ஞாயிறு, 5 மே, 2024

மனதுருகும் தேவன்


 

*மனதுருகும் தேவன்*

by : Eddy Joel Silsbee

 

இரக்கமும் மனவுருக்கமும் நிறைந்த நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.

 

நாம் அவருடைய பிள்ளைகள். அவர் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை. உபா. 31:6

 

நம்முடைய தேவன் எப்போதும் நம்முடனே இருக்கிறவர். நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களாயிருக்கிறோம். சங். 95:7

 

நமக்கு ஏற்படும் எல்லா இக்கட்டுகளிலிருந்தும் நம்மை விடுவிக்கும்படிக்கு அவர் நம்மீது மனதுருகுபவர். சங். 86:15

 

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாய் எண்ணுவதில்லை. தமது முகத்தை அவர் நமக்கு மறைப்பதுமில்லை. அவரை நோக்கிக் கூப்பிடும்பொழுது நம்மை விசாரிப்பவர் அவர். சங். 22:24

 

அவரது மனதுருக்கத்தை நாம் பெறவேண்டுமெனில் நாம் மனந்திரும்புவது அவசியம்.

 

தவறுகளைக் அடையளப்படுத்தி,

அதைக் களைந்து விட்டு

மனந்திரும்பி அவரை ஆராதித்த ஜனங்களின் மீது அவர் மனதுருகினார் என்கிறது வேதம். நியா. 10:16

 

தவறுகளிலிருந்து முதலாவது நாம் நம்மை விலக்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுது தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். ஏசா. 55:7, 1யோ. 5:18, யாக். 4:8

 

சுய மனந்திரும்புதலின்றி தேவனை தேடி எந்த பிரயோஜனமும் இல்லை !! நேர விரயமே…

 

அவர் நம்மீது மனதுருகி நம்மை காக்க அவர் நமக்காய் காத்துக்கொண்டிருக்கிறார். 1சாமு. 30:18

 

சுயசோதனை முதலாவது வரட்டும். ஆசீர்வாதம் தானாக பின்தொடரும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/xYI2i9pzsR8

 

வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக