சனி, 14 நவம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 14 Nov 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

நம் எல்லோருக்கும் முன்மாதிரியான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

சாதாரணமான ஒரு மனுஷன் எப்படி வாழ முடியுமோ அவ்வாறு, பிறப்பு துவங்கி சிலுவை மரணம் வரை உள்ள அனைத்து சூழ்நிலையிலும் நம் ஆண்டவர் நமக்கு வாழ்ந்து காட்டி தன் அடிச்சுவடுகளை நமக்கு முன்மாதிரியாக வைத்துப்போனார். 1பேது 2:21, யோ 13:15

எதிரிகள், துரோகிகள், போராட்டக்காரர்கள், நெருக்கடிகள், வசை பாடுபவர்கள், விரோதிகள், காட்டிக்கொடுப்பவர்கள், மறுதலிப்பவர்கள், எதிர் பேசுபவர்கள் என்று அனைத்துத்தரப்பினரும் தன்னை சூழ்ந்திருந்த போதும்,
எந்த சூழ்நிலையிலும் அவர் தவறு செய்ததாக ஒருவரும் அவரை குற்றம் சாட்ட வாய்ப்பேயில்லாதபடி நம் ஆண்டவர் வாழ்ந்து – பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி காண்பித்தார். யோ 18:38, 19:4, 6, மத் 27:18-19, 24, லூக்கா 23:15, 1பேது 1:19, 2:22-23

இயேசு கிறிஸ்துவால் இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்று நாமும் அதை அறிந்து செயல்பட்டால் - பிசாசின் தந்திரங்களுக்கு தப்பித்துக்கொள்ளுவோம். பிலி 2:8, லூக்கா 2:51, நீதி 15:33, எபி 12:2

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக