சனி, 4 ஜூன், 2022

#1141 - இரண்டு வயதிற்குட்பட்ட அனைத்து ஆண் பிள்ளைகளையும் ஏரோது கொன்ற போதும் ஆறு மாதம் மூத்தவரான யோவான் ஸ்நானன் எப்படி தப்பினார்?

#1141 - *இரண்டு வயதிற்குட்பட்ட அனைத்து ஆண் பிள்ளைகளையும் ஏரோது கொன்ற போதும் ஆறு மாதம் மூத்தவரான யோவான் ஸ்நானன் எப்படி தப்பினார்?*

*பதில்* : நன்கு யோசிக்க வேண்டிய கேள்வி தான்.
வசனத்தை கூர்ந்து கவனித்தால் இதற்கான தெளிவை அறியமுடிகிறது. மத்தேயு 2:16ம் வசனத்தின்படி ”அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, *பெத்லெகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த* இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

அதாவது *பெத்லெகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த* பிள்ளைகளே கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

யோவான் ஸ்நானன் வளர்ந்த ஊர் *யூதாவிலுள்ள ஒரு பட்டணம்*

லூக்கா 1:39-40 “அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே *யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத்* தீவிரமாய்ப் போய், சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்”

பெத்லகேமிலும் இதை சுற்றியுள்ள இடங்களில் 2வயதிற்குட்பட்ட பிள்ளைகளே கொலைசெய்யப்பட்டனர்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக