#130 - *என் மனைவி எனக்கு கீழ்ப்படிய நான் என்ன செய்ய வேண்டும்?*
*பதில்:*
ஒரு
கணவனாக நானும் இந்த கேள்வியை உற்று நோக்குகிறேன்.
எனக்கு
திருமணமாகி 22 வருடங்கள் ஆகிறது. வேதாகமத்தின் பதிலை கீழே காணலாம் ..
கணவனும்
மனைவியும் ஒரே சரீரமாய் இருக்கிறார்கள் (ஆதி 2:24)
ஆதாமின்
விலா எலும்பில் (சரீரத்தின் நடுபகுதி) ஏவாளின் பங்கு (ஆதி 2:21)
மனைவிக்கு
தலை (மூளையாக) கணவன் இருக்கிறான் (1கொரி 11:3)
மனைவி
– தன் கணவனுக்கு கீழ்படிய வேண்டும் (1பேது 3:1, எபே 5:22, கொலோ 3:18)
மனைவி
– தன் கணவனுக்கு எந்த காரியத்திலும் கீழ்படிய வேண்டும் (எபே 5:24)
ஆனால்
எப்படி கீழ்படிய வைப்பது?
விரோதமாய்
இருந்த போதே – கண்டாலே கல்லால் அடித்து விரட்டிக்கொண்டு இருந்த போதே – வெறுத்து
விரட்டின போதே கிறிஸ்துவானவர் தன் மணவாட்டிக்காக உயிரையே கொடுத்து அவளை மீட்டார் (தீத்து
2:14, கலா
1:4, ரோ
5:8, எபே
5:26-27)
கிறிஸ்துவின்
அன்பை புரிந்ததாலே அவர் மணவாட்டியாகிய நாம் அவருக்கு எல்லாவற்றிலேயும் கீழ்படிகிறோமே
!!!
நாம்
எவ்வளவு மீறினாலும் நம்மை விரட்டி விடாமல் நமக்காக அவர் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறாரே
!!!
அது
போல –
ஒரு
மனைவிக்கு கணவன் தான் வீட்டில் தேவை.
போதகரோ
– ஊழியரோ – அப்பாவோ – மேனேஜரோ – முதலாளியோ – ஆபீசரோ – தொழிலாளியாகவோ அவள் எதிர்பார்பது
இல்லை..
தன்னை
நேசிக்கிற – தன்னை மட்டும் நேசிக்கிற கணவனையே அவள் வீட்டில் எதிர்பார்பாள்.
தான்
தன் கணவனோடு இருக்கும் போது தனக்கு முழு பாதுகாப்பு இருப்பதாக அவள் உணரவேண்டும்.
தனக்காக
தன் கணவன் எதையும் செய்வான் என்ற நம்பிக்கை வரவேண்டும்.
அப்படிப்பட்ட
சூழ்நிலை உருவாகும் போது – தானாகவே மனைவியின் கீழ்படிதலை எந்த கணவனும் அனுபவிக்க
முடியும்..
இன்னும்
இதை குறித்து அதிகம் எழுத எனக்கு ஆசை தான் – நேரம் மிக குறைவு.
இந்த
அருமையான கேள்விக்காய் மிக்க நன்றி
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக