அனுதினமும் கூடினார்கள் என்று அப் 2:46
இருக்கும் போது வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை தேவனை தொழுது கொள்ள ஏன் கூடி
வரவேண்டும்?
அந்த அப் 2:46 வசனத்தில் இரண்டு இடங்கள்
குறிப்பதை கவனிக்க வேண்டும்.
ஒன்று - தேவாலயம், இரண்டு – வீடுகள்தோறும் !!
இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ யூதர்கள் தங்கள்
வழக்கப்படி அநுதின தியான வேளையில் எருசலேம் தேவாலயத்தில் போய் கூடினார்கள். இருந்தபோதும் தங்கள் தங்கள் வீடுகளிலும் ஒன்று
சேர்ந்து அநுதின உணவை தங்களுக்குள் பகிர்ந்தார்கள். உபா 12:7,
12, 16:11.
அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் *அப்பம்பிட்டு ஆராதித்தார்கள் என்று வசனம் சொல்லவில்லை* !!
மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும்
*போஜனம்பண்ணி*, என்றே வேதத்தில் உள்ளது.
தேவனைத் தொழுது கொள்ளும்படி
பிரத்யேகமாக ஓய்வு நாளான சனிக்கிழமையில் அல்ல மறு நாளான ஞாயிறு அன்று கூடினார்கள்.
ஏன் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களுக்கு
முக்கியமாயிற்று?
1-இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாள் மாற்கு 16:9
2-உயிர்தெழுந்த பின் பரமேறும் முன்னர்
6 முறை தரிசனமான நாட்கள். மாற்கு16:9; மத்தேயு 28:5-9;
லூக் 24:34; 24:13-15; 33,36, யோ
20:19; 26
3-இயேசுவின் மரணத்துக்கும் பரமேறும் நாளுக்கும்
இடைப்பட்ட காலங்களில் சீஷர்கள் கூடினது. யோ 20:19, 26, அப் 2:1
4- சபை ஸ்தாபிக்கப்பட்டது அப்
2:1
5- பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலருக்கு
பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட நாள் அப் 20:1-4
6-அப்பம் பிட்கும்படி கூடின
நாள் அப் 20:7
7- காணிக்கை சேர்க்கும்படி கூடின
நாள். 1கொரி16:1-3
** 7ம் நாள் ஓய்வு நாள் என்று
இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் நியாயபிரமாணம் மூலம் கட்டளையாய் கொடுக்கப்பட்டதை
கிறிஸ்து சிலுவையில் முடித்து விட்டதால் – புதிய பிரமாணம் துவங்கியது. ரோ 10:4,
1கொரி 11:25
** மற்ற நாட்களில் ஐக்கியத்தை வெளிப்படுத்தும்படி
தேவனை துதித்து தியானித்தாலும் - கிறிஸ்தவர்கள், அப்போஸ்தலருடைய
உபதேசத்தின் படி வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவனை ஆராதிக்க கூடி
வர வேண்டும்.
Eddy
Joel Silsbee
Preacher – The Churches
of Christ
Teacher – World Bible
School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp
Groupல் இணைய : https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
வேத வகுப்பு மற்றும்
தேவ செய்திகள் கேட்க:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக