#957 - *கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிய தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள் என்ன?*
*பதில்*
இந்த
தகவலை ஒரு சில வலை தளங்களில் எடுத்து மொழிபெயர்த்து தொகுத்து உங்களுக்கு கொடுக்கிறேன்.
இந்த
பட்டியலில் அடங்காதவைகளும் இருக்க வாய்ப்பு உள்ளது.
தீர்க்கதரிசனமாக
சொல்லப்பட்ட வசனமும் அது நிறைவேறின வசனத்தையும் கூடுமான வரை உங்களுக்கு தொகுத்து
அளிக்கிறேன்.
மேசியா
ஒரு பெண்ணிலிருந்து பிறப்பார். ஆதியாகமம் 3: 15 மத்தேயு 1: 20 கலாத்தியர் 4:5
மேசியா
பெத்லகேமில் பிறப்பார். மீகா 5:2 மத்தேயு 2:1 லூக்கா 2: 4-6
மேசியா
கன்னியின் வயிற்றில் பிறப்பார். ஏசாயா 7: 14 மத்தேயு 1: 22-23 லூக்கா 1: 26-31
மேசியா
ஆபிரகாமின் வம்சத்தில் வருவார். ஆதியாகமம் 12: 3 ஆதியாகமம் 22: 18 மத்தேயு 1:1
ரோமர் 9:5
மேசியா
ஈசாக்கின் வழித்தோன்றலாக இருப்பார். ஆதியாகமம் 17:19 ஆதியாகமம் 21:12 லூக்கா 3: 34
மேசியா
யாக்கோபின் சந்ததியினராக இருப்பார். எண் 24:17 மத்தேயு 1:2
மேசியா
யூதாவின் கோத்திரத்திலிருந்து வருவார். ஆதியாகமம் 49:10 லூக்கா 3:33 எபிரெயர் 7:14
மேசியா
தாவீது ராஜாவின் சிம்மாசனத்தின் வாரிசாக இருப்பார். 2 சாமுவேல் 7: 12-13 ஏசாயா 9:
7 லூக்கா 1: 32-33 ரோமர் 1: 3
மேசியாவின்
சிம்மாசனம் அபிஷேகம் செய்யப்பட்டு நித்தியமாக இருக்கும். சங்கீதம் 45: 6-7
தானியேல் 2: 44 லூக் 1: 33 எபிரெயர் 1: 8-12
மேசியா
இம்மானுவேல் என்று அழைக்கப்படுவார். ஏசாயா 7: 14 மத்தேயு 1: 2311 மேசியா 1: 2311
ஹோசியா 11: 1 மத்தேயு 2: 14-15
மேசியாவின்
பிறந்த இடத்தில் குழந்தைகள் படுகொலை நடக்கும். எரே 31:15 மத்தேயு 2:16-18
ஒரு
தூதர் மேசியாவுக்கு வழி தயார் செய்வார். ஏசா 40: 3-5 லூக்கா 3:3-6
மேசியா
தனது சொந்த மக்களால் நிராகரிக்கப்படுவார். சங்கீதம் 69: 8 ஏசாயா 53: 3 யோவான் 1:11
யோவான் 7: 5
மேசியா
ஒரு தீர்க்கதரிசி உபாகமம் 18: 15 அப் 3: 20-22
மேசியாவுக்கு
முன்னால் எலியா அனுப்பப்படுவார். மல்கியா 4: 5-6 மத்தேயு 11: 13-14
மேசியா
தேவனுடைய குமாரனாக அறிவிக்கப்படுவார். சங்கீதம் 2:7 மத்தேயு 3: 16-17
மேசியா
ஒரு நசரேயன் என்று அழைக்கப்படுவார். ஏசாயா 11:1 மத்தேயு 2:23
மேசியா
கலிலேயாவுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பார். ஏசாயா 9:1-2 மத்தேயு 4: 13-16
மேசியா
உவமைகளில் பேசுவார். சங்கீதம் 78:2-4 ஏசாயா 6: 9-10 மத்தேயு 13: 10-15, 34-35
மேசியா
உடைந்த இருதயத்தை குணப்படுத்த அனுப்பப்படுவார். ஏசாயா 61: 1-2 லூக்கா 4: 18-19
மெல்கிசேதேக்கின்
கட்டளைப்படி மேசியா ஒரு ஆசாரியராக இருப்பார். சங்கீதம் 110:4 எபிரெயர் 5: 5-6
மேசியா
ராஜா என்று அழைக்கப்படுவார். சங்கீதம் 2: 6 சகரியா 9: 9 மத்தேயு 27 : 37 மாற்கு
11: 7-11
மேசியா சிறு குழந்தைகளால்
புகழப்படுவார். சங்கீதம் 8: 2 மத்தேயு 21:16
மேசியா
துரோகம் செய்யப்படுவார். சங்கீதம் 41: 9 சகரியா 11: 12-13 லூக்கா 22: 47-48
மத்தேயு 26: 14-16
மேசியாவின்
விலை பணம் ஒரு குயவனின் நிலத்தை வாங்க பயன்படும். சகரியா 11: 12-13 மத்தேயு 27:
9-10
மேசியா
பொய்யாக குற்றம் சாட்டப்படுவார் சங்கீதம் 35: 11 மார்க் 14: 57-58
மேசியா
தனது குற்றச்சாட்டுகளுக்கு முன்பாக அமைதியாக இருப்பார். ஏசாயா 53: 7 மாற்கு 15:
4-5
மேசியா
துப்பப்பட்டு தாக்கப்படுவார். ஏசாயா 50: 6 மத்தேயு 26: 67
காரணமின்றி
மேசியா வெறுக்கப்படுவார். சங்கீதம் 35:19, 69:4, யோவான் 15:24-25
மேசியா
குற்றவாளிகளுடன் சிலுவையில் அறையப்படுவார். ஏசாயா 53: 12 மத்தேயு 27: 38 மாற்கு
15: 27-28
மேசியாவுக்கு
குடிக்க காடி வழங்கப்படும். சங்கீதம் 69: 21 மத்தேயு 27: 34 யோவான் 19: 28-30
மேசியாவின்
கைகளும் கால்களும் துளையிடப்படும் சங்கீதம் 22: 16 சகரியா 12: 10 யோவான் 20: 25-27
மேசியா
கேலி செய்யப்பட்டு வினவப்படுவார். சங்கீதம் 22: 7-8 லூக்கா 23: 35
சிப்பாய்கள்
மேசியாவின் ஆடைகளுக்காக சீட்டு போடுவார்கள். சங்கீதம் 22: 18 லூக்கா 23: 34 மத்தேயு
27: 35-36
மேசியாவின்
எலும்புகள் முறிக்கப்படாது - யாத் 12: 46 சங்கீதம் 34: 20 யோவான் 19: 33-36
மேசியா
தனது எதிரிகளுக்காக ஜெபிப்பார் சங்கீதம் 109:4 லூக்கா 23: 34
சிப்பாய்கள்
மேசியாவின் விலாவைத் துளைப்பார்கள். சகரியா 12: 10 யோவான் 19: 34
மேசியா
பணக்காரர்களுடன் அடக்கம் செய்யப்படுவார். ஏசாயா 53: 9 மத்தேயு 27: 57-60
இறந்தவர்களிடமிருந்து
மேசியா உயிர்த்தெழுப்பப்படுவார். சங்கீதம் 16: 10, 49:15 மத் 28: 2-7 அப் 2: 22-32
மேசியா
பரலோகத்திற்கு ஏறுவார். சங்கீதம் 24: 7-10 மாற்கு 16: 19 லூக்கா 24: 51
மேசியா
கடவுளின் வலது புறத்தில் அமர்ந்திருப்பார். சங்கீதம் 68:18 சங்கீதம் 110:1 மாற்கு
16:19 மத்தேயு 22: 44
மேசியா
ஜனங்களின் பாவத்திற்காக பலியிடப்படுவார். ஏசாயா 53: 5-12 ரோமர் 5: 6-8
**
ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யும் போது வசனக் குறிப்புகளில் சில முன்னும்
பின்னும் இருக்க வாய்ப்பு உள்ளது. தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். புத்தக அச்சடிப்பில்
அந்த பிழைகளை சரிசெய்ய ஏதுவாகும்.
#1082-
*இவர் என்னுடைய நேசகுமாரன் என்று சொல்லப்பட்டதையும், புறாவைப்போல பரிசுத்த
ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் மீது இறங்கியதை யோவான் ஸ்நானன்
கண்டிருந்தும், பின் நாட்களில் “வருகிறவர் நீர் தானா? அல்லது வேறொருவர்
வரக்காத்திருக்கவேண்டுமோ” என்று ஏன் கேட்டார்*?
*பதில்*
: மேசியா வந்தாயிற்று, இரட்சகரை நாம் கண்டுவிட்டோம், இனி இஸ்ரவேலர்கள்,
ரோமர்களின் ஆதிக்கத்தில் இனி இல்லாமல், தாவீது அல்லது சாலமோன் காலங்களில்
வாழ்ந்தது போல செழித்தோங்கி வளரந்து வாழப்போகிறோம் என்று தனக்குத்தானே
நம்பிக்கை கொண்டிருந்திருக்கலாம் யோவான் ஸ்நானன்.
நாட்கள்
செல்கிறது, கிறிஸ்துவானவரோ, வெளியரங்கமாக, தான் மேசியா என்பதை
அறிவிக்காமலும், தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது போல (மீகா 5:2, 4) தனி
அரசாங்கத்தை அல்லது தன் இராஜ்யத்தை உருவாக்கும்படியான எந்த ஒரு
கட்டமைப்பையும் இன்னும் உருவாக்கவில்லை.
கீழ்வரும் வசனங்களை கவனிக்கவும்:
மீகா
5:2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள
ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர்
உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல்
அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.
மீகா 5:4 அவர் நின்றுகொண்டு,
கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின்
மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர்
இனிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் மகிமைப்படுவார்.
மத். 8:4 இயேசு
அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும்,
அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே
கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார். மேலும் இந்த வசனங்களை
படிக்கவும். மத். 9:30, 12:16-19, 17:9; மாற்கு 5:43, 7:36
மத். 16:20 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
மேலும்,
சகல தைரியத்துடன் யோவான் ஸ்நானன், இராஜாவிற்கே சவால் விட்டு எச்சரிப்பின்
செய்தியை விடுகிற அளவிற்கு பிரபலமாகிவிட்டார். மாற்கு 6:18
மேசியா
வந்தாயிற்று என்பதை தான் அறிந்திருந்தும், தன்னை தீர்க்கதரிசி என்பதை ”அவர்
அறிந்திருந்தும்” (மத். 3:15, 11:14) எப்படி தன்னை சிறைச்சாலையில்
ஏரோதுவால் போட முடிந்தது என்ற இப்படிப்பட்ட சந்தேகம் மனிதர்களாகிய
எவருக்கும் வருவது விதிவிலக்கல்ல.
எலியாவானாலும் (1இரா. 19:1-10),
கிதியோனானாலும் (நியா. 6:34-40), மோசேயானாலும் (யாத். 4:1-14) தங்களின்
எண்ணங்களில் இப்படிப்பட்ட சந்தேகம் எழும்பியது போல யோவானுக்கும்
எழும்பிவிட்டது.
ஏனென்றால், யோவான் சிறிது காலமாகவே சிறையில் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ரோமர்களுக்கு எதிராக இயேசு இஸ்ரவேலை வெற்றிகரமாக வழிநடத்துவார் என்று பல யூதர்களைப் போலவே அவரும் நினைத்திருக்கலாம்.
இஸ்ரவேல் ராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் வெளியரங்கமாக காணமுடியவில்லை.
இஸ்ரவேலர்கள்
இவரை இராஜாவாக்கவும் முயற்சித்தனர். (யோ. 6:15 ஆதலால் அவர்கள் வந்து,
தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று
இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்)
யோவானைப்
பொறுத்தவரை, எந்த மீட்பு நடவடிக்கையும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்
தன் ஆதி எண்ணங்களை சந்தேகிக்க தோன்றுவது இயல்பு அல்லவோ?
ஆகவே தான்,
நீர் தானோ என்ற கேள்வியைக் கேட்டு வந்த யோவானின் சீஷர்களுக்கு, இயேசு
நேரடியாக பதிலளிக்காமல், அற்புதங்கள் நடைபெறுவதையும் அவர்கள் கண்டதையும்
யோவானுக்குச் சொல்லும்படி கூறினார்.
யோவானுக்கு அவர் அளித்த பதில் ஏசாயா 35: 5-6 மற்றும் ஏசாயா 61:1 ஆகிய வார்த்தைகளை எதிரொலிக்கிறது.
யோவானின்
தனிப்பட்ட எதிர்பார்ப்புகளை இயேசு பூர்த்தி செய்யாததால், துவண்டு
போய்விடாமல் விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படியாக இதை
சொல்லியனுப்புகிறார். லூக்கா 7:23.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக