#257
கேள்வி:
ஆராதனையின் போது பாடலின் முடிவில் சீரற்ற (டப டப டப டப....) என்ற
கைத்தாளம் சரியா? இதை குறித்து ஊழியக்காரரிடம் கேட்ட போது
சங்கீதம்150:5 மேற்கோள் காட்டுகிறார். அதில் போரோசை என்பது சீரற்ற கைத்தாளத்தை
சுட்டிக்காட்டுகிறதா?
இவை குறித்து
தெளிவுபடுத்துங்கள்...
பதில்:
சங்கீதம் 150:5ல் வரும் கைதாளங்கள் என்பது – நம் இரு கையால்
அடிக்கும் சப்தத்தை குறிக்கவில்லை !! 😊
மூல எபிரேய பாஷையில் சேலாட்ஸால் என்ற வார்த்தையின் தமிழ்
அர்த்தம் ஜால்ரா !! ஆங்கிலத்தில் அதற்கு
சிம்பால்ஸ் என்று சொல்வர்.
டிரம்ஸ் செட்டில் தகரம் போல 2அடி வட்டத்திற்கு வெண்கலத்தில்
வைத்து “டாங்” என்று அடிப்பார்களே – அதை குறிக்கும் வார்த்தை !!!
நாம் கிறிஸ்தவர்கள்.
கிறிஸ்துவின் மரணத்தோடு – மோசேயின் பிரமானம் முடிவுற்றது (ரோ
10:4).
ஆராதனையில் (தொழுகையில்) கை தட்டலுக்கே இடமில்லை !!
புதிய ஏற்பாட்டு ஆராதனை முறையில் – எங்குமே வேதாகமத்தில் கைதட்டலை
பார்க்கமுடியாது !!
ஆகவே சங்கீதம் 150:5ன் முறையை கிறிஸ்தவர்கள் பின்பற்ற
முடியாது. அந்த சட்டம் காலாவதியாகிவிட்டது.
இப்போதும் அது வேண்டும் என்று கடைபிடிப்பவர்கள் தங்களுக்கு
கேடு வருவித்து கொள்கிறார்கள் (கலா 3:10)
நன்றி
Eddy
Joel
+968
93215440 / joelsilsbee@gmail.com
- கேள்வி & வேதாகம பதில்கள்
- நீங்களும் இணைந்து கொள்ள:
Group 2:
Group 1:
** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில்
காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக