#981 - *கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன் திருமணம் நடந்தது.
மனைவி மாத்திரமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இந்த சூழ்நிலையில்
வாழ்க்கையானது எப்படி?* விளக்கவும்.
*பதில்*
இதே
போன்றதொரு கேள்வியை அப்.பவுலிடம் கொரிந்து சபையில் இருந்து ஒருவர் கேட்டிருக்க (1கொரி.
7:1) – அதற்கு பவுல் எழுதின பதிலை முதல் நிருபம் 7ம் அதிகாரத்தில் நாம்
காணமுடிகிறது.
அந்த
வசனங்களை அப்படியே பதிவிடுகிறேன் :
விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு
நானல்ல, கர்த்தரே
கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப்பிரிந்து போகக்கூடாது.
பிரிந்துபோனால்
அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள்,
அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும்
தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.
மற்றவர்களைக்குறித்துக்
கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும்,
அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.
அப்படியே
ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச்
சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.
என்னத்தினாலெனில், அவிசுவாசியான
புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான
மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள்
பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள்
பரிசுத்தமாயிருக்கின்றன. 1கொரி 7:10-14
மனைவியானவளே, நீ உன் புருஷனை
இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே,
நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?
1கொரி. 7:16
தேவன்
அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ,
கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே
அவனவன் நடக்கக்கடவன். 1கொரி. 7:17
அவனவன்
தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன். 1கொரி. 7:20, 24
உன்னைக்குறித்தும்
உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு,
இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால்,
உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும்
இரட்சித்துக்கொள்ளுவாய். 1தீமோ. 4:16
சகோதரரே, உங்களில் ஒருவன்
சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத்
திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத்
திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான
பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக். 5:19-20
திருவசனத்திற்குக் கீழ்ப்படியாத கணவனிடத்தில் – மனைவி வசனத்தை எடுத்து சொல்ல
முயற்சி செய்யக்கூடாது. மாறாக – அவரிடம் அதிக அன்பு செலுத்தி, அவருக்கு உத்தமமாகவும் பிரியமுள்ள மனைவியாகவும் வாழுந்து கீழ்ப்படிந்திருக்க
வேண்டும். அப்பொழுது பயபக்தியோடுகூடிய மனைவியின் கற்புள்ள நடக்கையை பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 1பேதுரு 3:1-2
இரட்சிக்கப்பட்ட கணவனுக்கு கிறிஸ்துவை ஏற்காத மனைவி இருந்தால் : நாம் அக்கிரமக்காரராகவும், பெலனற்றவர்களாகவும், பாவிகளாகவும்,
தேவனுடைய சத்துருக்களாகவும் கறைதிரையோடும், அழுக்கும்
பரிசுத்தமின்மையாயும் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்து நம்மை மீட்டது போல –
மனைவியானவள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் படி பொறுமையாக இருந்து கிறிஸ்து நம்மில்
அன்பு கூர்ந்து தன் உயிரையே கொடுத்தது போல கணவனும் இரட்சிக்கப்படாத மனைவியின் மீது
அன்பு வைக்க வேண்டியது. ரோ. 5:6, 8, 10, எபே. 5:25-27
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக