வெள்ளி, 17 மே, 2019

#160 - நாம் காணும் ‌கணவுகள் நம் வாழ்வில் நிறைவேறுமா?

#160 - *நாம் காணும் ‌கணவுகள் நம் வாழ்வில் நிறைவேறுமா? எனக்கு ஒரு கணவு இரு முறை வந்தது. வேதத்தின் படி பதில் அளிக்கவும்*. நன்றி.

*பதில்:*
கனவுகளை குறித்த கேள்வி ஒரு சுவாரஸ்யமான தலைப்பு.
பலர் கனவுகளை விளக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள், ஆனால் தேவனுடைய உதவியின்றி எந்த ஒரு கனவை பற்றிய விளக்கத்தை எவரும் சரியாகக் கொடுத்ததாக ஆதாரம் இல்லை.

கனவுகள் 99.999% நடந்தவற்றை மனதில் கொண்டு ஓடும் எண்ணங்களின் தாக்கத்தில் உருவாகிறது என்று வேதத்தில் பார்க்கிறோம் (பிர. 5:3)

தேவன் தனக்கு ஏதோ ஒன்றை வெளிப்படுத்துகிறார் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் வேதத்திற்கு முரணாகிவிடும் (1கொரி. 4:6)

ஏனெனில், தேவன் நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் இந்த கடைசி காலங்களில் தமது குமாரன் மூலமாக தொிவித்திருக்கிறார் (எபி. 1:1-2, 2தீமோ. 3:16-17)

நம் ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவர் நமக்கு வேதத்தின் மூலம் தந்தருளியிருக்கிறார் (2பேதுரு 1:2-3)

கனவுகள் நம்முடைய ஆழ்ந்த நினைவுகளை நினைப்பூட்டும் – அவைகளை நிதானிக்கும் போது நடந்தவைகளை ஊர்ஜீதப்படுத்தப்படுவதை உணரமுடியும். கனவுகளின் அடிப்படையில் வாழ்க்கையின் ஓட்டத்தை ஒருநாளும் நிதானிக்கக்கூடாது – நமக்கு வேத வசனமே கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கக்கடவது (சங். 119:105)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக