வெள்ளி, 26 ஏப்ரல், 2019

#116 கேள்வி: வெளிபடுத்தல் 20:12ல் வரும் புத்தகம் மற்றும் ஜீவ புத்தகம் எவைகளை குறிக்கிறது?


#116 கேள்வி:

வெளிபடுத்தல் 20:12ல் வரும் புத்தகம் மற்றும் ஜீவ புத்தகம் எவைகளை குறிக்கிறது?

பதில் :
வெளி 20:11-15 – தேவனுடைய நியாயதீர்ப்பின் சம்பவத்தை குறிக்கும் பகுதியாகும்.

இந்த இரண்டு புத்தகங்களில் எழுதபட்டவைகளின் அடிப்படையில் தீர்ப்பு இருக்கும்.

அதில் ஒன்று ஜீவ புத்தகம்.
யாத் 32:32-33ல் மோசே அதை குறிப்பிடுகிறார். நீதிமான்களின் பெயர் இந்த புத்தகத்தில் இருக்கும் (பிலி 4:3, லூக்கா 17:20)

எழுதப்பட்ட பெயர்கள் எடுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது (வெளி 3:5, யாத் 32:32-33; சங் 69:28, 109:13)

மற்றொன்று – தேவனுடைய வார்த்தை.
இயேசு கிறிஸ்து சொன்னார் – அவர் சொன்ன வசனமே கடைசி நாளில் நியாயந்தீர்க்கும் (யோ 12:48). அப்போஸ்தலரின் எழுத்துக்களும் அதில் இருக்கும் (ரோ 2:16).

மரித்தோர் யாவரும் தாங்கள் செய்த செய்கைகளுக்குதக்கதாக – இந்த புத்தகத்தில் எழுதப்பட்டவைகளின் அடிப்படையில் நியாயதீர்ப்பு இருக்கும். (1பேது 1:7, ரோ 2:6-11, 2கொரி 5:10)

ஜீவ புத்தகத்தில் காணபடாதவர்கள் யாவரும், சாத்தானும், அவன் கூட்டாளிகளும், கள்ள தீர்ககதரிசிகளும் மரணமும் பாதாளமும் அக்கினி கடலில் தள்ளப்படுவார்கள், மாற்கு 9:47-48.

இந்த கேள்விக்காய் நன்றி பிரதர்
எடி ஜோயல்
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக