#720 - *சாபமாக இருந்த சிலுவையை தேவன் நமக்கு ஆசீர்வாதமாய் மாற்றித் தந்தார். மறுபடியும் ஏன் இந்த சிலுவை குறித்து தியானிக்க வேண்டும்?*
மறுபடியும் நாமொரு சாப வாழ்க்கை வாழ தேவன் விரும்புவாரா? தேவன் நமக்காக எல்லாம் செய்துவிட்டார் என்று விசுவாசிக்கிறோம் அவருடைய
கிருபையினால் மீட்கப்பட்டோம் நீதிமான்கள் ஆக்கப்பட்டு இருக்கிறோம். மறுபடியும் ஏன்
இந்த உலக கவலை பாவ பழக்கவழக்கங்கள்? அவருடைய கிருபையினால் நித்திய மீட்பு கிடையாதா?
*பதில்*
சிலுவையில்
நடந்த நிகழ்வுகள் ஏராளம். அந்த பாடுகளை ஒருவர் புரிந்து கொள்ளாவிட்டால் தன்
இரட்சிப்பின் விலையை அறியமாட்டார். சிலுவையின் செய்தி சாபத்திற்கு அல்ல இரட்சிப்பிற்கு
வழிநடத்துகிறது –
1கொரி. 1:18
தேவன்
நமக்காக தன் குமாரன் மூலமாக இரட்சிப்பை சிலுவையின் வழியாக ஏற்படுத்தியிருக்கிறார்.
அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பெற்றுக்கொள்வதில்லை !!
இரட்சிக்கப்பட்டவர்கள்
மீண்டும் விழுந்து போக எல்லா வாய்ப்புகளும் உள்ளது. பரிசுத்தத்தின் மேல்
பரிசுத்தம் அடைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. தேவ கிருபையும் வல்லமையும் என்றும்
மாறாதது –
ஆனால் அதை தக்கவைத்துக்கொள்வது மனிதனின் கையில்.
*சிலுவையை
குறித்த சில சிந்தனை*:
மரணதண்டனை
விதிக்கப்பட்ட குற்றவாளியின் உயிரை எடுக்க ரோமர்களால் பயன்படுத்தப்பட்ட கருவி தான்
சிலுவை. ஏறத்தாழ 7 முதல் 15 நாள் வரை இந்த சிலுவையில் அறையப்பட்டவர்கள் உயிரோடு தொங்குவார்களாம்.
பறவைகள் பூச்சிகள் என்று சரீரத்தை கடித்து வேதனைப்பட்டு எல்லா இரத்தமும் இழந்து
மூச்சு திணறி இப்படி கொடூரமாக இறப்பார்களாம்.
சிலுவையை
குறித்து நாம் என்ன அறிந்திருக்கிறோம்?
*சிலருக்கு , சிலுவையை
கண்டால்* :
- தொட்டு
கும்பிட தோன்றும்
- கழுத்தில்
தொங்கவிட ஆசை கொள்வார்கள்
- அதை
வைத்து வழி பட விருப்பம் கொள்வார்கள்.
- அந்த
படத்தை கட்டிடத்திற்குள் கூட வைக்கக்கூடாது என்று சில கிறிஸ்தவ அமைப்பில் அதை உதறுகிறார்கள்.
- சிலுவை
அடையாளத்திற்கு வைத்திருந்தாலும் – அந்த இடம் விக்கிரகம் என்று சொல்பவர்களும் உண்டு.
வேதாகமத்தின்
படி – சிலுவையை எப்படி நாம் புரிந்து கொள்வது?
கோணங்கள்
வித்தியாசப்படுகிறது... பொறுமையாக
கவனிக்கவும்.
1) *சிலுவையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இது உங்களுக்கு என்ன முக்கியத்துவம் தருகிறது*?
பவுலைப்
பொறுத்தவரை, அவர் உலகத்திலிருந்து பிரிந்ததைக்
குறித்தது - கலாத்தியர்
6:14
அவருடைய
பிரசங்கத்தின் மையமாக இருந்தது - 1
கொரிந்தியர்
2:
2
இது
பலருக்கு புரியாத ஒன்று
– 1 கொரிந்தியர் 1:23
யூதாஸுக்கு
அது பணத்தைப் பற்றியது - யோ.
12:
4-6, மத்.
26:
15-16
பிலாத்துக்கு
அது - தன்னைக் காப்பாற்றுவதற்கான ஒரு கருவி - யோ. 19:15-16
சேனை
வீரருக்கு இது விளையாட்டு/ கேலி - மத். 27: 27-31; லூக். 23:11, யோ.
19:
23-24
இது
ஒரு தீவிரமான முக்கிய விஷயம் என்பதை அந்த நேரத்தில் அவர்கள்
மனதில் நுழையவில்லை - மத்தேயு 27: 50-54
2) *தேவனுடைய கண்ணோட்டங்கள்*
*பிதாவிடம்
அது நீதியை பூரணப்படுத்துவதாகும்*.
* இயேசுவின் இரத்தத்தால் நியாயப்படுத்தப்பட்டது - ரோமர் 5: 8-11
* இயேசு நமக்காக மரணத்தை ருசித்தார் - எபிரெயர் 2: 9
* அவர் நம்முடைய பாவங்களை சிலுவையில் கொண்டு சென்றார் - ஏசாயா 53: 5,11
* அவர் முன்மாதிரியாக இருந்தார் - அவர் நமக்கு எதிரான தேவனுடைய
கோபத்தைத்
திருப்பினார்
– 1 யோ. 4: 9-10
*குமாரனுக்கு
(இயேசு) அது
சமர்ப்பிப்பதைப் பற்றியது*:
* அவர் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் - எபிரெயர் 5: 7-9
* பிதாவின் சித்தத்திற்கு இயேசு சமர்ப்பித்தார் - மத்தேயு 26:39, 53-54
* அவர் சிலுவையைத் தாங்கினார் - எபிரெயர் 12: 2
* அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டார் - பிலிப்பியர் 2: 8-11
*கிறிஸ்தவரின் பார்வை*
ஒவ்வொரு
கிறிஸ்தவனுக்கும் அது இரட்சிப்பைப் பற்றியது
1. அவருடைய இரத்தத்தால் நமக்கு மீட்பைக் கொடுத்தார் - எபேசியர் 1: 7; 1பேதுரு
1:
18-19; வெளிப்படுத்துதல் 1: 5
2. அது நம்முடைய பாவங்களைக் கொன்றது - ரோமர் 6: 1-7
3. அது நம்மை தூய்மைப்படுத்தியது - வெளிப்படுத்துதல் 7:14
கிறிஸ்தவருக்கு அது ஒரு ராஜ்யத்தை வாங்கியது - அப்போஸ்தலர் 20:28
காப்பாற்றப்பட்டவர்களுக்கு அது தேவனுடைய
வல்லமையை நிரூபித்தது
– 1 கொரிந்தியர் 1: 18-24
அதை
அங்கீகரிக்காதவருக்கு
/
இழந்தவர்களுக்கு, சிலுவையின் செய்தி முட்டாள்தனம் - I கொரிந்தியர்
1:18
ஆனாலும், அந்த செய்தியை எப்படியும்
நாம் பிரசங்கிக்கிறோம் - 1கொரிந்தியர் 1:23
இந்த
உலக மனிதர்களுக்கு புரியாது - 1கொரிந்தியர் 2: 14-16
சிலுவையின்
செய்தியில் தேவனுடைய வல்லமை இருக்கிறது - ரோமர் 1:16
நாம்
கற்பிக்கும் எல்லாவற்றின் மையமும் இதுதான் - I கொரிந்தியர் 2: 1-2
மற்ற
ஜனங்கள் நம் கூடுகையை அடையாளம் கண்டு கொள்ள சிலுவையை பயன்படுத்துவது அடையாள
குறியாக மாத்திரம்
இருப்பதில் தவறு இல்லை. ஆனால்
– அதை
கண்டவுடன் ரோட்டில் போகிறவர்கள்
கையெடுத்து கும்பிட்டார்கள் என்றால் –
சிலை வணக்கத்தை நாமே உருவாக்க
காரணமாகி விடக்கூடாது !!
சிலுவையில்
கிறிஸ்து தொங்கின பின்பு தான் புதிய ஏற்பாடு, புதிய சகாப்தம், யூதர்
அல்லாத நாமும் தேவனை வணங்கவும் சுவிசேஷத்தின் மூலம் நாமும் தேவனுடைய
பிள்ளையாகும் பாக்கியம்
பெற்றோம்.
சிலுவையை
குறித்த செய்தியை சொல்லாமல்
– எந்த கிறிஸ்தவனும்
இருக்க முடியாதே !!
*சிலுவையை பார்க்கும்
போது – நமக்கு
நினைவில் வரவேண்டிய சில*:
அவமானம், ஏளனம், நிந்தை,
அது வரை மரணமே வந்தாலும் கூட இருப்போம்
என்று சொன்னவரும் அதோ கதியாக விட்டோடியது, கொடுமை, அநியாயம்,
சட்டவிரோதம், ஊரே ஒன்று கூடி எதிர்ப்பது,
அதிகாரிகளும் நியாயத்தை புரட்டிபோடுவது, பொய்
சாட்சிகள், நாம் வளர்த்தவரே
நம்மை காட்டி கொடுத்தது, ஊரை விட்டே வெளியே
தள்ளுவது – இப்படிபட்ட
பாடுகளை அநுதினமும் சுமந்து கொண்டு
– இயேசுவை
பின்பற்ற வேண்டும்
(மத் 10:38)
இதை
ஒன்றும் யோசிக்காமல் - சிம்பிளாக – ஒரு
சிலுவையை தங்கத்தில் செய்து கழுத்தில் தொங்கவிடுவதோ வருடத்திற்கு ஒருமுறை ஒலையிலும்
வெள்ளியிலும் செய்து உலா வரவோ சொல்லவில்லை. அது தேவ கோபத்தை மூட்டி விடலாம்..உபா. 4:23, 5:8, 1இரா. 14:9
சிலுவையை
குறித்து – இன்னும் ஏராளம்
எழுத வேண்டி உள்ளது
– முக்கியமானவற்றை
மாத்திரம் கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக