புதன், 15 ஜூலை, 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி 15 July 2020


By : *Eddy Joel Silsbee*  -   *தினசரி சிந்தனைக்கான வேத துளி*

நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனுடைய நாமத்திற்கே மகிமையும் கனமும் உண்டாவதாக.

இயேசு கிறிஸ்துவானவர் :
1-வாயின் வார்த்தையால் இறந்தவரின் உயிர் வந்தது.
2-அதட்டலினால் காற்றும் கடலும் கீழ்படிந்தது,
3-தொட்டதும் சுகம் கிடைத்தது,
4-சாப்பாடும் திராட்சை ரசமும் (உழைக்காமலே) ஜெபத்தினால் அபிவிருத்தி ஆனது.

இப்படி இன்னும் அடுக்க முடியும்.

சரியான முறையில் அறியாமலேயே கக்கத்தில் வேதத்தை வைத்துக்கொண்டு சுற்றுயுள்ளோரை ஆட்டுவித்துக்கொண்டு இருப்பவர்கள் - இதில் ஏதாவது ஒரு சக்தி “கை வசம் இருந்தால்” 2இஞ்சாவது தரைக்கும் காலுக்கும் இடைவெளியை காணமுடியும் !! (1கொரி 8:2)

இயேசுவோ அதை எந்த ஒரு இடத்திலோ, சூழ்நிலையிலோ  தன்னை குறித்து மேன்மையாக சொல்லிக் கொள்ளவில்லை. அப்படி சொன்னவர்களையும் வேண்டாம் என்றார். (பிலி 2:6-8, லூக் 4:41)

இருப்பது அனைத்துமே – சொந்தமானது அல்ல...கடனாக பெற்றுக்கொண்டது தான் என்பதை நினைவில் வைத்து.. எப்போதும் தாழ்மையாய் இருக்க மறந்துவிடக்கூடாது. 1கொரி 4:7

பாராட்டுக்கள் மாத்திரம் அல்ல,  வெறுப்புகளும், அவமானங்களும் சில வேளைகளில் – “தான் யார்” என்பதை *நிரூபிக்க  தோன்றும்*. 1பேது 2:23

இயேசு கிறிஸ்துவோ சிலுவையின் மரண தருவாயில் கூட தன்னை தாழ்த்தி நமக்கு கற்று கொடுத்து இருக்கிறார்...

நீ....டி....ய... பொறுமை அவசியம்.

சோதனைகளும், நெருக்கங்களும் நம்மை மேற்கொள்ள அனுமதிக்காதீர்கள்.

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக