*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
பராக்கிரமுள்ள தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
தேவ பயமும்,
வேதத்திற்கு கீழ்படிதலும்,
தேவக் கட்டளைக்கு அடி பணிவதும்,
தேவனுடைய பிரமாணத்திற்கு தங்களை ஒப்புகொடுப்பதும்
தற்போது *குறைந்திருப்பதை பரவலாக காண முடிகிறது*.
(தேவ) பயம் அவசியமில்லாதது என்று அநேகரது தன்னிறைவு. பணம், செல்வாக்கு, வாழ்க்கை தரம் பெறுகப்பெருக, சட்டமும் தேவக் கட்டளையும் தன் கையிலேயே இருப்பது போன்ற உணர்வு.
யூதா ஜனம் இப்படி ஒரு நிலையை அடைந்த போது (எரே. 8:4-17) ஆண்டவர் அவர்களை தண்டிக்க *தவறவில்லை*.
பழைய ஏற்பாடு நமக்கு பாடமாய் கொடுக்கப்பட்டது.
காலம் தாமதமானாலும், சட்ட மீறுதல் என்பது, மனம்திரும்பாத பட்சத்தில் எப்போதும் கணக்கில் வைக்கப்படுகிறது.
தேவனுக்கு பயந்தே நம் செய்கைகள் இருக்கட்டும்.
உலகம் நம்மை பரிகசித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும், தேவனிடத்திலிருந்து நமக்கு வெற்றி தேடி வரும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக