ஞாயிறு, 12 ஜூலை, 2020

*Eddy Joel Silsbee* - *தினசரி சிந்தனைக்கான வேத துளி* 12 July 2020


By : *Eddy Joel Silsbee*  -   *தினசரி சிந்தனைக்கான வேத துளி*

சர்வலோகத்தின் தேவனே நம்மை வழிநடத்துவாராக.

ஸ்தேவான் ஜனங்களிடத்தில் வல்லமையோடும் ஆதாரதோடும் அதிகாரத்தோடும் பிரசங்கித்தான்.

கேட்டவர்களோ உணர்வடைவதற்கு பதிலாக மூர்க்கமடைந்தார்கள், முடிவில் அவனைக் கல்லெறிந்து கொன்றும் போட்டார்கள் (அப் 7:50-60)

இப்பேற்பட்ட துரோகங்களும், எதிர்ப்புகளும், அவமானங்களும், பற்கடிப்பும், முறுமுறுப்பும், தவறான எண்ணங்களும், திரித்துக்கூறும் கதைகளும், ஜோடித்து குற்றப்படுத்தும் சம்பவங்களும் உண்மையான எந்த ஒரு ஊழியகாரனுக்கு எதிராக வராமல் போகாது.

ஒரு துளி தவறும் செய்யாத கிறிஸ்துவிற்கு சிலுவை கிடைத்ததென்றால் – பல நாள் தெருவிலும் வெயிலிலும் கிடந்து ஜன்னலும் கதவும் பொம்மைகளும் செய்யப்படுவதற்கு நீங்களும் நானும் காய்ந்து பதமாயிருக்கிற பக்குவமான மரமே !! லூக்கா 23:31

சத்தியத்தின்படி உத்தமமாய் நடந்து நெருக்கடி வந்தால் அது இந்த சமுதாயம் நமக்கு கொடுக்கும் கேடயம் !! 2தீமோ 3:12

கல்லெறிந்த வேளையில் வானத்தை நோக்கின ஸ்தேவான் – உட்காரந்து இல்லாமல் இயேசு கிறிஸ்து எழுந்து நின்றதை கண்டவருக்கு எவ்வளவு உற்சாகம் இருந்திருக்கும் !! அப் 7:56

உற்சாகத்தோடு ஊழியத்தை கொண்டு செல்வோம்.

இன்று கர்த்தருடைய நாள் !!

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக