செவ்வாய், 19 ஏப்ரல், 2022

ஜெபத்தில் ஆணையிடக்கூடாது-தாழ்மை அவசியம்

*ஜெபத்தில் ஆணையிடக்கூடாது-தாழ்மை அவசியம்*

by : Eddy Joel Silsbee

 

மாட்சிமை நிறைந்த பிதாவாகிய தேவனுடைய நாமத்திற்கு துதியும் கனமும் உண்டாவதாக.

 

தேவனுடைய வார்த்தையை நேரடியாக அவரிடத்திலேயே கேட்டு எப்போதும் ஜனங்களுக்கு சொல்லி வந்த ஏசாயா தீர்க்கதரிசி தேவனுடைய பிரசன்னத்தை ஆலயத்தில் பார்த்ததும் *ஐயோ* நான் அதமானேன் என்று பதறினார்.

 

*பயத்தோடும் பக்தியோடும்* ஆராதிக்க வேண்டும் என்று நமக்கு கட்டளை உள்ளது. (எபி. 12:28-29)

 

*பயத்துடனே* கர்த்தரைச் சேவியுங்கள், *நடுக்கத்துடனே* களிகூருங்கள் என்று வசனம் எச்சரிக்கிறது (சங். 2:11)

 

நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் *பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம்* வாருங்கள் என்று அழைக்கிறது வேதம்.. (சங். 95:6)

 

ஆவியை உள்வாங்கிகொண்டோம் என்று சொல்லிக்கொண்டு

துளி பயமும் இல்லாமல் கூச்சலிடுவதும்

ஜனங்களிடத்தில் பேசுவதாக நினைத்து சர்வ வல்லவரிடம் துளி பயமுமின்றி ஓங்கி ஆணையிடுவதும் (ஜெபத்தில்)

வேதத்திற்கு முரணானது.

 

தாழ்மையுடனும் பயத்துடனும் அடக்கத்துடனும் நடப்பது அவசியம்.

 

*சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என்ற வசனத்தை நினைவில் கொள்வோம்*. (ஏசா. 66:2)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JDfVxazP3KYEsGbNA0zhBJ

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/E0mPMr8QuVo

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக