புதன், 15 ஏப்ரல், 2020

#879 - எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே*. 2பேதுரு 2:19 - விளக்கவும்

#879 - *தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்; *எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே*. 2பேதுரு 2:19 - விளக்கவும்

*பதில்*
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மாஸ்டர் / தலைவர் / நடத்துநர் இருக்கிறார். எல்லோரும் ஒரு வகையில் வேறொருவருக்கு ஏதாவது வேலை அல்லது சேவை செய்கிறவர்கள் தான்.

எந்த ஆணோ பெண்ணோ அவர்களுடைய சொந்த சுய உரிமைதாரர் அல்ல (மத். 6:24; ரோமர் 6:13; ரோ. 6:16).

தவறான போதகர்கள் தேவனுடைய  கிருபையையும் தேவனுடைய பிரமானத்தையும் ஒன்றுக்கொன்று முரணாக அமைக்க முயற்சிக்கின்றனர். (2பேதுரு 2:1-3, 12-18)

ஆகவே இங்கே பேதுரு:
சட்டமும் அன்பும்,
உதவியும் உத்தமமும்,
பிரமானமும் விசுவாசமும்
ஒன்றுக்கொன்று முரணானது அல்ல ஆனால் தொடர்புடையவை என்பதைக் வெளிப்படுத்துகிறார்.

பிரமானத்தின் மீது நற்செய்தியை கொண்டு வென்றெடுப்பதற்கான வழி இது…

அன்பின் நெடுஞ்சாலையில் கடந்து போகும் போது வழிவிலகாமல் சாலையின் இருக்க இருபுறமும் கட்டப்பட்டிருக்கும் தடுப்பு கற்களை (kerbstones) போன்று இந்த தேவனுடைய கட்டளைகளைக்கடைபிடிக்கும் போது ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கை நிலைபெறுகிறது.

சுவிசேஷத்தினால் ஒருவன் இரட்சிப்படைந்திருக்க சுவிசேஷத்திற்கு கீழ்படியும்படி அவன் அடிமைப்பட்டிருக்கிறான்.

யோ. 8:34, ரோ. 6:12-22, கலா. 5:1, கலா. 5:13, 1பேதுரு 2:16

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக