சனி, 10 ஆகஸ்ட், 2019

#326 - இஸ்லாமிய தெய்வம் அல்லா பற்றி சொல்லுங்கள் அய்யா

#326 - *இஸ்லாமிய தெய்வம் அல்லா பற்றி சொல்லுங்கள் அய்யா*.

*பதில்* :
*அல்லாஹ்* என்ற அரபிய வார்த்தைக்கு
*கடவுள்* என்பது தமிழ் அர்த்தம்.

தமிழ் வேதாகமத்தில் வழக்கமாக உபயோகபடுத்தப்படுவது
*தேவன்* என்ற வடமொழி சொல்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே *கிறிஸ்துவை குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை போல*:
*வேறு எவரை குறித்தும்* குறிப்பாக;
- திரு. முகமதை குறித்தோ (இஸ்லாமியர்கள் அவரை முகமது நபி என்றழைக்கிறார்கள். நபி என்றால் தீர்க்கதரிசி என்று தமிழ் அர்த்தம்)

- திரு. சித்தார்த்த கவுத்தமா வை குறித்தோ (புனை பெயர்: புத்தா)

எங்குமே சொல்லப்படவுமில்லை அது நிறைவேறவுமில்லை.

ஆனால் கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து இன்றைய வரைக்கும்  சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறியதை யாவரும் அறிவார்கள்.

அவர்களுடைய நம்பிக்கையை குறித்து நான் பேசுவதை விட அதை காட்டிலும் நம் கிறிஸ்துவில் இருக்கும் மேன்மையை கீழே பட்டியலிடுகிறேன்:

1-  இயேசுவும் (ஈசா நபி) ஆபிரகாமும் (இப்ராகிம்) மோசேயும் (மூசா) தேவனுடைய மனிதர்கள் என்றும் தேவனுடைய தீர்க்கதரிசிகள் என்றும் அவர்கள் புத்தகத்தில் (குரானில்) உள்ளது.

2- இயேசு மறுபடியும் வருவார் என்று சொல்கிறது.

3- இயேசு கன்னி மரியாள் (மரியம்) வயிற்றிலிருந்து பிறந்தார் என்றும் சொல்கிறது. (மரியம் சூரா 19, 16-34, அல்இம்ரான் 3, 45-53)

4- காபிரியேல் தூதன் மரியாளிடம் வந்து அவள் கர்ப்பத்தை குறித்து சொன்னதையும் சொல்கிறது

5- ஆரம்ப நாட்களில் சாத்தான் கையிலிருந்து குழந்தை இயேசுவையும் மரியாளையும் தேவன் பாதுகாத்தார் என்று சொல்கிறது

6- இயேசுவின் பிரசங்கங்கள் அற்புதங்கள் மரித்தோரை உயிரோடெழுப்பியது போன்றவை குரானில் சொல்லப்பட்டுள்ளது.

எந்த காரணத்திற்காகவும் ஒருவரை கொலை செய்வது பாவம் என்று வேதம் சொல்கிறது.

இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்.

அவர் ஒருவரே நம் பாவங்களை மீட்டெடுக்கும்படி பலியானவர்.

அவர் மரணத்தை எல்லோரும் அறிந்தார்கள். ரோம அரசாங்கமும் அங்கீகரித்திருந்தது.

உயிரோடு எழுந்ததை 500க்கும் மேற்பட்டவர்கள் கண்டார்கள். (1கொரி. 15:5-6)

இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்தவர்.
அப்போஸ்தரருடைய கண்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போது வானத்திற்கு ஏறி சென்றவர்.

இயேசு கிறிஸ்து தான் வழி, சத்தியம், ஜீவன் என்றும், அவர் மூலமாகத் தவிர வேறு யாரும் பிதாவிடம் வர முடியாது என்றும் கூறுகிறார் (யோவான் 14: 6).

இப்படிபட்ட நிச்சயத்தை – நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும் தீர்க்கமான நிச்சயமான வழியை வேறு எங்கு காணமுடியும் ??

*தேவனிடத்திலிருந்து வந்தவரே தேவனை அடையாளபடுத்தமுடியும்*.

இயேசு கிறிஸ்துவே – தேவனிடத்திலிருந்து வந்தவர். (யோ. 6:38, மத். 3:17)

அரபிய மொழியில் அல்லாஹ் என்று கடவுளை உச்சரித்தாலும் வானத்திலிருந்து இறங்கி வந்த இயேசு கிறிஸ்துவானவர் நமக்கு அடையாளபடுத்தியவரே பிதாவானவர்.

கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே பிதாவை சேர முடியும். (யோ. 14:6)

கிறிஸ்து தான் பிதா என்றும் பிதா தான் கிறிஸ்து என்றும் குழம்பி கொள்ளவேண்டாம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக