#925 - *வேதாகமத்தில் (புதிய
ஏற்பாட்டில்)
வாரிசுதாரர்களுக்கு சொத்து பங்கீடு சம்பந்தமான வசனங்கள் உள்ளதா?*
*பதில்*
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு சொத்து
சேர்த்து கொடுக்க வேண்டும். (2 கொரி. 12:14)
அப்படிப்பட்டவர்களை வேதம் நல்லவர்கள்
என்கிறது. நீதி. 13:22, 19:14.
ஆபிரகாம் தன் குமாரனுக்கு உயிரோடு இருந்த
காலத்திலேயே தனக்கு உண்டான *யாவையும்* தன் மகனுக்கு கொடுத்தார் – ஆதி. 24:36
தன் மகள்களுக்கு எதையும் கொடுக்காத
லாபான் அனைத்து சொத்துக்களையும் வாயிலே போட்டுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டான் –
ஆதி. 31:14-15
பிள்ளைகளுக்கு சொத்துக்களை சேர்க்கிறவன்
நல்லவன் என்று பிரசங்கியார் சொல்கிறார் – நீதி. 13:22
வீடும் ஆஸ்தியும் – பிள்ளைகளுக்கு கொடுக்கப்படவேண்டும்
– நீதி. 19:14
தகப்பன் உயிரோடு இருக்கும் காலத்தில்
பிள்ளைகளுக்கு சொத்துக்களை பங்கிட்டு கொடுக்கவேண்டும் என்பது நியாயபிரமாணத்திலேயே
தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த கட்டளை – உபா. 21:16
உயிரோடு இருக்கும்போதே பங்கிடுவது
மரபும் கட்டளையுமாக இருந்தது - 2நாளா. 21:1-3, ஆதி. 25:6
பிள்ளைகளை சகல போதனையிலும் வித்தைகளிலும்
அறிவிலும் வளர்ப்பது பெற்றோரின் கடமை. அதை *உபகாரம் என்று சொல்வதல்ல – அது கடமை*.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக