*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
பிதாவாகிய தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
அப்போஸ்தலனாகிய பேதுரு ஆவியில் நிறைந்து பிரசங்கம் செய்தது போல நம் அனைவருக்கும் ஆவியில் நிறைந்து இருக்க பிரியம். (அப் 4:8)
*ஆவியில் நிரம்பி* ஜெபிக்கணும்
*ஆவியில் நிரம்பி* ஊழியம் செய்யணும்
*ஆவியில் நிரம்பி* செய்தி கொடுக்கணும்
*ஆவியில் நிரம்பி* ஆராதனை நடத்தனும் என்று விருப்பம் கொள்வது ... நல்லது தான்..
வேதமோ,
ஆவியில் குறைவுபட்டவர்கள் அல்லது ஏழ்மையானவர்கள் (எளிமையுள்ளவர்கள்) பாக்கியவான்கள்; *பரலோகராஜ்யம் அவர்களுடையது* என்று வேதம் சொல்கிறது. மத்தேயு 5:3
*ப்தோகொஸ் என்கிற கிரேக்க வார்த்தைக்கு எளிமை என்று தமிழாக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது – குறைவு அல்லது பிச்சை எடுக்கும் அளவிற்கு இல்லாத நிலை என்று பொருள்*.
ஆவியில் எளிமை என்றதும்;
ஜோல்னா பையை மாட்டிகொண்டு,
கதர் வெள்ளை உடை அணிந்து,
ஆன்மை என்ற அடையளத்தின் மீசையைக் கூட மளித்துக் கொண்டு,
செருப்பும் அணியாமல் இருப்பது ”பரிசுத்தம்” என்று வேதம் சொல்லவில்லை.
பரிசுத்த ஆவியானவர் எனக்கு இன்னமும் தேவை,
பெற்ற பரிசுத்தம் போதாது,
இன்னும் பரிசுத்தம் அடையவேண்டும்,
இன்னும் தேவை, இன்னும் தேவை என்று பெற்றிருக்குமு ஆவியில் குறைவை / ஏழ்மையை / நிறைவின்மையை / எளிமையை உணரும்போது அதை அடையும்படி நம்மை நாமே ஆராய்ந்து, சரிபார்த்து, தேவனுக்கேற்றவைகளை சிந்தித்து வேதத்தின்படி நம்மை அநுதினமும் மாற்றியமைத்துக்கொள்ள முற்படும் போது *பரலோக இராஜ்யம்* நம்முடையதாகிறது !!
அல்லேலுயா !!
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக