Kaniyakulam Church of Christ
கணியாகுளம் கிறிஸ்துவின் சபை
திங்கள், 11 மே, 2026
#1243 – கி.பி. 33-ஆம் ஆண்டில் திருச்சபை/இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை வரலாற்று வரிசைப்படி காண முடியுமா?
சனி, 2 மே, 2026
#409 - கர்த்தருக்கு பிரியமாய் வாழ்வது எப்படி? நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…
*பதில்* : இந்த கேள்விக்கு நேரடியான பதிலை அப்.யோவான் தன் நிருபத்தில் எழுதுகிறார்.
*அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு* அவருக்குமுன்பாகப் *பிரியமானவைகளைச்* செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். 1யோ. 3:22
கிறிஸ்துவினுடைய கட்டளைகளை நான் கைகொண்டு நடப்பதே பிரதானமாக தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது.
*அது என்ன முக்கியாமான கட்டளை?*
நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. 1யோ. 3:23
பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். யோ. 9:31
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, *நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும்* சீர்பொருந்தினவர்களாக்குவாராக- எபி. 13:21
அவருடைய கட்டளைக்கு கீழ்படிந்து சகல நற்கிரியைகளில் வளர்ந்து அவரில் பெலப்படவேண்டும் என்பதே தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது.
அடிப்படை / துவக்கம் – இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பது. (அப்.. 8:37). [இயேசு தான் பிதா / இயேசு தான் ஆவியானவர் / எல்லாரும் ஒன்னு தான் என்று குழப்புகிறவரிடத்திலிருந்து வேதத்தின் மூலம் தெளிவுபடுங்கள்.]
பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் (முழுகி) பெற்றுக்கொள்ளுங்கள் (அப். 22:16, 2:38)
ஒவ்வொரு ஞாயிறு கிழமைகளிலும் கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்ளுங்கள் (அப். 20:7)
ஒவ்வொரு ஞாயிறு கிழமைகளிலும் வேதத்தின் படி பாடல் பாடி வசனத்தை கேட்டு காணிக்கையை அந்த அந்த சபை வளர்ச்சிக்காக பகிர்ந்து கொடுத்து இப்படி கர்த்தருடைய கட்டளையை நிறைவேற்றுங்கள் (1கொரி. 16:1-2, கொலோ. 3:16)
பூரணமான அன்பு வளர்ந்தால் – ஆவியின் கனிகள் தேடி வந்து ஒட்டிக்கொள்ளும் (கலா. 5:22-23)
தேவன் எப்போதும் நம்மீது பிரியப்படுவார் (1யோ. 3:22)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Website* : http://www.kaniyakulamcoc.wordpress.com
-------------------------
#987 - ஞானஸ்நானம் தண்ணீரில் கொடுக்க வேண்டும் என்று ஏன் தேவன் கூறினார்?
#987 - *ஞானஸ்நானம் தண்ணீரில் கொடுக்க வேண்டும் என்று ஏன் தேவன் கூறினார்?*
*பதில்* - தண்ணீரினாலும் ஆவியினாலும் ஒருவன் பிறவாவிட்டால் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்றார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. யோ. 3:5
ஏன் தண்ணீரில் எடுக்க வேண்டும் என்று நான் அறிந்து வேதத்தில் நேரடியான பதில் இல்லை.
ஆனால் மனிதனுக்கு தண்ணீரின் அத்தியாவசியத்தை கவனிக்கும் போது அதனை தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது என்றே நான் சொல்வேன்.
அமெரிக்க விஞ்ஞான ஆய்வகத்தின் கணக்கின் படி பூமியின் பரப்பளவில் 71 சதவீதம் தண்ணீரில் நிறைந்திருக்கிறது. பூமியில் இருக்கும் தண்ணீரின் அளவில் 96.5 சதவீதம் சமுத்திரம் அடக்கியுள்ளதாம் !!! (1)
மனித சரீரம் 60 சதவீதம் தண்ணீர் நிறைந்தது. (2)
குறைவில்லாமல் எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கும். நீராவியாகவும் மேகங்களாகவும் வாயுக்களாகவும் தடையில்லாமல் கிடைக்கிறது – யோபு 36:26-29
நிறைந்திருக்கும் தண்ணீர் எப்போதும் மகிழ்ச்சியை அல்லது புத்துணர்ச்சியை தருகிறது. யோபு 37:5-20
சரீர களைப்பு தண்ணீரில் களைகிறது. யோ 19:28, 2சாமு. 23:15
தேவனை தேடும் ஆத்துமாவின் ஏக்கமாக ஒப்பிடப்படுகிறது – சங். 63:1
நம் நீதியை தேவன் சரிக்கட்டும் மகிழ்ச்சி தண்ணீருக்கு ஒப்பிடப்படுகிறது ஏசா. 35:5-7
புற அழுக்கை சுத்தம் செய்கிறது – எண். 19:19-20, யாத். 30:18-20
உலகில் தண்ணீரின்றி எவரும் மரிப்பதில்லை.
தண்ணீரை சென்றடைய முடியாமல் மரிக்கிறவர்கள் உண்டு.
அது போல மனிதன் இரட்சிக்கப்படும்படி ஆவியானவர் ஏற்படுத்தின உடன்படிக்கையானது எந்த இடத்திலும் உண்டு. அதை சென்றடைய முடியாமல் நித்திய ஜீவனை இழக்கிறவர்கள் அநேகர். ரோ. 1:20
அப்படியாக - எந்த இடத்திலும், எப்போதும், எங்கும், எப்படியும் தண்ணீர் கிடைப்பதால் – கிறிஸ்துவிற்குள்ளாக இரட்சிப்பின் படியில் அடியெடுத்து வைக்கும் ஒருவர் ஞானஸ்நானத்தை தண்ணீரில் எடுக்கும்படியாக சம்பந்தப்படுத்தியிருக்கலாம். அதன் நோக்கத்தை தேவனே அறிவார் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Website* : http://www.kaniyakulamcoc.wordpress.com
-------------------------
ஆதாரம் :
(1) https://www.usgs.gov/special-topic/water-science-school/science/how-much-water-there-earth
சனி, 11 ஏப்ரல், 2026
#1242 – ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் நீங்கள் உங்கள் மகன் திருமணத்தை நல்ல பெரிய முகூர்த்த நாளில் தானே வைத்திருக்கிறீர்கள்? இனி எப்படி வேதாகமத்தைப் போதிப்பது? தவறு தானே