செவ்வாய், 2 ஜூலை, 2019

#249 கேள்வி: தனக்கு தோன்றுகிற பெயரை சபைக்கோ அல்லது ஊழியத்திற்கோ வைத்துக்கொள்ளுவது சரியா ?

#249 *கேள்வி:* தனக்கு தோன்றுகிற பெயரை சபைக்கோ அல்லது ஊழியத்திற்கோ வைத்துக்கொள்ளுவது  சரியா ?

*பதில்:*
கிறிஸ்துவிற்கு சொந்தமான சபையை பல பெயரை கொண்டு புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிறிஸ்து - தன் சபையை கட்டினார் (மத். 16:18)

புதிய ஏற்பாட்டில் – சபையின் பெயர்கள் கீழ்கண்டவாறு அழைக்கப்பட்டிருக்கிறது:

1-    கிறிஸ்துவின் சபை (ரோ. 16:16)

2-    இடத்தின் பெயரை குறிப்பிட்டு .... தேவனுடைய சபை என்றும் (1கொரி. 1:2)

3-    அல்லது இடத்தின் பெயரால் அழைக்கப்படும் சபை (எபேசு சபை, சிமிர்னா சபை..) கொலோ. 4:16; 1தெச. 1:1; 2தெச. 1:1; வெளி. 2:1; 3:14

மேலும் – கிறிஸ்தவர்களின் கூட்டத்தை – வேதம் கீழ்கண்ட வகையில் அழைக்கிறது :

4-    தேவனுடைய சபை – 1கொரி. 10:32
5-    ஜீவனுள்ள தேவனுடைய சபை – 1தீமோ. 3:15
6-    தேவனுடைய வீடு  – 1தீமோ. 3:15
7-    முதற்பேறானவரின் சபை – எபி. 12:23
8-    பரலோக இராஜ்ஜியம் – மத். 7:21
9-    தேவனுடைய இராஜ்ஜியம் – 1கொரி. 4:20
10- தேவனுடைய இராஜ்ஜியமாகிய கிறிஸ்துவின் இராஜ்ஜியம் – எபே. 5:5
11- அன்பின் குமாரனுடைய ராஜ்யம் – கொலோ. 1:13
12- கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யம் 2பேதுரு 1:11
13- கிறிஸ்துவின் சரீரம் – 1கொரி. 12:27

மேலே சொல்லப்பட்டவைகளில் உள்ள எந்த பெயரையும் உபயோகபடுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து.

சபையானது – கிறிஸ்துவினுடையது என்பதை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும்.  மனிதனை பிரதிபலிப்பதாக இருக்ககூடாது. சபையை கட்டியது கிறிஸ்து.

அநேகர் தங்கள் சபைக்கு ஸ்தாபகராக இருக்கிறார்கள்.  மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சபையில் அங்கத்தினராக இருந்துகொண்டு கிறிஸ்து தான் எங்களுக்கு தலை என்று உரிமை கொண்டாடினாலும் அதை தேவன் அனுமதிப்பாரோ? வசனமே நம்மை நியாயந்தீர்க்குமே !!

சபையின் ஸ்தாபகர் கிறிஸ்துவாக தான் இருக்கவேண்டும்.

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டி (வெளி. 21:9)

அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அவர் சரீரத்தின் ஒரு அங்கம் (எபே. 5:30)

அவரை தலையாக கொண்ட ஜனம் (கொலோ. 1:18, எபே. 5:23, 4:15, 1:23)

கிறிஸ்தவர்களுக்கு சொந்தமாக என்ன பெயர் இருந்தாலும் – பொதுவாக திருமதி கிறிஸ்து என்று அழைக்கப்படவேண்டியது அவசியம்.

அதே வேளையில் – பெயரை மாத்திரம் சரியாய் வைத்துக்கொண்டு கிறிஸ்துவின் கட்டளையை பின்பற்றாமல் இருந்த பல சபைகளை வெளி. 2-3ம் அதிகாரங்களில் நாம் காணமுடியும் !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக