செவ்வாய், 12 அக்டோபர், 2021

கர்த்தரை அண்டியிருந்தால் சிங்க நடை

 


*கர்த்தரை அண்டியிருந்தால் சிங்க நடை*

By : Eddy Joel Silsbee

 

அன்பின் தேவன் தாமே நம்மை தொடர்ந்து வழி நடத்துவாராக.

 

யோசுவாவும் காலேபையும் தவிர மற்ற ஒற்றர்களுக்கு அந்த தேசத்தார் பலசாலிகளாக, இராட்சதர்களாகவும் இருப்பதாக நினைத்து பயந்தார்கள்.

 

தன்னோடு இருக்கும் தேவனின் மகிமையை உணராமல் அங்கு இருப்பவர்களை கண்டு பயந்ததின் நிமித்தம் பல வருடங்கள் வனாந்திரத்திலேயே சுற்ற வேண்டியிருந்தது.. எண். 13:33.

 

போதாக்குறைக்கு, அவர்கள் சொல்வதைக் கேட்ட ஜனங்களும், இது வரை அவர்களை வல்லமையாய் நடத்தின தேவனுடைய செயலை மறந்து பழைய அடிமைத்தனத்திற்குள் திரும்பி செல்லலாம் என்று திட்டம் தீட்டினார்கள். எண். 14:1-4

 

நம்மோடு இருக்கும் தேவன் மகா பெரியவர் என்பதை மறந்தால் பயம் நம்மை தொற்றிக் கொள்ளும்.

 

கர்த்தருக்கு பிரியமாக நடப்பதில் மாத்திரம் கவனமாக இருந்தால்  சகலத்தையும் தன் சித்தப்படி வாய்க்கச்செய்வார் நம் ஆண்டவர். எண். 14:8-9

 

நமக்கு எதிராக யார் எப்படி வந்தால் என்ன? எண். 14:10

 

நம் உறவு தேவனிடத்தில் நெருக்கமாய் இருந்தால் சிங்கம் போல வலம் வரலாம். நீதி. 28:1

 

அவரை உறுதியாய் பற்றிக்கொள்வோம். பூரண சமாதானம் நம்மை எப்போதும் ஆண்டு கொள்ளும். பாதுகாப்பும் அடைக்கலமுமான இடம் அவரே. ஏசா. 26:3-4

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/lv8rFNS1QGs

 

*எங்களது கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக