திங்கள், 5 ஆகஸ்ட், 2019

#320 - இரகசிய வருகை இருக்கா இல்லையா. பதில் சொல்லுங்கையா

#320 - *இரகசிய வருகை இருக்கா இல்லையா?*. பதில் சொல்லுங்கையா

*பதில்* :
(வேதத்தை அருகாமையில் வைத்துக்கொண்டு குறிப்பிடப்படும் வசனங்களை ஒப்பிட்டு முழுமையாக பொறுமையுடன் அமைதலாக படிக்கவும்)

இயேசு கிறிஸ்து முதலாவதாக மாம்சத்தில் வந்தார்

மூன்றாவது முறையாக வருவார் என்று - எந்த மொழி பெயர்ப்பிலும் / வேதத்திலும்  கிடையாது.

அவர் இரகசியமாக ஒரு முறையும் – வெளியரங்கமாக இன்னொரு முறையும் வருவார் என்று சொல்வதற்கான ஆதாரம் வேதத்தில் இல்லை.

லெஃப்ட் பிஹைன்ட் (Left Behind) என்ற ஒரு பிரபலமான புத்தகம் Tim LaHaye & Jerry B Jenkins என்றவர்களால் சுமார் 1995ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2000மாவது ஆண்டில் இந்த புத்தகம் சினிமா வடிவம் பெற்று உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இந்த புத்தகம்/படம் கிறிஸ்துவின் வருகையின் நிகழ்வுகளை கற்பனை வடிவத்தில் கூறுவதாகக் தெரிவிக்கிறது.

இந்த கற்பனையான தொடரின் கரு “Rapture” (பேரானந்தம்) என்பதால், அதன் உண்மைத்தன்மையை தீர்ப்பதற்குப் 1 யோ. 4:1ன் அடிப்படையில் சோதித்தறியலாம்.

*அந்த புத்தகத்தின் சொல்லப்பட்டவைகளின் அடிப்படையில்* - *வரையருக்கப்பட்ட ஆயிரவருட அரசாட்சி*யின் நிகழ்வுகள்:
பல வேறுபாடுகள் தகவல்களில் இருந்தாலும் – சாராம்சமாக பின்வரும் நிகழ்வுகளைக் இந்த புத்தகம்/காட்சிகள் கொண்டுள்ளது:

1-*பேரானந்தம்* Rapture (இரகசிய வருகையின் மிகுந்த மகிழ்ச்சி):
உண்மையுள்ளவர்களை உலகத்திலிருந்து திடீரென நீக்குதல்/எடுத்துக்கொள்ளுதல்

2-*உபத்திரவம்*
*விடப்பட்டவர்கள் (தொடரின் பெயர்) ஏழு ஆண்டுகள் இன்னல்களை அனுபவிப்பார்கள்.

*இதில் ஒரு சிறு பகுதி ஜனங்கள் தேவனிடமாக மனந்திரும்பி, உபத்திரவப்படுத்துபவர்களின் இலக்குகளாக மாறி அவர்கள் இறுதி வருடங்களின் போருக்கு தயாராகிறார்கள்.

3-*அந்தி-கிறிஸ்து*
கிறிஸ்து எதிர்த்த அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உலக சர்வாதிகாரி/ஆட்சியாளர் எழுவார்.

4-*அர்மகெதோன்*
உபத்திரவ காலத்தில் மனந்திரும்பினவர்களுக்கும் எஞ்சியிருக்கும் தீயோருக்கும் இடையிலான இறுதிப் போர். அங்கு சாத்தானின் படைகள் இறுதியாக தோற்கடிக்கப்படுகின்றன.

5-*ஆயிர வருடஅரசாட்சி*
கிறிஸ்து தன் விசுவாசிகளுடன் திரும்பி ஆயிரம் (1000) ஆண்டுகளுக்கு பூமியில் ஒரு கற்பனாவாத / மிக மகிழ்ச்சிகரமான / அமைதியான ஆட்சியை நிறுவுகிறார்.

ஆட்சியின் முடிவில், உண்மையுள்ளவர்கள் நித்தியத்திற்காக பரலோகத்தில் நுழைகிறார்கள்.

மேற்கூறிய இந்த நிகழ்வுகளின் வரிசை அடிப்படையானது Left Behind என்ற இந்த நாவலில் சொல்லப்பட்டவை. வேதத்தின் அடிப்படையில் பல முரண்பட்ட தகவல்களை கீழே பட்டியலிடுகிறேன்:

1-பேரானந்தம் என்கிற (Rapture) நிகழ்வு இறுதி காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று இந்த புத்தகம் தெரிவிக்கிறது.

2. இரகசியமாக திடீரென்று பரிசுத்தவான்களை கொண்டு போவதாக சித்தரிக்கிறது.

   a. மத்தேயு 24: 40-41 அடிப்படையில் - சிலர் மட்டுமே கூடினர்
 
   b. 1 தெச. 4:15-17ன்படி மேகத்தில் அவருடன் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம் என்றே உள்ளது - திடீரென பூமியிலிருந்து மறைவதாக சொல்லப்படவில்லை

3. அதைத் தொடர்ந்து உபத்திரவ காலம் இருப்பதாக சித்தரிக்கிறது இந்த புத்தகம்.

    a. மத்தேயு 24:21-22ன்படி நீண்ட காலம் நீடிக்காத ஒரு பெரிய உபத்திரவ நாட்கள் என்று பார்க்கிறோம்.

4. அந்தி-கிறிஸ்துவின் வருகை இந்த சம்பவங்களுக்கு பின்னர் வருவதாக ஒருவர் எழுவதாக சித்தரிக்கிறது இந்த புத்தகம்.

    a. வேதமோ மத்தேயு 24:24ல் கள்ள கிறிஸ்தவர்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்புவார்கள் என்று வேதம் சொல்கிறது.

*மேற்கூறியவைகளை வேதத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது எழும் மாறுபாடுகள்*:

இந்த புத்தகக் கோட்பாடுகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அவர்கள் கூறினாலும், பெரும்பாலான கருத்துக்கள்  நான்கு சுவிசேஷ புத்தகங்களிலிருந்து வந்தவை என்பதை அறியமுடியும்.

*முதலாவது* - அவர்களின் கால அளவு தவறானது.
மத்தேயு 24:34ன் படி பார்க்கும் போது இயேசு பேசிக்கொண்டிருக்கும் அந்த தலைமுறைக்கு இது நடக்கும் என்று கூறினார்.

*இரண்டாவது* - அவர்கள் பயன்படுத்தும் ஜனக்கூட்டம் தவறானவர்கள்.
ஆயிரவருட அரசாட்சிக்குள் நுழையும் அனைவரும் அமெரிக்கா, (பழைய) சோவியத் யூனியன் அல்லது சில நாடுகள் மத்திய கிழக்குப் பகுதியில் போர் தொடுக்கின்றன.

கழுகுகள் பிணங்களைச் சுற்றி வரும் என்று இயேசு சொன்னார் - மத்தேயு 24:28, லூக்கா 17: 34-37

பிணங்கள் என்பது – ஆத்துமாவில் மரித்துப் போன யூதர்களின் தேசத்தைக் குறிக்கிறது.

கழுகுகள் என்பது ரோமானியப் படைகளைக் குறிக்கும், இது கழுகை அதன் சின்னமாகப் பயன்படுத்தியது.

ரோமானியர்களால் இஸ்ரேல் தேசம் கி.பி 70ல் அழிக்கப்பட்டதைக் இது குறிக்கிறது.

இக்காலத்தில் அமெரிக்காவும் கழுகுகளைப் அதன் சின்னமாகப் பயன்படுத்துவதால், நவீனகால தீர்க்கதரிசிகள் இந்த குறிப்புகளை அமெரிக்காவிற்கு ஒப்பிடுகின்றனர்.

*மூன்றாவது* - நிகழ்வு தவறானது.
பேரானந்தம் ஒரு இரகசியமான / அமைதியான நிகழ்வாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் 1 தெச. 4:13-18ஐ மீண்டும் படியுங்கள். 16வது வசனம் ரகசியமாக வருவதை சொல்கிறதா?

கடைசி எக்காளத்தின் சத்தத்தோடு அவர் வருகிறார் – 1 கொரி. 15:52

எருசலேமின் அழிவு கூட அப்படி அமைதியாக நடந்துவிடவில்லை. மனுஷகுமாரன் வரும் போது மின்னல் எங்கும் பிரகாசிக்கும். மத்தேயு 24:27

*நான்காவது* - காலம் தவறானது
இந்த புத்தகத்தில் / மக்கள் கூறுவது போல் ஏழு ஆண்டுகள் அல்ல - கிறிஸ்து திரும்பி வரும்போது, ​​நாம் எப்போதும் கர்த்தருடன் கூடவே இருப்போம் – 1 தெச. 4:17

நீதிமான்களை முதலில் எடுப்பதாகவும் பின்னர் இரண்டாவது முறையாக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு துன்மார்க்கரை அழிக்க வருவதாகவும் இப்படி அவர்கள் கூற்றுப்படி இரண்டு வருகைகளை சித்தரிக்கின்றனர்

ஆயினும், வேதமோ நமக்கு 2தெச 2:8ன்படி கிறிஸ்துவின் வருகையில் (ஒரே முறை) அந்த அக்கிரமக்காரன் கொல்லப்படுவதை பார்க்கிறோம். இரகசியமாக அல்ல இயேசு கிறிஸ்து வருவதை அனைவரும் பார்ப்பார்கள் – மகா வெளிச்சத்தில் வருகிறார்.
உபத்திரவத்தின் ஆரம்ப காலம், உபத்திரவத்தின் முடிவு மற்றும் 1,000 ஆண்டு ஆட்சியின் முடிவில் என்று இந்த கதையின் படி மக்களுக்கு இரண்டு, அல்லது மூன்று, உயிர்த்தெழுதல்கள் உள்ளது போல சித்தரிக்கின்றனர்.

ஒரே உயிர்த்தெழுதலைப் பற்றி வேதம் பேசுகிறது - யோ. 5:28-29

எருசலேமின் அழிவைக் கையாளும் நிகழ்வுகளை கிறிஸ்துவின் வருகையுடன் கலப்பதன் மூலம் பெரும்பாலான குழப்பங்கள் உருவாகின்றன.

ஒற்றை வினாடியில் வரும் நிகழ்வுகளை பல நிகழ்வுகளாகப் பிரிப்பதன் மூலம் மேலும் குழப்பத்தை சித்தரிக்கிறது.

*கிறிஸ்துவின் ராஜ்யத்தைக்குறித்து அடிப்படையாகவே தவறான புரிதலை கொண்டது இந்த ஆயிரவருஷ / இரகசிய வருகை கோட்பாடுகள்*.

இவர்கள் கீழ்வரும் கூற்றின்படி பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் இன்னும் நிறைவேறாதவை என்றாகிவிடுகிறதே !!

   1. ஏசாயா 2: 2-4 - எருசலேமில் நடக்கும் சம்பவம் என்றால் – இந்த வசனப்பகுதி இன்னும் நிறைவேறவில்லையா?

   2. ஏசாயா 11: 1-10 - துன்மார்க்கனின் அழிவுக்கும் சமாதான ஆட்சியை எதிர்காலத்தில் வருகிறதென்றால் – இந்த வசனப்பகுதி இன்னும் நிறைவேறவில்லையா?  

   3. தானியேல் 2:44 - அழிக்க முடியாத ஒரு ராஜ்யம் இனி வருகிறதென்றால் -  – இந்த வசனப்பகுதி இன்னும் நிறைவேறவில்லையா?

*இந்த தீர்க்கதரிசனங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டன என்பதை நாம் அறியவேண்டும்*.

யோவான் 18:36 - தம்முடைய ராஜ்யம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல என்று இயேசு சொன்னார்

லூக்கா 17: 20-21 - இராஜ்யம் எப்போது வரும் என்று கேட்டபோது, ​​அது வெளிப்புற அடையாளங்களில் காணப்படுவதில்லை, ஆனால் அவர்களுக்குள்ளேயே காணப்படுவதாக இயேசு சொன்னார்.

மாற்கு 1:15 - இராஜ்யத்திற்கான நேரம் கிறிஸ்துவின் காலத்திற்கு சமீபத்தில்  இருந்தது.

மாற்கு 9:1 – இராஜ்ஜியமானது அந்த தலைமுறைக்குள் நிறுவப்படும் என்பதை இந்த வசனம் தெளிவுப்படுத்துகிறது.

இயேசு ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் தேவன் அவருக்கு அதிகாரம் கொடுத்தார் என்று பரிசுத்த ஆவியானவரைப் பெற்றபின் பேதுரு அறிவிக்கிறார் - அப்போஸ்தலர் 2: 33-36.

ஆண்டவர் என்ற சொல்லுக்கு நாம் மிகவும் பழக்கமாகிவிட்டோம். ஆனால் அந்த வார்த்தைக்கு இராஜா என்று பொருள் என்பதை நாம் மறந்து போனோம்.

ஆம் - பிதாவாகிய தேவன் - இயேசுவை கிறிஸ்துவையும் ராஜாவுமாக்கினார்.

கொலோசெயர் 1:13 – சபையைப் பற்றி பேசுகையில், பவுல் நம்முடைய பாவங்களிலிருந்து மீட்கப்பட்டபோது கிறிஸ்துவின் *இராஜ்யத்திற்குள் மாற்றப்பட்டோம்* என்றார்.

இயேசு மீண்டும் வரும்போது, ​​அவர் தமது சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுப்பார் – 1 கொரி. 15:23-26

மரணம் அழிக்கப்படும் வரை அவர் தற்போது ஆட்சி செய்கிறார்.

இறந்தவர்களின் உயிர்த்தெழுதலில் அனைவரின் மரணம் அழிக்கப்படும் - 1 கொரிந்தியர் 15:52-54

இந்த ஆயிர வருட அரசாட்சி / இரகசிய வருகை என்ற கோட்பாடு மக்களுக்கு தவறான நம்பிக்கையை ஊட்டிவிட்டது.

இயேசு திரும்பிய பிறகும், பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்கு நேரம் இருக்கிறது என்று அவர்கள் கற்பிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.

இயேசு எந்த நேரத்திலும் வரலாம் என்று வேதம் சொல்கிறது.

அவர் வரும்போது, ​​நாம் தயாராக இருக்க வேண்டும் - 2 பேதுரு 3:10-14.

மூன்றாவது முறையாக வருவார் என்று - எந்த மொழி பெயர்ப்பிலும் / வேதத்திலும்  கிடையாது.

அவர் இரகசியமாக ஒரு முறையும் – வெளியரங்கமாக இன்னொரு முறையும் வருவார் என்று சொல்வதற்கான ஆதாரம் வேதத்தில் இல்லை.

*இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையில்*:
1- எல்லா ஜனங்களும் பார்ப்பார்கள் (வெளி. 1:7, 6:15-17, மத். 24:30, லூக்கா 23:28-30) ... இரகசியமாக அல்ல பகிரங்கமாக அனைவரும் பார்க்கமுடியும்.

2- எதிர் பாராத விதமாக – சட்டென்று நொடிபொழுதில் இயேசு கிறிஸ்து வருவார். (மத். 24:44)

3- வானங்கள் அழியும் – பூதங்கள் (காற்று/நெருப்பு/தண்ணீர்/பாறை/கல் என்று அனைத்தும்) நெருப்பினால் எரிந்து உருகிப்போம் (2பேதுரு 3:10) - இரண்டாவது வருகையிலேயே எல்லாம் அழிந்து விடும்போது - மீதம் யாருமே இருக்க மாட்டார்கள்.

4- பூமியும் அதிலுள்ள சகலவைகளும் சகல கிரியைகளும் கட்டிடங்களும் பொருள்களும் அழிந்துபோகும் (2பேதுரு 3:10) ... இரகசியமாக அல்ல பகிரங்கமாக அனைவரும் பார்க்கமுடியும்.

5- கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; (2தெச. 4:16) .. இரகசியமாக அல்ல பகிரங்கமாக அனைவரும் பார்க்கமுடியும்.

6- அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (2தெச. 4:16)

7- பின்பு, உயிரோடிருக்கும் நாமும் ஒரு நொடி பொழுதில் மறுரூபப்படுவோம். (2தெச. 4:17, 1கொரி. 15:51)

8- அனைவருக்கும் புதிய அழிவில்லாத சரீரம் கொடுக்கப்படும் (1கொரி. 15:44)

9- *அனைவரும்* கிறிஸ்துவுக்கு முன் நிற்போம். அப்போது வசனத்தின்படி அனைவரும் நியாயந்தீர்க்கப்பட்டு அவரவர் செய்கைபடி நரகமும் பரலோகமும் அனுப்பி வைக்கப்படுவார்ககள் (யோ. 12:48, சங். 9:17)

*இரகசியமாக அவர் ஏன் வரவேண்டும் – நம் லோக்கல் பாஷையில் சொல்லவேண்டுமானால் – தாரை தப்பட்டையோடு பகிரங்கமாக அவர் வருவார் என்று வேதம் தெளிவாய் சொல்கிறதே !! மாரனாதா* !! 1தெச. 4:16
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
இந்த பதிலுக்கான கூடுதல் தகவல்கள் ஆதாரங்கள் – யூட்யூப், விக்கிபீடியா, கிறிஸ்துவின் சபையார் வலைதளத்திலும் சேகரிக்கப்பட்டது.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக