ஞாயிறு, 31 மார்ச், 2019

#79 சாத்தான் எப்படி தேவனை சந்திக்க முடிந்தது?

#79 *கேள்வி: சாத்தான் எப்படி தேவனை சந்திக்க முடிந்தது?*

Hi brother, I have one doubt - யோபு 1:6 ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.

*கேள்விகள்:*
1)இந்த சம்பவம் நடந்த இடம் எங்கே இருக்கிறது?
2)நாம் அறிவோம் தேவன் தீமையை காணாத சுத்த கண்ணர் என்று...அப்புறம் எப்படி சாத்தான் அவர்கள் நடுவில் வர முடியும்?
3)Lucifer பாதாளத்துக்கு தள்ளப்பட்ட பிறகு நடந்த சம்பவம் இது..எப்படி பாதாலத்திலிருந்து தேவதூதர்கள் இருக்கும் இடத்துக்கு ஏறினான்?
Pls explain..

*பதில்:*
வேதத்ததை நாம் எப்போதும் கால நிர்ணயத்தோடு படிக்க வேண்டும்.

நோவா காலத்தில் நடந்த ஜலபிரளயத்தை குறித்து யோபு புஸ்தகத்தில் நாம் காணமுடிகிறது (யோபு 22:15-16).

ஆகவே, ஆதாம் ஏவாள் உருவாக்கப்பட்ட பல வருடங்களுக்கு பின்னர் தான் யோபு புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

யோபுவின் செல்வசெளிப்புகளை - மிருகங்களும் தங்கம் வெள்ளியையும் அடிப்படையாக கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. பணம் குறித்து அந்த புஸ்தகத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. ஏறத்தாழ ஆபிரகாம் காலத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது.

பரலோகத்திலிருந்து சாத்தான் தள்ளப்பட்டான் என்று வேதாகமத்தில் வெளிபடுத்தல் புஸ்தகத்தில் பார்க்கிறோம் (வெளி. 12:7-9) ஆனால், ஆதியிலேயே தள்ளப்பட்டான் என்று சொல்லப்படவில்லை.

அந்த சம்பவம் தேவனுடைய சந்நிதானத்தில் நடந்தது.
சாத்தான் தள்ளப்படுவதற்கு முன்னர் நடந்திருக்க வேண்டும்.

உங்கள் கேள்விக்கு மாத்திரம் நான் பதிலளித்திருக்கிறேன். ஆனால் – இந்த பதிலின் பின்னனி – மிக பெரியது !!!
கேள்விக்காய் நன்றி

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/GTYCEzS5IEZBnAllvlLT4R

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக