வெள்ளி, 28 ஜூன், 2019

#245 - ஏன் கிறிஸ்தவர்கள் இந்த உடன்படிக்கையான விருத்தசேதனம் பைபிள்படி செய்வதில்லை?

#245 - *ஏன் கிறிஸ்தவர்கள் இந்த உடன்படிக்கையான விருத்தசேதனம் பைபிள்படி செய்வதில்லை?* பைபிளை பின்பற்றுகிறோம் என்று தங்களை கூறிக் கொள்கிறீர்களா?

*பதில்:*
கிறிஸ்தவம் என்பது – அர்த்தமுள்ளது. கிறிஸ்தவன் தன் வாழ்க்கையை வேதாகம காலத்தின் படி அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

யார் – யாருக்கு – எப்போது – எந்த காலத்தில் சொல்லப்பட்டது என்பதை புரிந்து கடைபிடிக்க வேண்டும். வேதாகமம் இரண்டு பொிய பிரிவுகளாக கொண்டது.

கிறிஸ்துவின் காலத்திற்கு பின் உள்ள சட்டங்கள் – கிறிஸ்துவின் காலத்திற்கு முன் உள்ள சட்டங்கள் என்று பிரித்து நாம் பார்க்கவேண்டும்.

இந்தியர்களாகிய நாம் – வேறு நாட்டிற்கு போனதும் – அந்த நாட்டு சட்டத்தை தான் பின்பற்றுவேண்டிய அவசியம். மாறாக நான் இந்தியன் – இந்திய நாட்டு சட்டபடி வாழ்வேன் என்று கூற முடியாது.

அது போல கிறிஸ்தவனாக இருப்பவர்கள் – கிறிஸ்துவின் கட்டளையை மாத்திரம் பின்பற்றவேண்டும் – மோசேயின் பிரமானத்தை அல்ல !!

பதிலுக்கு வருவோம் : ஆதியில் தேவன் கொடுத்த கட்டளைகளை கவனிக்கும் போது அர்த்தமற்றவைகளாக தோன்றினாலும் அதற்கான காரணத்தை அவர் வெளிப்படுத்திய போது அது மிக அத்தியாவசியம் என்பதை மனிதன் புரிந்து கொண்டான்.

இடைவிடாமல் தூபம் காட்டவேண்டும் என்பது இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த கட்டளை – நித்திய காலமாய் காட்ட வேண்டும் என்றார் (யாத். 30:7-8).  யார் எப்படிப்பட்ட தூபம் காட்டவேண்டும் என்பதை கண்டிப்பாக வலியுறுத்தினார்.

பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் – அது ஏன் என்பதை காணமுடிகிறது (சங். 141:2)

அது போல – இஸ்ரவேல் ஜனங்களுக்கும் தேவனுக்கும் இடையேயான உடன்படிக்கை என்று (ஆண்களின் நுனித்தோலை வெட்டுவது) விருத்தசேதனத்தை ஏற்படுத்தினார். தலைமுறை தலைமுறையாக எல்லா ஆண்களுக்கும் செய்யவேண்டும் என்றார். செய்யபடாதவன் கொலை செய்யப்படவேண்டும் என்றும் சொன்னார். ஆதி. 17:10-14

இந்த செயல் – இஸ்ரவேலர்களுக்கும் தேவனுக்கும் இடையேயான உடன்படிக்கை.

பல ஆண்டுகளுக்கு பின்பதாக இப்படிபட்ட உடன்படிக்கை ஏன் என்பதை தேவன் வெளிபடுத்தினார்.

லேவி. 26:40-42 அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி,  அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்த சேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால், நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.

ஆகவே – விருத்தசேதனம் இல்லாமை என்பது – கீழ்படியாமையை  அல்லது வணங்கா கழுத்துள்ள ஸ்திரமான பாவத்தை காண்பிக்கிறது.

வெளியரங்கமான செயலை விருத்தசேதனமானது காண்பித்தாலும், உண்மையில் இருதயத்தில் தேவனுடைய கட்டளையை கீழ்படிதலே அவசியம் என்பதை விளக்குகிறது. .... நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள். உபா. 10:16, 30:6

விருத்தசேதனமானது – தான் எப்போதும் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படியவேண்டும் என்பதை ஒருவனுக்கு நினைவுபடுத்துகிறதாயிருக்கிறது.

கீழ்படியாமையோ – விருத்தசேதனத்தை பிரயோஜனமில்லாதவையாக்கிவிடுகிறது (நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே. ரோ. 2:25)

மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?  சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?  ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
 உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.  (ரோ. 2:26-29)

மேலும் – விருத்தசேதனமானது, கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அது இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது.  

ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.  விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம். அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன். (1கொரி. 7:18-20)

விருத்தசேதனத்தின் அடையாளமாக கிறிஸ்தவர்களுக்கென்று தேவன் கொடுத்தது ஞானஸ்நானம். தேவனுடைய கட்டளைக்கு வேண்டிய கீழ்படிதலை உணர்த்துகிறது. கீழ்படியும் போது பாவமன்னிப்பை பெற்றுக்கொள்கிறோம்  (அப். 22:16)

வசனத்தை கவனிக்கவும் – கொலோ. 2:11-12 அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள். ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

வாக்குதத்தம் செய்யப்பட்ட சந்ததியில் கிறிஸ்து பிறந்த பின்னர் – அந்த பரிசுத்த சந்ததி என்கிற கோட்பாடு முடிவுக்கு வந்தது !!  உலகமனைத்தவரும் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்படுகின்றனர் – ஞானஸ்நானத்தில் (மத். 28:19)

ஞானஸ்நானம் எடுப்பதோடு நின்று விடாமல் – அவர் சொன்னவற்றிக்கு கீழ்படிந்து நடக்க வேண்டியது அவசியாக இருக்கிறது (மத். 28:20)

விருத்தசேதனம் – கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது அல்ல.
ஞானஸ்நானமே – கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக