#280
கேள்வி
அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?
தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. மாற்கு 10:18
இதை இயேசு கிறிஸ்து சொல்ல காரணம் என்ன?
பதில்
மனிதனை பிரியப்படுத்தி தான் நல்லவன் என்று மற்றவர் அறிய
வேண்டும் என்று அநேகர் முற்படுகிறார்கள்.
(மாற்கு 10:17)
1- ஓடி வருகிறான்
2- முழங்கால் படியிடுகிறான்
3- நல்லவர் என்று புகழுகிறான்
பின்னர் தன் கேள்வியை கேட்கிறான் !!
அவன் செய்கையை பார்த்து சாதாரண மனிதரானால் – ஐயோ நீ எவ்வளவு
பணிவோடு இருக்கிறாய் – மற்றவரை மதிக்க தெரிகிறது – பண்பு இருக்கிறது என்று அவனை ஆசீர்வதித்து
அனுப்பியிருப்பார்கள்.
இயேசுவோ அனைவரின் உள்ளத்தையும் அறிந்தவர் : என்னை நீ
புகழ்வதால் உனக்கு பிரியமுள்ள வார்த்தை வரும் என்று நினைக்காதே – தேவனை தவிர
ஒருவனும் நல்லவன் இல்லை என்பது உண்மையல்லவா (ரோ 3:12, 1சாமு 2:2, சங் 86:5, 119:68) தான்
மாம்சத்தில் வந்த தேவன் (1யோ4:2, ரோ 9:5) என்பதை அவன் அறிந்திருந்தால்
இப்படி முகஸ்துதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை அறிந்து அவர் சொன்ன வார்த்தை
இது....
உன் சொத்துக்களையெல்லாம் விற்றுவிடு என்றார் – அவன் வருத்தத்தோடு
போய்விட்டான் !! ஆஸ்தி வைத்துக்கொள்வது தவறல்ல – அதில் பற்றுதலாய் இருப்பதே தவறு
(1தீமோ 6:9-10)
Eddy Joel
+968
93215440 / joelsilsbee@gmail.com
- கேள்வி & வேதாகம பதில்கள்
- நீங்களும் இணைந்து கொள்ள :
Group 2:
Group 1:
** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில்
காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக