சனி, 13 பிப்ரவரி, 2021

#1075- யோசுவா புத்தகத்தில் தேவன் சூரியனை நிறுத்தியதாக வாசிக்கின்றோம் அவ்வாறு சூரியன் அஸ்தமனம் ஆகாமல் நிற்குமாயின் புவியீர்ப்பு மாற்றம் ஏற்படும் அல்லவா இது எவ்வாறு நிகழ்ந்திருக்கும்?

#1075- *யோசுவா புத்தகத்தில் தேவன் சூரியனை நிறுத்தியதாக வாசிக்கின்றோம் அவ்வாறு சூரியன் அஸ்தமனம் ஆகாமல் நிற்குமாயின் புவியீர்ப்பு மாற்றம் ஏற்படும் அல்லவா இது எவ்வாறு நிகழ்ந்திருக்கும்*?

*பதில்*: யோசுவா, 10 ஆம் அதிகாரம், இஸ்ரவேல் புத்திரருக்கும் புறஜாதியான அமோரியர்களுக்கும் இடையிலான ஒரு பெரிய யுத்தத்தின் விவரத்தைக் கொண்டுள்ளது. அந்த மோதலின் போது, தேவன் தலையிட்டு பரலோகத்திலிருந்து பெரிய கற்களை அனுப்பி, எதிரிகளில் பலரைக் கொன்றார். யோசு. 10:11

யுத்தம் முன்னேறின வேளையில், இந்த நடவடிக்கையை முடிக்க பகல் நேரம் அதிகம் தேவைப்பட்டபோது, யோசுவா இவ்வாறு ஜெபித்தார். ”யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள் என்றான்”. யோசு. 10:12

எனவே, யுத்தம் முடியும் வரை சூரியன் அசையாமல் நின்றது, சந்திரன் தங்கியிருந்தது (வச. 13).

முதலாவதாக, “சூரியனே, தரித்து நில்” என்ற வாக்கியமானது தனித்துவமானது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.  அதாவது, ”நமது நிலைப்பாட்டில்” இருந்து, சூரியன் நகர்வதாகத் தோன்றுகிறது. ஆகவே தான், நாம் “சூரிய உதயம்” மற்றும் “சூரிய அஸ்தமனம்” போன்ற வார்த்தைகளைப் பொதுவாகப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது? ஒரு அதிசயம் நிகழ்ந்ததா, அல்லது நிகழ்வை விளக்கக்கூடிய சில இயற்கை விளக்கங்கள் உள்ளதா?

தெய்வநம்பிக்கையில்லாத எழுத்தாளர்கள் இந்த வேத விளக்கத்தை வெறும் கவிதை என்று நிராகரிக்கின்றனர். அவர்களின் பார்வையின் படி, இந்த நிகழ்வில் எந்த அதிசயமும் இல்லை என்கின்றனர்.

தெய்வீக தலையீட்டை ஒப்புக் கொள்ளுகிறவர்களோ, அதிசய ஒளியின் ஒளிவிலகல் சம்பந்தப்பட்டிருப்பதாக ஏற்கிறார்கள். பூமியின் இயக்கத்தில் உண்மையான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்கின்றனர். ஒரு அதிசயம் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் உலகளவில் அல்லாமல், அது ஒரு உள்ளூர் நிகழ்வில் மாத்திரமே சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  அதாவது, இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வெளியேறுவதற்கு சற்று முன்பு நடந்த பண்டைய எகிப்தியர் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட இருள் வாதையானது  எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இதுவும் அந்த இடத்திற்கு மாத்திரமே நடந்திருக்கும் என்று நம்புகின்றனர். (John Davis & John Whitcomb, A History of Israel, Baker, 1980, pp. 66-70).

இருப்பினும், பொதுவான பாரம்பரிய பார்வையில், அந்த உரிய நாளின் பகல் வேளை உண்மையில் பூமியின் அச்சில் அதன் சுழற்சியின் பின்னடைவால் நீடித்தது என்று நம்ப்பப்டுகிறது. பேராசிரியர் Leon J. Wood என்பவர், இந்த கருத்து மட்டுமே வேத வாக்கின்படி நியாயமானது அல்லது சரியானது என்று வாதிட்டார். "அசையாமல் நின்றது," "தங்கியிருப்பது", "கீழே போகாமல் விரைந்து செல்வது" போன்ற வெளிப்பாடுகள் (வ13). இது நிச்சயமாக பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டதை நிலைநிறுத்துகிறது.  (A Survey of Israel’s History, Zondervan, 1986, p. 148).

14ஆம் வசனமானது இந்த சந்தர்ப்பத்தின் தனித்துவத்தை பரிந்துரைப்பதாகத் தெரிகிறது. ”இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.” யோசு. 10:14

யாத். 10: 21-23; 2 இரா. 20:10,11 வசனங்களிலும் எவ்வண்ணமாக ஒளியின் கட்டுப்பாட்டைக்குறித்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் வேதவசனங்களில் இருந்தனவோ அதைபோல இதுவும் நடந்திருக்கவேண்டும்.

"சூரியன் அசையாமல் நின்றது" என்பதில் பல கேள்விகள் வழக்கமாக எழும்பதான் செய்கிறது. யோசுவாவிற்கு அதிக சூரிய ஒளி அல்லது குறைவான சூரிய ஒளி அவசியப்பட்டதோ? யுத்தத்தில் வெற்றி பெற அவருக்கு அதிக பகல் நேரம் தேவையா அல்லது வெயிலின் வெப்பத்திலிருந்து அவருக்கு நிவாரணம் தேவையா? பூமி உண்மையில் 24 மணிநேரம் சுழல்வதை நிறுத்திவிட்டால், கிரகத்தின் எல்லாவற்றிற்கும் நம்பமுடியாத பேரழிவு ஏற்படாதோ? போன்ற பல கேள்விகள் இதில் அடங்கும்.

மேலும், குறிப்பாக
“சூரியன் அசையாமல் நின்றது” என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது? சூரியன் உண்மையில் நின்றதா அல்லது பூமி அதன் அச்சின் சுழற்சியை நிறுத்தியதா? சந்திரனைப் பற்றி என்ன; அது உண்மையில் நிறுத்தப்பட்டதா??

வெறுமனேயிருந்த, காலியாக இருந்த இடத்தில், ஒன்றுமில்லாமல் தன் வார்த்தையாலேயே அதிசயமாக உருவாக்கிய அதே கடவுள் இந்த முழுமையான பிரபஞ்சத்தையும் சூரியனையும் அல்லது வேறு எந்த பகுதியையும், தடுக்க முடியாதோ? சந்திரனை “நிறுத்த” சர்வ வல்லமையுள்ளவருக்கு சாத்தியமில்லையோ?

படைப்பாளரே, பூமியில் ஒரு நாளை அற்புதமாக தனது விருப்பப்படி கையாளுவதற்கு, “அவருடைய சக்தியின் வார்த்தையால் பிரபஞ்சத்தை நிலைநிறுத்துகிறார்” (எபிரெயர் 1:3)

அற்புதங்கள் என்ற கருத்தை சந்தேகிப்பவர்கள், உண்மையில், இயற்கைக்கு அப்பாற்பட்ட கடவுள் இருக்கும் போது, அமானுஷ்ய அற்புதங்கள் சாத்தியமாகும்.

எபிரேய அறிஞர் Justin Rogersன் உரையில் (Does the Bible Teach a Flat Earth? Reason & Revelation, July, 37[7]:74-77) “உண்மையில்,‘ சூரியன் வானத்தின் நடுவே நின்றது ’என்று அவர்களுக்குத் தோன்றியது. இது நிகழ்வியல் மொழியின் தெளிவான பயன்பாடு, அதாவது, வழக்கத்திற்கு மாறாக பகல் நீண்டிருந்தது என்கிறார்.

எபிரேய வேதாகமத்தில் ”தமன் மற்றும் அமட்” என்ற இரண்டு சொற்களுக்கு "நிறுத்த" என்பதே அர்த்தம்.

இந்த அற்புதமான அதிசயத்தை செய்ய தேவன் தேர்ந்தெடுத்த துல்லியமான முறையை நமக்குத் தெரிவிக்கவில்லை, ஆனால், அது நடந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை (யோசுவா 10:14)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக