வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

#1233 – யூதமார்க்கத்தமைந்தவர்கள் என்று அப்போஸ்தலர் 2:10லும், கிரேக்கர்களின் விதவைகள் முறையாய் விசாரிக்கப்படவில்லையென்று அப்போஸ்தலர் 6:1லும் சொல்லப்பட்டிருக்க, இரட்சிப்பு புறஜாதியினருக்கு முதன்முதலாக கொர்நெலியூ வழியாய் துவங்கியது என அப்போஸ்தலர் 10ம் அதிகாரத்தில் வரும் நிகழ்வை எவ்வாறு புரிந்துக்கொள்வது?

#1233 – *யூதமார்க்கத்தமைந்தவர்கள் என்று அப்போஸ்தலர் 2:10லும், கிரேக்கர்களின் விதவைகள் முறையாய் விசாரிக்கப்படவில்லையென்று அப்போஸ்தலர் 6:1லும் சொல்லப்பட்டிருக்க, இரட்சிப்பு புறஜாதியினருக்கு முதன்முதலாக  கொர்நெலியூ வழியாய் துவங்கியது என அப்போஸ்தலர் 10ம் அதிகாரத்தில் வரும் நிகழ்வை எவ்வாறு புரிந்துக்கொள்வது*?
 
*பதில்* : *“யூதமார்க்கத்தமைந்தவர்களும்”* என்றால் பூர்வத்தில் யூதர் அல்லாத புறஜாதியராக இருந்தவர்கள், பின்னர் யூத மார்க்கத்தில் முறையாக மாறி சேர்ந்தவர்கள். ஆங்கிலத்தில் இப்படிப்பட்டவர்களை “proselytes” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இவர்கள், யூத மார்க்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு மோசேயின் நியாயப்பிரமாணத்தை பின்பற்றியவர்கள், ஆண்கள் விருத்தசேதனம் செய்துக் கொண்டவர்கள்,  யூத சமுதாயத்தில் மத ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் ஆவர்.
 
அதனால், இவர்கள் பிறப்பால் யூதர் அல்ல, ஆனால் மதத்தால் யூதர்.
 
ஆகவே அந்த வித்தியாசத்தை *“யூதரும்” மற்றும் “யூதமார்க்கத்தமைந்தவர்களும்”* என்று தனித்தனியாக சொல்லுகிறதை கவனிக்க முடியும்.
 
யூதர்கள் - யூத குடும்பத்தில் பிறந்தவர்கள், ரத்தத்தால் ஆபிரகாமின் சந்ததியினர், பிறப்பால் உடன்படிக்கைக்குள் உள்ளவர்கள், குழந்தை பருவத்திலிருந்தே நியாயப்பிரமாணத்தில் வளர்ந்தவர்கள். இவர்கள் பிறப்பால் யூதர்.
 
யூதமார்க்கத்தமைந்தவர்களோ, பிறப்பால் புறஜாதியினர், பின்னர் யூத மதத்தில் சேர்ந்தவர்கள், மதமாற்றம் மூலம் உடன்படிக்கைக்குள் வந்தவர்கள்
 
அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம் *“50வது நாள் பண்டிகை என்ற பெந்தெகொஸ்தே நாளைப்”* பற்றி பேசுகிறது.
 
அந்த பண்டிகையை அநுசரிக்க அந்நாளில் பல தேசங்களில் இருந்து மக்கள் எருசலேமுக்கு வந்திருந்தார்கள். அதில் *“யூதர்களும் இருந்தார்கள். யூத மார்க்கத்திற்கு மாறியவர்களும் இருந்தார்கள்”*.
 
1)
அப். 2:9-11  பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற *“ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்”*, கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
 
2)
அப். 10:44-46 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த *“விருத்தசேதனமுள்ள விசுவாசிகள்”* கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
 
*ஆகவே, நாம் இங்கே புரிந்துக்கொள்வதென்னவெனில்*:
கிறிஸ்துவின் ராஜ்யமான சபை ஸ்தாபிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவர் பூமிக்கு தந்தருளப்பட்ட அந்நாளில், யூதர்களுடன், யூதரல்லாத புறஜாதியினர் *“விருத்தசேதனம் செய்துக்கொண்ட”* பல பின்னணியிலிருந்த மக்களும் அங்கே இருந்தனர்.
 

அப்போஸ்தலர் 10-ல் *“விருத்தசேதனமில்லாத புறஜாதியினருக்கும்”*  கொர்நேலியு இரட்சிக்கப்பட்ட சம்பவத்தில் சுவிசேஷம் சென்றது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Q&A Book ஆர்டர் செய்ய :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

-------------------------*


Print Friendly and PDF

#1232 - அன்பு - எத்தனை வகையான அன்புள்ளது? அதில் தேவன் நம்மீது பாராட்டின அன்பு (அகாபே) பற்றி விளக்கவும்.

#1232 - *அன்பு - எத்தனை வகையான அன்புள்ளது? அதில் தேவன் நம்மீது பாராட்டின அன்பு (அகாபே) பற்றி விளக்கவும்*.

*பதில்* : வேதாகமத்தில் “அன்பின் வகைகள்” என்று நேராக பட்டியலிடப்படவில்லை. 
ஆனால் மூல பாஷைகளில் எழுதப்பட்ட வகையில் கவனிக்கும்பொழுது கிரேக்கம் மற்றும் எபிரேய மொழிகளில் பயன்படுத்தப்பட்ட சொற்களின் அடிப்படையில், பொதுவாக *4 வகையான அன்புகள்* குறிப்பிடப்படுகின்றன.

1. *அகாபே (Agape – ἀγάπη)* – நிபந்தனையற்ற தேவ அன்பு / தியாகமான, சுயநலமற்ற அன்பு / மனிதருக்கு தேவன் காட்டும் அன்பு.

2. *பிலேயோ (Phileo – φιλέω)* – சகோதர அன்பு / நண்பர்கள் இடையிலான பாச அன்பு / நெருக்கமான உறவு மற்றும் நட்பு.

3. *ஸ்டோர்கே (Storge – στοργή)* – குடும்ப அன்பு / பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இடையிலான இயற்கையான அன்பு / குடும்ப பாசம்

4. *ஈரோஸ் (Eros – ἔρως)* – தாம்பத்திய / காதல் அன்பு / கணவன்–மனைவி இடையிலான காதல் 
“ஈரோஸ்” என்ற சொல் நேராக புதிய ஏற்பாட்டில் இல்லை, ஆனால் காதல் அன்பு விளக்கப்பட்டுள்ளது.

*விளக்கம்:*
*அகாபே* என்ற அன்பின் வகையை 1 கொரிந்தியர் 13:4-7-ல் பவுல் பதினைந்து பண்புகளை பட்டியலிடுகிறார்:

அன்பு பொறுமையுள்ளது: நீடிய பொறுமை
அன்பு இரக்கமுள்ளது: கிருபையானது
அன்பு பொறாமைப்படாது: பொறாமைப்படாது
அன்பு பெருமை பாராட்டாது: பெருமை கொள்ளாது
அன்பு முரட்டுத்தனமானது அல்ல: அநாகரீகமானது
அன்பு அதன் சொந்த வழியில் வற்புறுத்தாது: சுயநலம் தேடாது
அன்பு எரிச்சலடையாது: எளிதில் கோபப்படாது
அன்பு கோபப்படுவதில்லை: கசப்பில்லாதது
அன்பு தவறுகளில் மகிழ்ச்சியடையாது: பாவத்தில் மகிழ்ச்சியடையாது
அன்பு சத்தியத்தில் மகிழ்ச்சியடைகிறது: சத்தியத்தில் மகிழ்ச்சியடைகிறது
அன்பு எல்லாவற்றையும் தாங்குகிறது: ஒன்று தாங்குகிறது அல்லது பாதுகாக்கிறது (“ஸ்டெஜி”க்கு இரண்டு அர்த்தங்களும் உள்ளன)
அன்பு எல்லாவற்றையும் நம்புகிறது: இழிவானது அல்ல
அன்பு எல்லாவற்றையும் நம்புகிறது: நம்பிக்கையானது
அன்பு எல்லாவற்றையும் தாங்குகிறது: விடாமுயற்சியுடன் இருக்கிறது

