புதன், 31 ஜூலை, 2019

#304 *கேள்வி* இறைவன் படைப்பில் ஆண்/பெண் இரு பாலர் மட்டும் தானே மூன்றாம் ஏன்?

#304 *கேள்வி - இறைவன் படைப்பில் ஆண்/பெண் இரு பாலர் மட்டும் தானே மூன்றாம் ஏன்?*

*பதில்* :
ஆம், தேவன் ஆண் மற்றும் பெண்ணை தான் உருவாக்கினார்.

மூன்றாம் பாலர் என்பவர்கள் சரீர வளர்ச்சி குறைபாடுகளால் உருவானவர்கள்.

தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார் இயேசு கிறிஸ்து (மத் 19:12)

அரசவையில் இராணியாருக்கு பாதுகாவலராக அண்ணகர்களை தான் நியமிப்பார்கள் (அப் 8:27) இல்லையென்றால் அனைவரும் யோசேப்பை போல உத்தமமாய் இருப்பார்கள் என்ற சொல்வதற்கில்லையே (ஆதி 39:7-9)

நியாயப்பிரமானத்தின் படி – அவ்வாறு சரீர பெலவீனத்தால் அண்ணகர்களாக பிறந்தவர்களோ அல்லது அண்ணகராக்கப்பட்டவரோ

1- இஸ்ரவேலரோடு சேர்ந்து ஆராதிக்க தடைசெய்யப்பட்டார்கள்.

2- ஆசாரிய வேலை செய்ய தடை செய்யபட்டார்கள்.

லேவி 21:17-21, உபா 23:1-3

புதிய ஏற்பாட்டில் / புதிய கட்டளையில் / புதிய நியமனத்தில் கிறிஸ்துவானவர் மூலமாக தேவன் - எவரையும் தள்ளிவைக்காமல் அனைவரையும் தன் குமாரனுடைய இராஜ்ஜியமாகிய சபையில் சேர்த்தார்.

தேவனுடைய வீடு அனைவருக்கும் தேவனுடைய ஜெபவீடு எனப்படும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் நாட்களிலேயே தேவன் அதை வெளிப்படுத்தினார் (ஏசா 56:3-5)

அந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவை அப் 8:28-40ல் காண்கிறோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக