வெள்ளி, 26 ஏப்ரல், 2019

#116 - வெளிபடுத்தல் 20:12ல் வரும் புத்தகம் மற்றும் ஜீவ புத்தகம் எவைகளை குறிக்கிறது?

*#116 - வெளிப்படுத்தல் 20:12ல் வரும் புத்தகம் மற்றும் ஜீவ புத்தகம் எவைகளை குறிக்கிறது?*

*பதில்* :
வெளி. 20:11-15 – தேவனுடைய நியாயதீர்ப்பின் சம்பவத்தை குறிக்கும் பகுதியாகும்.

இந்த இரண்டு புத்தகங்களில் எழுதபட்டவைகளின் அடிப்படையில் தீர்ப்பு இருக்கும்.

அதில் ஒன்று ஜீவ புத்தகம்.
யாத். 32:32-33ல் மோசே அதை குறிப்பிடுகிறார். நீதிமான்களின் பெயர் இந்த புத்தகத்தில் இருக்கும் (பிலி. 4:3, லூக்கா 17:20)

எழுதப்பட்ட பெயர்கள் எடுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது (வெளி. 3:5, யாத். 32:32-33; சங். 69:28, 109:13)

மற்றொன்று – தேவனுடைய வார்த்தை.
இயேசு கிறிஸ்து சொன்னார் – அவர் சொன்ன வசனமே கடைசி நாளில் நியாயந்தீர்க்கும் (யோ. 12:48). அப்போஸ்தலரின் எழுத்துக்களும் அதில் இருக்கும் (ரோ. 2:16).

மரித்தோர் யாவரும் தாங்கள் செய்த செய்கைகளுக்குதக்கதாக – இந்த புத்தகத்தில் எழுதப்பட்டவைகளின் அடிப்படையில் நியாயதீர்ப்பு இருக்கும். (1பேதுரு 1:7, ரோ. 2:6-11, 2கொரி. 5:10)

ஜீவ புத்தகத்தில் காணபடாதவர்கள் யாவரும், சாத்தானும், அவன் கூட்டாளிகளும், கள்ள தீர்ககதரிசிகளும் மரணமும் பாதாளமும் அக்கினி கடலில் தள்ளப்படுவார்கள், மாற்கு 9:47-48.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229

Q&A Biblical Whatsappல் இணைய (locked group) :

--------------------*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக