்டிருக்க, இரட்சிப்பு புறஜாதியினருக்கு முதன்முதலாக கொர்நெலியூ வழியாய் துவங்கியது என அப்போஸ்தலர் 10ம் அதிகாரத்தில் வரும் நிகழ்வை எவ்வாறு புரிந்துக்கொள்வது*?
*பதில்* : *“யூதமார்க்கத்தமைந்தவர்களும்”* என்றால் பூர்வத்தில் யூதர் அல்லாத புறஜாதியராக
இருந்தவர்கள், பின்னர் யூத மார்க்கத்தில் முறையாக
மாறி சேர்ந்தவர்கள். ஆங்கிலத்தில் இப்படிப்பட்டவர்களை “proselytes” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இவர்கள், யூத மார்க்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு மோசேயின்
நியாயப்பிரமாணத்தை பின்பற்றியவர்கள், ஆண்கள் விருத்தசேதனம் செய்துக் கொண்டவர்கள், யூத சமுதாயத்தில் மத ரீதியாக
ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் ஆவர்.
அதனால், இவர்கள் பிறப்பால் யூதர் அல்ல, ஆனால் மதத்தால் யூதர்.
ஆகவே அந்த வித்தியாசத்தை *“யூதரும்” மற்றும் “யூதமார்க்கத்தமைந்தவர்களும்”* என்று தனித்தனியாக சொல்லுகிறதை கவனிக்க முடியும்.
யூதர்கள் - யூத குடும்பத்தில் பிறந்தவர்கள், ரத்தத்தால் ஆபிரகாமின் சந்ததியினர், பிறப்பால் உடன்படிக்கைக்குள் உள்ளவர்கள், குழந்தை பருவத்திலிருந்தே நியாயப்பிரமாணத்தில்
வளர்ந்தவர்கள். இவர்கள் பிறப்பால் யூதர்.
யூதமார்க்கத்தமைந்தவர்களோ, பிறப்பால் புறஜாதியினர், பின்னர் யூத மதத்தில் சேர்ந்தவர்கள், மதமாற்றம் மூலம் உடன்படிக்கைக்குள் வந்தவர்கள்
அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம் *“50வது நாள் பண்டிகை என்ற
பெந்தெகொஸ்தே நாளைப்”* பற்றி பேசுகிறது.
அந்த பண்டிகையை அநுசரிக்க அந்நாளில் பல தேசங்களில் இருந்து மக்கள்
எருசலேமுக்கு வந்திருந்தார்கள். அதில் *“யூதர்களும் இருந்தார்கள். யூத
மார்க்கத்திற்கு மாறியவர்களும் இருந்தார்கள்”*.
1)
அப். 2:9-11 பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற *“ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்”*, கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
2)
அப். 10:44-46 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த *“விருத்தசேதனமுள்ள விசுவாசிகள்”* கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
*ஆகவே, நாம் இங்கே புரிந்துக்கொள்வதென்னவெனில்*:
கிறிஸ்துவின் ராஜ்யமான சபை ஸ்தாபிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவர் பூமிக்கு தந்தருளப்பட்ட அந்நாளில், யூதர்களுடன், யூதரல்லாத புறஜாதியினர் *“விருத்தசேதனம் செய்துக்கொண்ட”* பல பின்னணியிலிருந்த மக்களும் அங்கே இருந்தனர்.
அப். 2:9-11 பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற *“ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்”*, கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
அப். 10:44-46 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த *“விருத்தசேதனமுள்ள விசுவாசிகள்”* கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
கிறிஸ்துவின் ராஜ்யமான சபை ஸ்தாபிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவர் பூமிக்கு தந்தருளப்பட்ட அந்நாளில், யூதர்களுடன், யூதரல்லாத புறஜாதியினர் *“விருத்தசேதனம் செய்துக்கொண்ட”* பல பின்னணியிலிருந்த மக்களும் அங்கே இருந்தனர்.
அப்போஸ்தலர் 10-ல் *“விருத்தசேதனமில்லாத
புறஜாதியினருக்கும்”* கொர்நேலியு இரட்சிக்கப்பட்ட
சம்பவத்தில் சுவிசேஷம் சென்றது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Q&A Book ஆர்டர் செய்ய :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
-------------------------*