*அகாபே* தேவனுக்காகவே பயன்படுத்தப்படுகிறது (1 யோவான் 4:8), ஏனெனில் அது அவருடைய சாரத்தை வரையறுக்கிறது. இது குமாரன் (யோவான் 3:35), திருச்சபை (2 தெசலோனிக்கேயர் 2:16) மற்றும் உலகம் (யோவான் 3:16) மீதான அவரது அன்பில் காணப்படுகிறது. 

ஒரு மனிதன் தனது மனைவி (எபேசியர் 5:25), தனது அண்டை வீட்டார் (ரோமர் 13:9) மற்றும் தனது எதிரிகள் (மத்தேயு 5:44) மீதான அன்பைக் குறிக்கவும் அகாபே பயன்படுத்தப்படுகிறது. 

அகாபே என்பது முதல் "ஆவியின் கனி" (கலாத்தியர் 5:22) மற்றும் கடைசி "கிறிஸ்தவ கிருபை" (2 பேதுரு 1:7) ஆகும்.

கிறிஸ்தவர்கள்:
"அன்பைப் பின்தொடர வேண்டும்" (1 கொரிந்தியர் 14:1), 
"அன்பிலே ஒருவரையொருவர் தாங்கிக்கொள்ள வேண்டும்" (எபேசியர் 4:2), 
"அன்பிலே சத்தியத்தைப் பேச வேண்டும்" (எபேசியர் 4:15), 
"அன்பிலே நடக்க வேண்டும்" (எபேசியர் 5:2), 
"ஒரே அன்பைக் கொண்டிருங்கள்" (பிலிப்பியர் 2:2), 
“அன்பில் பிணைக்கப்பட்டிருங்கள்" (கொலோசெயர் 2:2), 
"அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்" (கொலோசெயர் 3:14), 
"அன்பில் பலுகிப் பெருகுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 3:12), 
"அன்புள்ளவர்களாக ஒருவரையொருவர் தூண்டிவிடுங்கள்" (எபிரெயர் 10:24) 
என பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும், பேதுரு தனது முதல் நிருபத்தில் "ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூறுங்கள்” என்றும் (1 பேதுரு 1:22) மற்றும் "ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்" (1 பேதுரு 4:8) என்று எழுதுகிறார். 

இரண்டு இடங்களிலும், "ஊக்கமான" என்ற வார்த்தையின் அர்த்தம் "ஆளமானது". 

*ஐக்கியம்*:
உள்ளூர் சபைகளில் ஒற்றுமைக்கு அன்புதான் திறவுகோல், ஏனெனில் அது "ஒருவருக்கும் தீங்கு செய்யாது" (ரோமர் 13:10). அன்பு அதிகமாக இருக்கும் இடத்தில், புறங்கூறுதல், கசப்பு அல்லது கொடுமைப்படுத்துதல் இருக்காது. எந்த மனக்கசப்பு, கேலி அல்லது போட்டி இருக்காது. நல்லெண்ணம் மட்டுமே இருக்கும். ஒவ்வொரு உறுப்பினரும் "கனம் காட்டுவதில் ஒருவரையொருவர் மிஞ்சுவார்கள்" (ரோமர் 12:10). "தனது சொந்த நலன்களை மட்டுமல்ல, மற்றவர்களின் நலன்களையும் நோக்குவார்கள்" (பிலிப்பியர் 2:4).

அன்பு மிக முக்கியமானது என்பதை இயேசு அறிந்திருந்தார் (மத்தேயு 22:37-40). 
அவர் நம்மை நேசித்தார், நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் (யோவான் 15:12). 

மேலும், அன்பு நாம் செய்யும் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும் (1 கொரிந்தியர் 13:1-3). 

அன்பு உண்மையான சீஷத்துவத்தின் அடையாளம் என்று கூறப்படுகிறது. 
அன்பில், நமது அடையாளம் எப்போதும் இருப்பதையும் எப்போதும் "உண்மையானது" (ரோமர் 12:9) என்பதிலும் உறுதியாய் நிற்போம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229

கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:

எமது வலைதளம்
Print Friendly and PDF

புதன், 11 பிப்ரவரி, 2026

#1231 - குழந்தைகள் கண்களுக்கு தேவன் தெரிகிறாரா? அவர்கள் தனியே சிரிப்பது தேவன் சிரிக்க வைக்கிறாரா?

*#1231 - குழந்தைகள் கண்களுக்கு தேவன் தெரிகிறாரா? அவர்கள் தனியே சிரிப்பது தேவன் சிரிக்க வைக்கிறாரா?*
 
பதில் : பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்” (சங். 127:3) என்று வேதாகமம் கூறுகிறது. அதனால், குழந்தைகள் தூக்கத்தில் அல்லது தனியே சிரிக்கும் போது, “தேவன் அவர்களை சிரிக்க வைக்கிறார்” என்று சிலர் கூறுவதை நாமும் கேட்டிருக்கலாம்.
 
ஒரு குழந்தையின் சிரிப்பை தேவனின் ஆசீர்வாதத்தின் அடையாளம் என்று சிலர் நம்புகிறார்கள்.
 
மேலும், சங்கீதம் 139:13–15 வசனங்களை வாசிக்கும் போது, தேவன் கருவிலிருந்தே மனிதனை அற்புதமாக உருவாக்கினார் என்பதால், குழந்தையின் இத்தகைய மகிழ்ச்சி வெளிப்பாடும் தேவனின் படைப்பின் அதிசயமாக இருக்கிறதோ என சிந்திக்கத் தோன்றலாம்.
 
ஆனால், குழந்தைகள் இவ்வாறு சிரிப்பதைக் குறித்து வேதாகமம் நேரடியாக எவ்வித தொடர்பும் காட்டவில்லை.
 
நமது புரிதலுக்காய், அறிவியில் ரீதியான பதிலையும் இங்கு பதிவிடுகிறேன்.
 
புதிய பிறந்த குழந்தைகள் தங்களுடைய தூக்க நேரத்தின் சுமார் 50% REM (Rapid Eye Movement) உறக்கத்தில் செலவிடுகின்றனர். இதை “Active Sleep” என்றும் அழைக்கப்படுகிறது.
 
இந்த நிலையில்:
மூளை மிகவும் செயலில் இருக்கும்
முக அசைவுகள், புன்னகை, சிரிப்பு, சுணுக்கு (twitching) போன்றவை நிகழலாம்
நரம்பு இணைப்புகள் (neural connections) உருவாகிக் கொண்டிருக்கும்
 
பிறந்த முதல் சில வாரங்களில் காணப்படும் இத்தகைய புன்னகை:
பிறந்த குழந்தையின் அனிச்சை புன்னகை (Neonatal Reflex Smile),  தன்னிச்சையான புன்னகை (Spontaneous Smile), அல்லது உட்புற புன்னகை (Endogenous Smile) என மருத்துவத்தில் அழைக்கிறார்கள்.
 
இவ்வகை சிரிப்பு உணர்ச்சி சார்ந்தது அல்ல. இது ஒரு பிரதிபலிப்பு எதிர்வினை (reflex response) மாத்திரமே. அதாவது தன்னிச்சையான நரம்பு மண்டல செயல்பாடு (automatic nervous system activity) மட்டுமே.
 
குழந்தையின்:
மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System), உணர்ச்சி மையம் (Limbic System), மூளைத்தண்டு (Brainstem) வளர்ச்சியடையும் போது தன்னிச்சையான முக அசைவுகள் ஏற்படலாம்.
 
சில சமயங்களில் சிரிப்புடன் சேர்ந்து கை/கால் துடிப்பு இருந்தால், அது Benign Neonatal Sleep Myoclonus எனப்படும் ஒரு பாதிப்பு இல்லாத (harmless) தூக்க நிலையாக இருக்கலாம். ஆனால், உடல் இறுக்கம், கண்கள் நிலைத்து போதல், அல்லது அசாதாரண அசைவுகள் தொடர்ச்சியாக இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் :

Q&A Book ஆர்டர் செய்ய :

வலைதளம் :

YouTube “வேதம் அறிவோம்” :
 

Print Friendly and PDF

சனி, 7 பிப்ரவரி, 2026

#1230 – கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராயிருக்கிறார் என்று கிறிஸ்து சொல்லியிருக்க, போதகர் என்று தங்களை அடையாளப்படுத்துவது சரியா தவறா?

#1230 –  *கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராயிருக்கிறார் என்று கிறிஸ்து சொல்லியிருக்கபோதகர் என்று தங்களை அடையாளப்படுத்துவது சரியா தவறா?*
 
*பதில்:*
இந்த கேள்விக்கான பதிலுக்கு செல்வதற்கு முன்னர்பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களை புரிந்துக்கொள்வது அவசியம்.
 
பிரஸ்பூடிரோஸ் என்கிற வார்த்தைக்கு – மூப்பர் என்றும்;
பொய்மென் என்கிற வார்த்தைக்கு – பாஸ்டர் அல்லது மேய்ப்பர் என்றும்;
எபிஸ்கோபஸ் என்கிற வார்த்தைக்கு – கண்காணி என்றும் பொருள்.
 
மேலே சொல்லப்பட்ட மூன்று வார்த்தைகளும் ஒரே பொறுப்பையே குறிக்கின்றன.

Pastor (போதகர்/மேய்ப்பர்) / Elder (மூப்பர்) / Bishop (கண்காணி) – இம்மூன்றும் ஒரே அர்த்தங்கள் உடையவை.
 
ஒரே பொறுப்பைக் குறிக்கும் மூன்று வெவ்வேறு வார்த்தைகளேயன்றிதனித் தனிப் பொறுப்புகளை அல்ல.
 
அப். 20:17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பிசபையின் *“மூப்பரை”* வரவழைத்தான்.
 
அப். 20:28; ஆகையால்உங்களைக்குறித்தும்தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை *“மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக”* வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும்எச்சரிக்கையாயிருங்கள்.
 
இதன்மூலம்வேதாகமம் *“மூப்பர் – மேய்ப்பர் – கண்காணி”* என்பதை ஒரே குழுவினருக்குப் பயன்படுத்துவதை தெளிவாகக் காணலாம்.
 
மேலும்பேதுரு தனது நிருபத்தில் எழுதும் போது இந்த வார்த்தைகளை ஒரே அர்த்தத்தில் எழுதுவதை கவனிக்கவும்.
 
1பேதுரு 5:1-3 உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும்கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும்இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவென்றால்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் *“மேய்த்து”*,  கட்டாயமாய் அல்லமனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்லஉற்சாக மனதோடும்சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்லமந்தைக்கு மாதிரிகளாகவும், *“கண்காணிப்பு”* செய்யுங்கள்.
 
பாஸ்டர் / போதகர் / பிஷப் / கண்காணிஅல்லது ரபீ / ரபூனி என்பவை யூத போதனைச் சூழலில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் என்றாலும்அவையும் “போதனை அதிகாரம்” என்ற ஒரே கருத்தையே குறிக்கின்றன. செயல்படும் பொறுப்பின் / வேலையின் பெயர்களே.
 
*கிறிஸ்தவர்கள்மற்றவர்களைக் காட்டிலும் தங்களை வேறுப்படுத்திக் காண்பிக்க இடம் இல்லை என்பதால் பட்டங்களாக எதையும் வைத்து தங்களை தனித்துவமாக்க இடமில்லை.*
 
உலகத்தார் தங்கள் வேலையைக் குறிக்கும் பட்டங்களான டாக்டர்எஞ்சினியர்கலெக்டர் போன்றுகிறிஸ்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னதாக *“ஊழியர்கனத்திற்குறிய ஊழியர்போதகர், பாஸ்டர்பிஷப்ரெவரென்டு,”* போன்ற பட்டங்களை போட்டுக்கொள்ள வேதம் அனுமதிக்கவில்லை.  வசனத்தின் படி அனைவரும் *“சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும்”*.  மத். 23:8.
 
இக்காலங்களில், *“சகோதரர்”* என்ற சொல்லே கூட சில இடங்களில் ஒரு பதவியாகப் பயன்படுத்தப்படுவது போல் தோன்றுகிறது.
 
மருத்துவரை டாக்டர் என்று அழைப்பதும்கலெக்டர்இஞ்சினியர்மேனேஜர் போன்று அழைப்பது போலகுப்பை சுத்தம் செய்பவர்செறுப்பு தைப்பவர்முடி வெட்டுபவரது தொழிலை சொல்லி அழைப்பார்களோஏற்றத்தாழ்வை அங்கே அடையாளப்படுத்துவதை உணர முடிகிறதல்லவாஇதன்மூலம்சமுதாயத்தில் தொழில்கள் கூட மதிப்பீட்டின் அடிப்படையில் அழைக்கப்படுவதைக் காண்கிறோம்.
 
இப்படி எவ்வகை வித்தியாசத்தையும் காண்பிக்க கிறிஸ்தவத்தில் இடமில்லாததால் *“சகோதரர் என்றே நாம் அழைக்கப்படவேண்டும்”* என இயேசு கிறிஸ்து போதித்தார்.
 
மற்றவரை விட நம்மை எந்த வகையிலும் உயர்ந்தவராய் அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடாது. பிலி. 2:3
 
 
மேலும்கிறிஸ்துவின் சகோதரரானயாக்கோபு மீண்டும் தன் நிரூபத்தில் அதை குறித்து எச்சரிக்கிறார். யாக். 3:1
 
 
ஏறத்தாழ 90 வயது நிரம்பிய கிழவனான யோவான் அப்போஸ்தலன் கூட உணர்ச்சி வசப்பட்டு தேவதூதனுடைய காலில் இரண்டாவது முறையும் விழ நேர்ந்தது. 
 
வெளி. 19:10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.”
 
வெளி. 22:8-9 யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோதுஇவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும்இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்தேவனைத் தொழுதுகொள் என்றான்.”
 
தனது தவறை அவர் மறைக்காமல் அப்படியே தனது நிரூபத்தில் எழுதியும் வைத்திருப்பது நமக்கு எவ்வளவு பெரிய பாடம்?
 
 போதகர் என்றும் ஆண்டவர் என்றும் கிறிஸ்து குறிக்கப்பட்டிருக்கிறார். (யோ. 13:13).

நம்மை நாமே கிறிஸ்துவிற்கு இணையாக உயர்த்திக் காண்பிக்க முடியுமோ?
 
கீழ்கண்ட வார்த்தைகளையும் கவனிப்பது நமக்கு கூடுதல் புரிதலையும் தரும்:
 
*சுவிசேஷகர்:*
"சுவிசேஷகர்" என்ற வார்த்தை போர்க்களத்திலிருந்து வெற்றியின் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டுவரும் நபரைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நபர் என்ன செய்கிறார் என்பதைக் குறிக்க அதே வார்த்தை பயன்படுத்தப்படும்போதுஅது பெரும்பாலும் ரோமர் 1:15 இல் உள்ளதைப் போல "சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. அப்படியானால்ஒரு சுவிசேஷகர் என்பது உலகிற்கு நற்செய்தியைக் கொண்டுவரும் நபர்.
 
*பிரசங்கியார்:*
சுவிசேஷகர் என்ற அதே வேலையை "பிரசங்கிப்பது" என்றும் அழைக்கப்படுகிறது.
ரோமர் 1:15-ல் ரோமில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க (சுவிசேஷம் அறிவிக்க) தான் ஆர்வமாக இருப்பதாக பவுல் கூறினார். 2கொரிந்தியர் 1:19-ல்பவுல்சில்வானுவும் மற்றும் தீமோத்தேயு ஆகியோர் கொரிந்துவில் பிரசங்கித்ததாகக் கூறினார்.
 
1தீமோத்தேயு 2:7-ல்பவுல் தான் ஒரு அப்போஸ்தலனாகவும் பிரசங்கியாகவும் நியமிக்கப்பட்டதாகக் கூறினார்.
 
"பிரசங்கிப்பவர்" என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல்ஒரு அறிவிப்பாளர் அல்லது பிரசங்கிப்பவர் என்பதற்கான கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. அத்தகைய நபர் ராஜாவின் செய்திகளையும் கட்டளைகளையும் வழங்கினார்.
பிரசங்கியாளர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்ல
பிரசங்கியாளர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்லஆனால் அதை வழங்குபவர் மட்டுமே”.
 
*ஊழியர்/Minister:*
அதே வேலைக்கு மற்றொரு சொல் ஊழியம்.
ஊழியக்காரன் என்ற இந்த வார்த்தை வேலைக்காரன் என்பதற்கான கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது.
 
ரோமர் 15:15-16 “அப்படியிருந்தும்சகோதரரேபுறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டுதேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்குநான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டுதேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன்."
 
எபேசியர் 3:6-7 “இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோலமுற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்”.
 
ஒரு ஊழியர் தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதன் மூலம் கிறிஸ்துவுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை (ஊழியம்) செய்கிறார்.
 
*ஆசிரியர்/Teacher:*
"ஆசிரியர்" என்ற சொல் ஒரு பயிற்றுவிப்பாளரைக் குறிக்கிறது.
ஒரு ஆசிரியரின் பணி தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குவதாகும்.

பொதுவாக
ஒரு ஆசிரியரின் பணி தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குவதாகும்.
பொதுவாகதேவனது வார்த்தைகளைப் பற்றி மேலும் அறிய விரும்பும் மக்களுக்கு  ஒரு ஆசிரியர் அறிவுறுத்துகிறார். எனவேஇது கற்பிப்பதையும் உள்ளடக்கியது.

ஆசிரியர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்ல

ஆசிரியர் என்பவர் ”செய்தியைத் தோற்றுவித்தவர் அல்லஆனால் அதை எடுத்து அறிவுறுத்தி வழங்குபவர் ஆவார்”.
 
*ரபீ / போதகர்:*
ரபி என்ற எபிரேய வார்த்தைக்கு போதகர் என்று அர்த்தம். யோவான் 1:38; 3:2
போதகர் / ரபீ என்பவர் தான் சொல்லும் போதகத்திற்கு அவரே மூலமானவர்அவரே அந்த கருத்திற்கு அதிகாரிதலைவர். போதகர் என்ற சொல்போதனை அதிகாரம் கொண்டவரைக் குறித்தாலும்முழுமையான போதனை அதிகாரம் கிறிஸ்துவுக்கே உரியது.
 
*கடைசியாக:*
சமீபகாலமாககிறிஸ்துவின் சபையில் “போதகர்” என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு கலாச்சாரம் உருவாகி வளர்ந்து வருகிறது. இது வேதாகமத்தின் அடிப்படையில் கிறிஸ்தவர்களால் அனுமதிக்கப்படக் கூடாததும்திருத்தப்பட வேண்டியதுமாகும்.
 
வேதாகமத்தின்படிமற்றவர்களைக் காட்டிலும் தங்களை உயர்த்திக் காண்பிக்கவோபட்டங்களின் மூலம் தனித்துவப்படுத்திக்கொள்ளவோ கிறிஸ்தவர்களுக்கு இடம் இல்லை.
 
அத்தகைய அடையாளப்படுத்தல்களில் விருப்பம் கொள்பவர்கள்கிறிஸ்து போதித்த தாழ்மை மற்றும் சகோதரத்துவத்தின் வழியிலிருந்து விலகிச் செல்லும் அபாயம் இருப்பதை உணர வேண்டும்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
   
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்ய வேண்டி
ய லிங்க்:* https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 
*Website:* http://www.kaniyakulamcoc.wordpress.com
 
*YouTube Channel:* https://www.youtube.com/joelsilsbee
-------------------------
Print Friendly and PDF