திங்கள், 27 ஜூலை, 2026

#1244 - முதல் உடன்படிக்கையின் காலத்திற்கு முன்பு மரணத்திற்கு பின்னான வாழ்க்கை எங்கு செல்ல வேண்டும் என்பது எப்படி கணக்கிடப்பட்டது?

 *#1244 - முதல் உடன்படிக்கையின் காலத்திற்கு முன்பு மரணத்திற்கு பின்னான வாழ்க்கை எங்கு செல்ல வேண்டும் என்பது எப்படி கணக்கிடப்பட்டது?*
 
*பதில்* : இரட்சிப்பு எப்போதும் விசுவாசத்தினால்தான். ஆதியாகமம் 15:6
 
லூக்கா 16:19-31ன்படி ஏழை லாசரு ஆபிரகாமின் மடி (பரதீசு) சென்றான். ஐசுவரியவான் வேதனையான (பாதாளம்) இடத்திற்குச் சென்றான். இரண்டிற்கும் இடையில் பெரிய பிளவு இருந்தது.
 
இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த பிறகு இரட்சிப்பு முழுமையாக நிறைவேற்றப்பட்டது.
 
எபிரெயர் 9:15 - முதல் உடன்படிக்கையின் கீழிருந்த மீறுதல்களுக்காகவும் மீட்பை உண்டாக்கினார். அதாவது, இயேசுவின் சிலுவை பலியானது எதிர்கால மக்களுக்காக மட்டும் அல்ல, அவருக்கு முன்பு விசுவாசத்தில் வாழ்ந்தவர்களுக்கும் பொருந்தியது.
 
எபிரெயர் 11 இதை உறுதிப்படுத்துகிறது. அங்கே ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள், மோசே மற்றும் தாவீது அனைவரும் "விசுவாசத்தினாலே" நீதிமான்களாகக் கருதப்பட்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.
 
மேலும், எபிரெயர் 11:39-40ல் நாம் காண்பது “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்."
இது, பழைய ஏற்பாட்டு விசுவாசிகளின் இரட்சிப்பும் இறுதியில் கிறிஸ்துவின் கிரியையிலேயே நிறைவேறியது என்பதை காட்டுகிறது.
 
ஆகவே, சிலுவைக்கு முன்னரும், விசுவாசத்தினால் மரித்தவர்கள் பரதீசிற்கும், விசுவாசியாதவர்கள் பாதாளத்திற்கும் போவது ஊர்ஜிதமாகிறது. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +918144776229 (India) 
 
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய* :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
Print Friendly and PDF

திங்கள், 11 மே, 2026

#1243 – கி.பி. 33-ஆம் ஆண்டில் திருச்சபை/இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை வரலாற்று வரிசைப்படி காண முடியுமா?

*#1243 – கி.பி. 33-ஆம் ஆண்டில் திருச்சபை/இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை வரலாற்று வரிசைப்படி காண முடியுமா?*
 
*பதில்* : கதையோ கற்பனையாகவோ அல்ல, வேதாகம நிகழ்வுகள் அனைத்தும் உண்மையானவை என்பதால், வரலாற்று ரீதியாக துல்லியமாக கணக்கிட முடியும்.
 
கிறிஸ்துவின் பிறப்பு, சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவை வெறும் மதக் கதைகள் அல்ல; அவை வரலாற்று உண்மைகள்.
 
சுமார் கி.பி 33ம் ஆண்டில் அதாவது நியாயப்பிரமாணத்தின்படி யூதர்களின் பண்டிகையான பஸ்கா பண்டிகைக்கு பின் வந்த 50-வது நாளான பெந்தெகோஸ்தே நாளில் உலக இரட்சகர் இயேசு கிறிஸ்து தமது இராஜ்யத்தை / புதிய ஏற்பாட்டுச் சபை வெளிப்படையாக ஆரம்பமான / ஸ்தாபித்த நிகழ்வை அப்போஸ்தலர் நடபடிகள் 2ம் அதிகாரத்தில் காணமுடிகிறது.
 
தானியேல் துவங்கி அப்போஸ்தலர் 2ம் அதிகாரம் அதாவது கி.பி 33ம் ஆண்டு வரையிலான காலவரிசையை கீழே பட்டியலிடுகிறேன்:
 
1- தானியேல் புத்தகம் — நேபுகாத்நேசரின் யூதா மீதான படையெடுப்பின் போது தானியேல் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டார் (கி.மு. சுமார் 605) — தானியேல் 1:1–6; 2 இராஜாக்கள் 24:1–2.
 
2- பாபிலோனிய சிறையிருப்பின் போது தானியேல் பாபிலோனிய அரசவையில் பணியாற்றினார் (கி.மு. 605–539) — தானியேல் 1–6.
 
3- பாபிலோனால் எருசலேமும் தேவாலயமும் அழிக்கப்பட்டது (கி.மு. 586) — 2 இராஜாக்கள் 25:1–10; எரேமியா 39:1–10.
 
4- நாடுகடத்தப்பட்ட காலத்தில் எசேக்கியேல், எரேமியா, மற்றும் தானியேல் ஆகியோரின் ஊழியங்கள் (கி.மு. சுமார் 626–530; இடையிடையே நிகழ்ந்த ஊழியங்கள்) — எரேமியா 1:1–3; எசேக்கியேல் 1:1–3; தானியேல் 1:1–6.
 
5- பெல்ஷாத்சார் ஆட்சியும் பாபிலோனின் வீழ்ச்சியும் (கி.மு. சுமார் 553–539) — தானியேல் 5.
 
6- யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி, பாரசீக ஆட்சியின் கீழ் ஆலயத்தை மீண்டும் கட்டத் தொடங்கினர் (கி.மு. 538–536) — எஸ்ரா 1:1–5; எஸ்ரா 3:8–13.
 
7- ஆலயத்தை மீண்டும் கட்ட முதலாம் தரியுவின் இரண்டாவது ஆணை; ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது (கி.மு. 520–516) — எஸ்ரா 6:1–15; ஆகாய் 1:1–15.
 
8- எஸ்ரா இரண்டாவது குழுவை எருசலேமுக்குத் திரும்ப அழைத்துச் செல்கிறார் (கி.மு. சுமார் 458) — எஸ்ரா 7:1–10.
 
9- முதலாம் அர்தசஷ்டா, எருசலேமின் மதில்களை மீண்டும் கட்ட நெகேமியாவை நியமிக்கிறார் (கி.மு. 445) — நெகேமியா 2:1–8.
 
10- எருசலேமின் நகர மதில் கட்டி முடிக்கப்பட்டது (கி.மு. சுமார் 444) — நெகேமியா 6:15–16.
 
11- மகா அலெக்சாண்டர் எருசலேமுக்கு வருகை தந்த பிறகு (கி.மு. 332) யூதர்கள் கிரேக்க/மக்கதோனியா ஆட்சியின் கீழ் வந்தனர் — இது தானியேல் 8:5–8, 21 உடன் தீர்க்கதரிசன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது.
 
12- யூதேயா தாலமிகளாலும் (Ptolemies) (கி.மு. 323–198), பின்னர் செலூக்கிய சிரியர்களாலும் (Seleucid Syrians) (கி.மு. 198–167) ஆளப்பட்டது — தானியேல் 11:5–20.
 
13- நான்காம் அந்தியோகஸ் எப்பிபானஸின்  (Antiochus IV Epiphanes) கீழ் துன்புறுத்தல் (கி.மு. 175–164) — தானியேல் 8:9–14; 11:21–35.
 
14- யூதாஸ் மக்கபேயு தலைமையிலான மக்கபேயர் கிளர்ச்சி /  Maccabean Revolt led by Judas Maccabeus (கி.மு. 167–160) — தானியேல் 11:32–35-க்கான பின்னணி.
 
15- பொம்பேயு (Pompey) நகரைக் கைப்பற்றிய பிறகு ரோம் எருசலேமைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது (கி.மு. 63) — தானியேல் 2:40; 7:7 உடன் தீர்க்கதரிசன ரீதியாகத் தொடர்புடையது.
 
16- ஏரோது மகா ராஜா ஆட்சி செய்து ஆலயத்தைப் புனரமைத்தார் (கி.மு. 37–4) — மத்தேயு 2:1–18; யோவான் 2:20.
 
17- யோவான் ஸ்நானனின் பிறப்பு (சுமார் கி.மு. 5–4) — லூக்கா 1:5–25; 57–80.
 
18- இயேசு கிறிஸ்துவின் பிறப்பு (சுமார் கி.மு. 4–3) — மத்தேயு 1:18–25; லூக்கா 2:1–20.
 
19- கிறிஸ்துவின் ஊழியமும் சிலுவை மரணமும் (கி.பி. 30–33) - மத்தேயு 27; மாற்கு 15; லூக்கா 23; யோவான் 19.
 
20- இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அப்போஸ்தல ஊழியம் தொடங்குகிறது (கி.பி. 30–33) — மத்தேயு 28:18–20; அப்போஸ்தலர் 1:1–11.
 
21- ஸ்தேவான் கல்லெறியப்பட்டதும், அப்போஸ்தலனாகிய பவுல் மனந்திரும்பியதும் (கி.பி. 34–36) — அப்போஸ்தலர் 7:54–60; அப்போஸ்தலர் 9:1–19.
 
22- அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 2: பெந்தேகோஸ்தே, பரிசுத்த ஆவியின் வருகை, மற்றும் திருச்சபையின் தொடக்கம் (கி.பி. 33) — அப்போஸ்தலர் 2:1–47.
 
பி.கு: கிறிஸ்து பிறப்பு எவ்வாறு கிமு 4-3 என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான விளக்கத்தையும் கீழே பதிவிடுகிறேன்:
 
“கி.மு / கி.பி” (BC / AD) ஆண்டுக்கணக்கானது, இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இந்த கணக்கை அமைத்தவர் Dionysius Exiguus என்பவர். அவர் ஆண்டுகளை கணக்கிடும்போது சிறிய தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
 
அதனால் தான் பல அறிஞர்கள் இயேசுவின் பிறப்பை கி.மு. 6–4 காலப்பகுதியில் வைத்துக் கணக்கிடுகிறார்கள்.
 
இதற்கான முக்கிய காரணங்கள்:
 
பெரிய ஏரோது எனப்படும், Herod the Great வாழ்ந்த காலத்தில்தான் இயேசு பிறந்தார் என்று மத்தேயு 2-ம் அதிகாரம் கூறுகிறது. வரலாற்று ஆதாரங்களின்படி ஏரோது ராஜா கி.மு. 4-ல் இறந்தார்.
இயேசு பிறந்த பிறகு தான் ஏரோது பெத்லகேமில் குழந்தைகளை கொல்ல உத்தரவிட்டார். ஆகையால் இயேசுவின் பிறப்பு ஏரோது இறப்பதற்கு முன்பாகவே நடந்திருக்க வேண்டும்.
 
வேதாகம ஆதாரங்கள்:
 
மத்தேயு 2:1 - “ஏரோது ராஜாவின் நாட்களில் இயேசு பிறந்தார்.”
லூக்கா 1 – யோவான் ஸ்நானன் மற்றும் இயேசுவின் பிறப்புகளை இணைக்கிறது.
லூக்கா 2:1–2 - அகஸ்து ராயனின் கணக்கெடுப்பு பற்றிக் கூறுகிறது.
 
எனவே:
“யோவான் ஸ்நானனின் பிறப்பு — சுமார் கி.மு. 5–4”
“இயேசு கிறிஸ்துவின் பிறப்பு — சுமார் கி.மு. 4–3”
 
இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்தது மெய்யான காரியம். 
அவர் மீண்டும் வருவதும் நிச்சயம்.
ஆகவே, நமது பாவங்களை மன்னித்து மீட்டெடுக்க வந்த இரட்சகரை உண்மையாய் பற்றிக்கொண்டு நமது நித்திய வாழ்வை சுதந்தரிப்போம். கற்பனை கதைகளை நித்தியமான நரகத்தினுள் நுழைந்து விட வேண்டாம்! 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2



-------------------------*
Print Friendly and PDF

சனி, 2 மே, 2026

#409 - கர்த்தருக்கு பிரியமாய் வாழ்வது எப்படி? நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…

 #409 - *கர்த்தருக்கு பிரியமாய் வாழ்வது எப்படி? நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது  என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்*…

 

*பதில்* : இந்த கேள்விக்கு நேரடியான பதிலை அப்.யோவான் தன் நிருபத்தில் எழுதுகிறார். 

 

*அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு* அவருக்குமுன்பாகப் *பிரியமானவைகளைச்* செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். 1யோ. 3:22

 

கிறிஸ்துவினுடைய கட்டளைகளை நான் கைகொண்டு நடப்பதே பிரதானமாக தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது.

 

*அது என்ன முக்கியாமான கட்டளை?*

நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. 1யோ. 3:23

 

பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். யோ. 9:31

 

இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, *நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும்* சீர்பொருந்தினவர்களாக்குவாராக- எபி. 13:21

 

அவருடைய கட்டளைக்கு கீழ்படிந்து சகல நற்கிரியைகளில் வளர்ந்து அவரில் பெலப்படவேண்டும் என்பதே தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது.

 

அடிப்படை / துவக்கம் – இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பது. (அப்.. 8:37). [இயேசு தான் பிதா / இயேசு தான் ஆவியானவர் / எல்லாரும் ஒன்னு தான் என்று குழப்புகிறவரிடத்திலிருந்து வேதத்தின் மூலம் தெளிவுபடுங்கள்.]

 

பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் (முழுகி) பெற்றுக்கொள்ளுங்கள் (அப். 22:16, 2:38)

 

ஒவ்வொரு ஞாயிறு கிழமைகளிலும் கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்ளுங்கள் (அப். 20:7)

 

ஒவ்வொரு ஞாயிறு கிழமைகளிலும் வேதத்தின் படி பாடல் பாடி வசனத்தை கேட்டு காணிக்கையை அந்த அந்த சபை வளர்ச்சிக்காக பகிர்ந்து கொடுத்து இப்படி கர்த்தருடைய கட்டளையை நிறைவேற்றுங்கள் (1கொரி. 16:1-2, கொலோ. 3:16)

 

பூரணமான அன்பு வளர்ந்தால் – ஆவியின் கனிகள் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும் (கலா. 5:22-23)

 

தேவன் எப்போதும் நம்மீது பிரியப்படுவார் (1யோ. 3:22)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

வேதாகம ஆசிரியர்

தொடர்பு : +918144776229

    

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2


*Website* : http://www.kaniyakulamcoc.wordpress.com


-------------------------


Print Friendly and PDF

#987 - ஞானஸ்நானம் தண்ணீரில் கொடுக்க வேண்டும் என்று ஏன் தேவன் கூறினார்?

#987 - *ஞானஸ்நானம் தண்ணீரில் கொடுக்க வேண்டும் என்று ஏன் தேவன் கூறினார்?*

 

*பதில்* - தண்ணீரினாலும் ஆவியினாலும் ஒருவன் பிறவாவிட்டால் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்றார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. யோ. 3:5

 

ஏன் தண்ணீரில் எடுக்க வேண்டும் என்று நான் அறிந்து வேதத்தில் நேரடியான பதில் இல்லை. 

 

ஆனால் மனிதனுக்கு தண்ணீரின் அத்தியாவசியத்தை கவனிக்கும் போது அதனை தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது என்றே நான் சொல்வேன்.

 

அமெரிக்க விஞ்ஞான ஆய்வகத்தின் கணக்கின் படி பூமியின் பரப்பளவில் 71 சதவீதம் தண்ணீரில் நிறைந்திருக்கிறது. பூமியில் இருக்கும் தண்ணீரின் அளவில் 96.5 சதவீதம் சமுத்திரம் அடக்கியுள்ளதாம் !!! (1)

 

மனித சரீரம் 60 சதவீதம் தண்ணீர் நிறைந்தது. (2)

 

குறைவில்லாமல் எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கும். நீராவியாகவும் மேகங்களாகவும் வாயுக்களாகவும் தடையில்லாமல் கிடைக்கிறது – யோபு 36:26-29

 

நிறைந்திருக்கும் தண்ணீர் எப்போதும் மகிழ்ச்சியை அல்லது புத்துணர்ச்சியை தருகிறது. யோபு 37:5-20

 

சரீர களைப்பு தண்ணீரில் களைகிறது. யோ 19:28, 2சாமு. 23:15

 

தேவனை தேடும் ஆத்துமாவின் ஏக்கமாக ஒப்பிடப்படுகிறது – சங். 63:1

 

நம் நீதியை தேவன் சரிக்கட்டும் மகிழ்ச்சி தண்ணீருக்கு ஒப்பிடப்படுகிறது ஏசா. 35:5-7

 

புற அழுக்கை சுத்தம் செய்கிறது – எண். 19:19-20, யாத். 30:18-20

 

உலகில் தண்ணீரின்றி எவரும் மரிப்பதில்லை. 

தண்ணீரை சென்றடைய முடியாமல் மரிக்கிறவர்கள் உண்டு. 

 

அது போல மனிதன் இரட்சிக்கப்படும்படி ஆவியானவர் ஏற்படுத்தின உடன்படிக்கையானது எந்த இடத்திலும் உண்டு.  அதை சென்றடைய முடியாமல் நித்திய ஜீவனை இழக்கிறவர்கள் அநேகர். ரோ. 1:20

 

அப்படியாக - எந்த இடத்திலும், எப்போதும், எங்கும், எப்படியும் தண்ணீர் கிடைப்பதால் – கிறிஸ்துவிற்குள்ளாக இரட்சிப்பின் படியில் அடியெடுத்து வைக்கும் ஒருவர் ஞானஸ்நானத்தை தண்ணீரில் எடுக்கும்படியாக சம்பந்தப்படுத்தியிருக்கலாம். அதன் நோக்கத்தை தேவனே அறிவார் !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

வேதாகம ஆசிரியர்

தொடர்பு : +918144776229

    

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2


*Website* : http://www.kaniyakulamcoc.wordpress.com


-------------------------

 

ஆதாரம் : 

(1) https://www.usgs.gov/special-topic/water-science-school/science/how-much-water-there-earth 

 

(2) https://www.usgs.gov/special-topic/water-science-school/science/water-you-water-and-human-body?qt-science_center_objects=0#qt-science_center_objects 

Print Friendly and PDF