சனி, 20 நவம்பர், 2021

பொறுமையில் ஆசீர்வாதம்

 


*பொறுமையில் ஆசீர்வாதம்*

By : Eddy Joel Silsbee

 

வெற்றி சிறக்க செய்யும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

நேர்மையும், புத்தியும், ஒழுங்கும், பெலனும், பணமும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி என்று கணக்கு போட்டவர்கள் தங்களது நேரம் விரயமானதை காலம் கடந்தே உணர்ந்தார்கள்.

 

இவை ஒன்றுமே இல்லாமல் நோஞ்சானாகவோ,

ஏழையாகவோ,

ஒன்றும் அறியாதவனாகவோ,

எல்லா சூழ்நிலையிலும் ஒடுக்கப்பட்டு இருந்தாலும்,

முழங்கால் படியிட்டு தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபத்தையும்  விசுவாசத்தையும் இரு சிறகுகளாக்கி “*காத்து இருக்கும் போது*” முற்றிலும் புதிய பெலனோடு எல்லோருடைய பார்வைக்கு முன்பாகவே கழுகுகளை போல நம்மை உயரே கொண்டு செல்வார் !! (ஏசா. 40:31)

 

செய்ய வேண்டியதை விட்டு, பகல் முழுக்க ஓடினாலும், இளைப்பும் வியாதியும் தான் மிஞ்சும்.

 

மாறாக ஒரு நாளைக்கு குறைந்தது 15 நிமிடமாவது ஜெபிக்க முடிவெடுங்கள். வேதம் வாசியுங்கள். எவ்வளவு நெருக்கடியானாலும் சாக்கு போக்கு சொல்லாமல் உடனடியாக வசனத்திற்கு கீழ்படியுங்கள்.

 

இன்று கஷ்டமாயிருந்தாலும் கீழ்படிதலோடு பொறுத்திருந்தால் நம்மை ஆசீர்வதிக்காமல் அவர் இருக்கப்போவதேயில்லை!!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/q-d5-Cd5lmg

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக