செவ்வாய், 2 ஏப்ரல், 2019

#82 எபிரெயர் புஸ்தகத்தை எழுதின ஆசிரியர் யார்

#82 கேள்வி: எபிரெயர் புஸ்தகத்தை எழுதின ஆசிரியர் யார்?

துவக்கமும், முடிவும் பவுலுடைய எழுத்து நடை இல்லையே
விளக்கம் தேவை

ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றி தெளிவாக தெரிந்தவர்கள்தான் யாரே எழுதியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து


பதில்:
நீங்கள் சரியான கணிப்பு தான் செய்திருக்கிறீர்கள் பிரதர்.

1-      எபி 2:3ம் வசனத்தின் அடிப்படையில் பார்க்கும் போது பவுல் இந்த நிருபத்தை எழுதியிருப்பதற்கு குறைவான சாத்தியம் தான்.

2-      பவுல் எழுதிய மற்ற நிருபங்களில் காணும் வழக்கமான வாழ்த்துகளில் தன்னுடைய பெயரை குறிப்பிடும் பழக்கத்தை இந்த நிருபத்தில் காணவில்லை.

3-      வேத வல்லுநர்களின் கூற்றுபடி – எபிரேய புஸ்தகத்தில் உபயோகபடுத்தப்பட்ட வார்த்தைகளும் பழைய ஏற்பாட்டு வசனங்களை கோடிட்டு காட்டின விதங்களையும் பார்க்கும் போது – முழுக்க முழுக்க எபிரேய பாஷையை மாத்திரமே கொண்டுள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். வழக்கமாக பவுலின் நிருபங்களில் கிரேக்க மொழிபெயர்ப்பும் கலந்தே இருக்கும்.. அந்த முறை எபிரேய நிருபத்தில் இல்லை.

4-      வழக்கமாக இயேசுகிறிஸ்துவை குறிக்கும் போது பவுல் பலவிதமான Titles உபயோகப்படுத்தும் முறை இந்த எபிரேய நிருபத்தில் இல்லை.


ஆகவே பவுலோடு நெருக்கமாக இருந்த சிலரால் இந்த நிருபம் எழுதப்பட்டிருக்கலாம்... லூக்கா / பர்னபா / அர்கிப்பு / எப்பாப்பிராத்து

*** மறைக்கபட்டவகைளை நாமும் விட்டுவிடுவதால் (உபா 29:29)
இந்த நிருபத்தை எழுதியவர் யார் என்று நாமும் கணிக்காமல் – யாரோ(Unknown) என்றே கருதுவோம்.

இந்த நிருபத்தை பவுல் எழுதியதாக பலர் கூறுக்கொள்வது வேதத்தின்படி சரியானதல்ல.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக