திங்கள், 2 மார்ச், 2026

#1239 - இந்த வசனத்தில் உள்ள சகரியா யார்?

 #1239 - *இந்த வசனத்தில் உள்ள சகரியா யார்?* ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. லூக்கா 11:50

*பதில்* :  வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதலாவது நீதிமானின் பலி - ஆதாமின் இரண்டாவது மகனான ஆபேல் (ஆதி. 4)
 
யூத வேதாகம வரிசையின்படி (எபிரேய வேதாகமம்) கடைசி புத்தகமான 2 நாளாகமத்தில் – கொலை செய்யப்பட்ட யோய்தாவின் மகன் சகரியா, கடைசி நபர். 
 
இந்த சகரியாவின் சம்பவம்: 2 நாளாகமம் 24:20–22ம் வசனங்களில் காணலாம்.
இவர் பிரதான ஆசாரியனான யோய்தாவின் மகன். யூதா ராஜாவான யோவாசை கண்டித்தார்.
இதனால், ஆலயப் பிரகாரத்தில் (2நாளாகமம் 24:21) வைத்து இவர் கொல்லப்படும் பொழுது “கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்”. 
 
“பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே” என இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளோடு மிகவும் பொருந்துகிறது:
 
மத்தேயு 23:35ல் இந்த வாக்கியத்தை பதிவு செய்த மத்தேயு, “பரகியாவின் குமாரன்” என்று கூடுதல் தகவலைத் தெரிவிக்கிறார். 
 
சகரியா 1:1ன்படி, சகரியா தீர்க்கதரிசியானவர் இத்தோவின் மகனான “பெரகியாவின் குமாரன்” என்று காண்கிறோம்.
 
சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களில் ஒன்றாக கருதப்படும் சகரியா புத்தகத்தை எழுதியவர் தான் மத்தேயு குறிப்பிடுவதாக சிலர் நினைக்கிறார்கள்.
 
ஆனால், இந்த சகரியா கொல்லப்பட்டார் என்றோ, தேவாலயத்தில் / பலிபீடத்தில் கொல்லப்பட்டதாகவோ வேதாகமத்தில் ஆதாரம் இல்லை.
 
இந்த சகரியா பாபிலோன் சிறைவாசத்திற்குப் பிறகு தீர்க்கதரிசனம் உறைத்தவர்.
 
*அப்படியெனில், மத்தேயு குறிப்பிடும் பரகியாவின் குமாரன் என்பவர் 2 நாளாகமம் 24:20–22-ல் குறிப்பிடப்படும் யோய்தாவின் குமாரன் சகரியா அவர் தான் என்று எப்படி கருத முடியும்?*
 
வேத அறிஞர்கள் இது எழுத்துப்பிழையினால் அல்லது எபிரேயர்களுக்கு வழக்கமாக இரண்டு மூன்று பெயர்கள் இருப்பதனால், பரகியாவும் கூடுதல் பெயராக இருந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது. 
 
யூதர்களிடையே ஒரே நபருக்கு இரண்டு பெயர்கள் இருப்பது வழக்கம்; உதாரணமாக, மத்தேயு லேவி என்றும், லெபேயு, ததேயு, சீமோன், கேபா, பேதுரு என்பது அறிகிறோம். 
 
*ஏன் “ஆபேலிலிருந்து சகரியா வரை”?*
ஆபேல் (ஆதியாகமம் 4) – முதல் நீதிமானின் இரத்தம் சிந்தப்பட்டது.
யூத வேதாகம வரிசையில் (எபிரேய வேதாகமம்) கடைசி புத்தகம் 2 நாளாகமம்.
அதில் பதிவிடப்பட்ட கடைசி கொல்லப்பட்ட தீர்க்கதரிசி – யோய்தாவின் மகன் சகரியா. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:* https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*எங்களது வலைதளம்* : http://www.kaniyakulamcoc.wordpress.com

*எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்”* : https://www.youtube.com/joelsilsbee

-------------------------*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக