ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

#404 *கேள்வி* மூழ்கியிருந்து ஞானஸ்நானம் எடுத்தவர் மட்டுமே தான் அவருடைய பந்தியில் சேர வேண்டுமா ? விளக்குங்கள்

# 404 *கேள்வி* மூழ்கியிருந்து ஞானஸ்நானம் எடுத்தவர் மட்டுமே தான் அவருடைய பந்தியில் சேர வேண்டுமா? விளக்குங்கள். நான் CSI.  இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன் .

*பதில்* :
ஞானஸ்நானம் என்பது திருமுழுக்கு (தீத்து 3:5)
ஞானஸ்நானம் என்பது இறந்தவரை அடக்கம் செய்யும் முறை (ரோ. 6:3)

தற்கால கிறிஸ்தவ மத பாஷையில் சொல்ல வேண்டுமானால் ஞானஸ்நானம் என்பது ஒரு அடக்க ஆராதனை !!

நமக்கு எவ்வளவு இஷ்டமான மனதுக்கு அதிகம் பிடித்த நபர் மரித்தாலும் முழு சரீரத்தையும் மண்ணுக்குள் போட்டு மூடி விட்டு தான் வீடு திரும்புவோம்.

ரொம்ப வேண்டபட்டவர் என்பதால் கொஞ்சம் மண் எடுத்து மேலே தூவி விட்டு சரீரத்தை அடக்காமல் யாரும் வீட்டுக்கு வந்து விடுவது கிடையாது.

அப்படி செய்தால் 2 அல்லது 3வது நாளில் செத்த சரீரம் வீங்கி ஊரெல்லாம் நாறிவிடும்.

அது போல  - பாவத்திற்கு மரிக்கும் எவரும் ஞானஸ்நானத்தில் அடக்கம் பண்ணப்படவேண்டும் (தண்ணீரில்)

அடக்கம் முழுமையான முழுகுதல்.

ஞானஸ்நானம் என்ற வார்த்தை = Baptizo என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

பாப்டிசோ என்றால் முழுகுதல் என்று அர்த்தம்.

கிறிஸ்துவின் மரணத்தோடு நாம் மரித்தால்
அவர் அடக்கம் பண்ணப்பட்டது போல நாமும் அடக்கம் பண்ணப்படவேண்டும் (ரோ. 6:3, தீத்து 3:5, எபே. 5:26)

அவருடைய மரணத்தில் நாம் பூரணமாக பங்கெடுக்கவில்லை என்றால் ஞானஸ்நானம் எடுத்த முறை வேதத்தின் படி சரியா என்று நீங்களே உங்களை கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு *அத்தியாவசியமான அவசரமான* கேள்வி..

இந்தியாவில் இருக்கும் நம்முடைய அட்மின்களில் ஒருவரை உங்களுடன் பேச சொல்கிறேன். விருப்பம் இருந்தால் உங்களுக்கான தேவையான ஆவிக்குரிய உதவியை அவர் செய்வார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக