திங்கள், 11 அக்டோபர், 2021

தயாராக இருப்போம் !

*தயாராக இருப்போம் !*

By : Eddy Joel Silsbee

 

பிதாவாகிய தேவனும் குமாரனாகிய கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் நம்மில் இன்னும் பெலப்படுவதாக.

 

கிறிஸ்தவரோ கிறிஸ்தவரல்லாதவரோ அனைவருமே நிச்சயமாய் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை பார்க்கத் தான் போகிறோம். 1கொரி. 15:22

 

ஒருவேளை நாம் கிறிஸ்துவின் வருகைக்கு முன்னர் மரித்துப் போனாலும் *அவர் வரும் பொழுது நிச்சயமாக* அவரைப் பார்ப்போம்.. 1தெச. 4:16, 1கொரி. 15:51-52, வெளி. 1:7, மத். 24:30, 2கொரி. 5:10

 

ஆகவே,

இரகசியமாக அவர் வந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களை மாத்திரம் கூட்டிக் கொண்டு தனியாக ஒரு அரசாங்கம் அமைக்கவோ,  நாமெல்லாரும் அமைச்சர்களாகவோ போர் வீரர்களாகவோ ஆயிரம் வருஷம் ஒரு தொந்தரவும் இல்லாமல் வாழும் காலம் வரப்போகிறது என்ற அதீத கற்பனையை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

 

ஆயிரம் வருட அரசாட்சியை குறித்து முழுமையான துல்லியமான வேத விளக்கங்களை நம் கேள்வி பதில் குழுவில் பகிரப்பட்ட கேள்வி எண் #320ஐ படிக்கவும்.

 

இயேசு கிறிஸ்து வரும் போது இந்த உலகம் அழிக்கப்படும். 2பேதுரு 3:10

 

அனைவரையும் நியாயத்தீர்ப்பில் நிறுத்துவார். வெளி. 20:13, எபி. 9:27

 

அவருடைய கட்டளைக்கு கீழ்படிகிற நாம் பரலோகதிற்கும்;  சத்தியத்திற்கு சத்தியத்தின்படி கீழ்படியாத அனைவரும் நரகத்திற்கும் போவது உறுதி.  2தெச. 1:7

 

பூமிக்கு ராஜாவாக வேண்டும் என்று முயற்சி அவர் செய்கிறவராக இருந்தால், கிறிஸ்து சிலுவையில் அறையப்படாதபடி அவர் சீஷர்கள் அப்பொழுதே சண்டை போட்டிருப்பார்கள். யோ. 18:36

 

ரோம சாம்ராஜ்யத்தை முற்றிலுமாய் அழிப்பதற்கு ஒரு க்ஷனப்பொழுது போதுமே !! ஒரு தூதன் இறங்கி வரவேண்டிய அவசியமே இருந்திருக்காது !! ஆதி. 19:24

 

ஆகவே, சத்தியத்தை அறிந்து கிறிஸ்துவின் கட்டளைக்கு மாத்திரம் கீழ்படிவோம்.

 

கற்பனை காவியங்களை களைந்து நடைமுறையில் உள்ள வேதகட்டளைக்கு செவி சாய்ப்போம்.

 

*பாவமன்னிப்பிற்கென்று* ஞானஸ்நானம் எடுத்து சத்தியத்தில் நிலைத்திருந்தால், அவர் எப்போது வந்தாலும் தயாராகயிருக்கமுடியும் !!

 

பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நாம் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருப்போம்.  ஆண்டவரே சீக்கிரம் வாரும். 2பேதுரு 3:12-14

 

பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் எடுக்காதவர்கள் இனியும் காலம் தாழ்த்தாமல், கீழ்படிந்து தயாராகுங்கள் !!

 

தேவன் தாமே நம் அனைவரையும் தம்மண்டை சேர்ப்பாராக !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/ISvQM0RBKv0

 

*எங்களது கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக