வெள்ளி, 12 ஜூலை, 2019

#268 - எண் 666 என்பது எதை குறிக்கிறது?

#268 - *எண் 666 என்பது எதை குறிக்கிறது?* வேதத்தின் படி விளக்கம் தாருங்கள். வெளிபடுத்தின விசேஷம் 13:16-18ல் சொல்லப்பட்ட 666ஐக் குறித்து விளக்கவும்.

*பதில்*:

வசனம்: வெளி. 13:16-17 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது.

13:18 இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

வெளிபடுத்தின விசேஷ புஸ்தகத்தில் சொல்வப்பட்டவைகளை நாம் *வெளிபடுத்தி புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்*.

நாட்டு ஜனங்களுடன் கலக்கக்கூடாது என்று அரசாங்கத்தால் தண்டனை பெற்று தனித்து விடப்பட்ட யோவான் அப்போஸ்தலர் பத்மூ தீவில் சாகும் வரை தனித்து விடப்பட்டார். (வெளி 1:9)

ஆசியாவில் உள்ள 7 சபைகளுக்கு சொல்ல வேண்டியதை ஆவியானவர் யோவான் அப்போஸ்தலனுக்கு மறைமுகமாக சொன்ன, அந்த புத்தகத்தில் எழுதப்பட்டவை ஏறத்தாழ 95% மறைக்கப்பட்டு எழுதப்பட்டவை. அவைகளை டீகோட் செய்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது குறியீட்டு / சமிஞ்கை மொழியில் எழுதப்பட்டவைகளை நாம் சரியாக அர்த்தம் கொள்ளாவிடில் தவறான அர்த்தத்தை நாம் புரிந்து கொண்டு தவறான பாதையில் நாம் அடியெடுத்து வைத்து விடுவோம்.

வேதாகமத்தை நாம் நிதானமாக பகுத்து படிக்க வேண்டிய கட்டளை பெற்றிருக்கிறோம் (2தீமோ. 2:15)

இந்த புத்தகம் யாருக்காக எழுதப்பட்டதோ (வெளி 1:4) அவர்கள் சீசரை வணங்க மறுத்தும் அவரின் பாவ செயலுக்கு உடன்பட மறுத்ததினால் மிகுந்த துன்பத்திற்குள்ளானவர்கள்.

வலு சர்ப்பம் / அதாவது சாத்தான் (வெளி 13: 2,4) கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் போரிடுவதற்கு "மிருகத்திற்கு" அதிகாரம் அளித்திருந்தது (வெளி 13: 7). அதன் விளைவாக பலரும் அடிபணிந்தார்கள் (வெளி 13: 4).

மிருகம் என்பது ரோமானியப் பேரரசை குறிப்பதற்கு போதுமான விளக்கமாகும். இது சுமார் 64 முதல் 313 கிபி வரை கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியது. ரோம் நகரம் பெரும் தீயில் எரிந்து கொண்டிருந்த போது (64 கிபி), அந்த நேரத்தில் பேரரசரான நீரோ, கிறிஸ்தவர்கள் மீது பழி சுமத்தினார் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆரம்ப துன்புறுத்தலுக்குப் பிறகு (தன் தோட்டத்தை இரவில் வெளிச்சம் கொடுப்பதற்கு கிறிஸ்தவர்களை பிடித்து உயிரோடு எரித்தார் என்பது சரித்திரம்) கிறிஸ்தவர்கள் ஒரு குறுகிய கால அமைதியை அனுபவித்தனர், இது டொமிஷியன் பேரரசர் (81-96 கிபி) கடவுளின் ஊழியர்களை மீண்டும் துன்புறுத்துவதைத் தொடங்கியபோது முடிந்தது.

313 கிபி ஆண்டில், கான்ஸ்டன்டைன் பேரரசர் கிறிஸ்தவத்தை சட்டப்பூர்வமாக்கினார், இதனால் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் நீடித்த ஒரு தீய கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

வேதாகமத்தில் குறிக்கப்பட்ட ஒவ்வொரு எண்களும் அர்த்தமுள்ளவை.  உதாரணத்திற்கு 7 என்பது முழுமையை குறிக்கிறது. 10 என்பது நிறைவை குறிக்கிறது. 4 என்பது உலகத்தை குறிக்கிறது. (வெளி 1:4,11-13,16,20; 5:1,6)

7க்கு குறைவாக இருப்பதால் 6ம் எண் குறைவு / முழுமையடையாதது / மரணத்தை /இறப்பை குறிக்கிறதாயிருக்கிறது.

ஆக 3முறை 6ஐ சொல்லும் போது 666 என்பது முழுமையான குறைவுதன்மையுடையது அல்லது முழுமையான மரணம் / முழுமையான இறப்பை குறிக்கிறது.

இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு (வெளி 13:18)

ரோமானியப் பேரரசு மற்றும் அந்த "மிருகத்தை" (அதன் சீசர்கள் மற்றும் பொய்யான கடவுள்களுடன்) வணங்க விரும்பியவர்கள் யாவரும் முற்றிலும் முழுமையற்றவர்கள் / முற்றிலும் குறைவானவர்கள் / முற்றிலும் மரணத்திற்குறியவர்கள் என்பதை காண்பிக்கிறது.

இன்று, 666 என்பது இந்த உலகத்தின் தவறான மதங்களைப் பின்பற்றி கிறிஸ்து இல்லாமல் வாழ விரும்பும் அனைவரின் எண்ணிக்கையாகும். கிறிஸ்துவுக்கு சேவை செய்யாமல் கிறிஸ்துவின் போதனையை கைகொள்ளாமல் சொந்த பிரியமான ஆராதனைகளையும் கட்டளைகளையும் நமக்கு நாமே வகுத்து கொண்டு வாழ்பவர்கள் - முற்றிலும் முழுமையற்றவர்கள்! (Completely Incomplete / நிறைவான அல்லது முழுமைபெற்ற குறைசாலிகள் !!)

666 என்பது கிறிஸ்து இல்லாமல் வாழும் அனைவரையும் விவரிக்க போதுமான எண்ணிக்கையாகும், ஏனென்றால் "அனைவரும் பாவம் செய்து கடவுளின் மகிமையைக் இழந்து விட்டார்கள்" (ரோமர் 3:23).

நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நம்முடைய சொந்த மனித தகுதியின் படைப்புகளின் மூலம் நாம் ஒருபோதும் தேவனுடைய மகிமையை (அதாவது அவருடைய பரிசுத்தத்தை) அடைய மாட்டோம்.

பாவம், மற்றும் பாவத்தின் காரணமாக தேவனிடமிருந்து பிரிதல் என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவான பிரச்சினை.

எனவே, 666 க்கும்  மைக்ரோசிப்கள், பார் குறியீடுகள், ரஷ்யா, சீனா, அணு ஆயுதங்கள், கொரோனா ஊசி, ரேஷன் கார்டு, சர்வதேச நாணய நிதியம் என்று தங்கள் இஷ்டத்திற்கு சுய கற்பனை வளத்தால் மக்கள் கொண்டு வரும் எண்ணற்ற அபத்தமான விளக்கங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இயேசு கிறிஸ்து இல்லாமல் நாம் ஒருபோதும் முழுமையடைய முடியாது (யோ. 15: 5)
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

1 கருத்து:

  1. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர

    :::வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.:::

    intha vasanathukkum chip,card sammantham illaiyaa...

    பதிலளிநீக்கு