ஞாயிறு, 17 அக்டோபர், 2021

நன்மை பெற உத்தமம் அவசியம்

 


 

*நன்மை பெற உத்தமம் அவசியம்*

By : Eddy Joel Silsbee

 

என்றென்றும் வாக்கு மாறாத தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

பிறனுடன் எப்போதும் மெய்யை பேசவேண்டும் என்று வேதம் சொல்கிறது. எபே. 4:25, சகரியா 8:16

 

தன் பொய்யான கொள்கையை வலியுறுத்துவதற்காக ஜனங்களை திசை திருப்பி *மெய்யை சொல்லாமல் விட்டு விடுகிறார்கள்*. நீதி. 12:17

 

மற்றவரின் வறுமையையும், வியாதியையும், கஷ்டத்தையும், இயலாமையையும் தனக்கு சாதகமாக்கி,

*சுய லாபம் ஈட்டும் கிரேத்தாவின் ஜனங்கள்* நம் மத்தியிலும் பல வேஷங்களில் பெருகியிருப்பது கவனிக்க வேண்டியதே.. தீத்து 1:12

 

தன்னை பின்பற்ற வேண்டுமானால் அவனவன் சுயத்தை வெறுத்து தன் சொந்த *சிலுவையாகிய வேதனைகளை அவமானங்களை* சுமக்க சொன்னார் இயேசு... இவர்களோ *சிலுவை போன்ற* ஒரு சின்னத்தைத் தங்கத்திலும் வெள்ளியிலும் ஓலையிலும் மரத்திலும் கற்களிலும் செய்து அதை விற்று லாபம் காண்கிறார்கள் !! மத். 10:38, 16:24

 

மந்தையை கரவலாடுகளாகவும் பால் கறக்கும் பசுக்களாகவும் நடத்தாமல், பசும்புல்லை தங்கள் ஆடுகள் மேய்ந்து கொள்ளும்படி மேய்ப்பனானவன் தன் *ஆடுகளுக்கு முன்னதாக* நடக்க வேண்டியது அவசியம்.1பேதுரு 5:2-3

 

உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு தேவன் நன்மையை வழங்காதிரார்.. சங். 84:11

 

நன்மையைப் பெற தேவனுக்கு உத்தமமாய் இருப்போம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/4iNmYp2OlUY

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக