#1229 – *எங்களது
பிள்ளையை பரத நாட்டியம் போன்ற நடன பயிற்சிகளுக்கு அனுப்பலாமா?* வேதத்தின்படி இது முரணானதா அல்லது ஏற்புடையதா என இதற்கான தெளிவை எங்களுக்கு
தரவும்.
*பதில்* : இந்த தலைப்பில் ஏற்கனவே சிலர் கேட்டிருந்தும், இது
போன்ற கேள்வி மீண்டும் எழும்பியதால் நமது பதிவில் அனைவருக்கும் பிரயோஜனமாய்
இருக்கும்படிக்கு இதற்கான பதிலை ஒரு முழு நீள பதிவாகவே பதிவு செய்கிறேன்.
நான் அறிந்து மொத்தம் 14 இடங்களில் நடனத்தைக் குறித்த
குறிப்புகள் வேதாகமத்தில் உள்ளன. அவை:
1. மிரியாம் மற்றும் இஸ்ரவேல் பெண்கள்: யாத்திராகமம் 15:20
2. பொற்கன்று குட்டி வழிபாடு: யாத்திராகமம் 32:19
3. யெப்தாவின் மகள்: நியாயாதிபதிகள் 11:34
4. சீலோவின் குமாரத்திகள்: நியாயாதிபதிகள் 21:21
5. தாவீது கோலியாத்தை வென்றதைக் கொண்டாடிய பெண்களின் நடனம்: 1 சாமுவேல் 18:6, 21:11, 29:5
6. தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி வரும்போது தாவீதின் நடனம்: 2 சாமு. 6:14, 16; 1 நாளா. 15:29
7. புலம்பல் ஆனந்தக் களிப்பாக (நடனமாக) மாறியது: சங்கீதம் 30:11
8. துதிப்பதற்கான அழைப்பு: சங்கீதம் 149:3, சங்கீதம் 150:4
9. நடனத்திற்கான காலம்: பிரசங்கி 3:4
10. இஸ்ரவேலின் மகிழ்ச்சி மற்றும் கன்னிகைகளின் நடனம்: எரேமியா 31:4, 31:13
11. துக்கமாக மாறிய நடனம்: புலம்பல் 5:15
12. உவமை: "குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை": மத்தேயு 11:17, லூக்கா 7:32
13. ஏரோதியாளின் மகளின் நடனம்: மத்தேயு 14:6, மாற்கு 6:22
14. கெட்ட குமாரன் உவமையில் நடந்த கொண்டாட்டம்: லூக்கா 15:25
சூழலைக் குறிக்கும் வரிசை எண் 7, 8, 9 & 10ஐத்
தவிர, *மேலேயுள்ள பட்டியலின்படி நடந்து முடிந்த பத்து
சம்பவங்களும் துக்கமாய் முடிந்தது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது*.
நடனத்தைக் குறித்த சில பார்வைகளை கீழ்வைக்கிறேன்.
நடனம் என்பது பரந்த அளவிலான செயல்களை உள்ளடக்கியது.
இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் அசைவாக இருக்கலாம், மகிழ்ச்சி அல்லது உற்சாகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் அசைவாக
இருக்கலாம். அல்லது மற்றொரு
நபருக்குள் சில உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிக்கலான
அசைவுகளாகவும் இருக்கலாம்.
நடனம் மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது, எனவே
மனிதர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் கூடுமான அளவில் பாலின எண்ணங்களை வெளிப்படுத்தும் நடனங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
இச்சையான மோகங்களில் ஈடுபடக்கூடாது 1 தெசலோனிக்கேயர் 4:3-5, கொலோசெயர் 3:5.
இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்தவர்களுடன் தொடர்புபடுத்தப்படவுங் கூடாது - எபேசியர் 5:3.
இளம் கிறிஸ்தவர்கள் நடனமாடச் விரும்பினாலும் குறைவான பெற்றோர்களே அவர்களைத் தடுக்கிறார்கள்.
கிட்டத்தட்ட அனைவரும் நடனமாடுவதில் என்ன தவறு என்பது இப்பொழுது கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
பல நடன அசைவுகள் பாலியல் செயலின்
இயக்கங்களை பிரதிப்பலிப்பதை நாம்
மறந்துவிடக்கூடாது.
"ஆடக்கூடாது" என்று பைபிள் சொல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால்
கலாத்தியர் 5:19-21 இல் காமவெறி அல்லது களியாட்டு கண்டிக்கப்படுகிறது.
இந்த வார்த்தைகள் கட்டுப்பாடு இல்லாதது, அநாகரீகம், கற்பு இல்லாதது, ஆபாசம் அல்லது வெட்கமற்ற நடத்தையை
வெளிப்படுத்தும் எந்தவொரு நடத்தையையும் விவரிக்கின்றன.
இந்தியாவில் பிரபிலமான நடனமான பரதம் போன்ற கலைகளில் பெரும்பாலானவை விக்கிரகக் கடவுளை பிரதிபலிக்கும் ஒரு வகை நடனம். கிறிஸ்தவர்கள் நிச்சயம் அதில் ஈடுபடக்
கூடாது.
அப்படியென்றால் மேற்கத்திய நடனம் ஆடலாமா என்று கேட்கத்தூண்டும்.
நடனம் பொதுவாக வசீகரமானவை. தங்களது உடல் மொழியை, நளினத்தை
மற்றவர்களுக்கு வெளிக்கொண்டு வர அதை பார்ப்பவர்களுக்கு சரீரத்தின் மீதான உணர்வை வெளிப்படுத்தும் ஒரு கலை அல்லவா?
ஒரு ஆண் தனது மனைவியுடன் தங்கள் வீட்டின் தனிமையில் நடனமாடுவதை பைபிள்
கண்டிக்கவில்லை.
*நடனமாடலாமா? கூடாதா?*
நம் இதயங்களில் மற்றவர்களை இச்சையுடன் தூண்டுவது தவறு – மத். 5:28
மற்றவர்களிடம் இச்சைகளைத் தூண்டும் வகையில் நம்மை நடத்துவது தவறு; அது காமம், இது மாம்சத்தின் வேலையாகக்
கண்டிக்கப்படுகிறது – கலா. 5:19-21
இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். ரோமர் 13:12-14
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
