வியாழன், 28 மே, 2020

#970 - சவுல் ஏன் தாவீதை கொலை செய்யும்படி வகை தேடினார்?

#970 - *சவுல் ஏன் தாவீதை கொலை செய்யும்படி வகை தேடினார்??* விளக்கம் வேண்டும் ஐயா??

*பதில்*
விக்கிரக ஆராதனை செய்யும் பெலிஸ்தியனான கோலியாத்துக்ககு எதிராக வீர தீர வெற்றியைப் பெற்ற பிறகு இளம் தாவீதின் புகழ் தேசம் முழுவதும் பரவியது.

இஸ்ரவேல் பெண்கள் ராஜாவகிய சவுலை – ஆட்டு மேய்ப்பனான இளம் தாவீதின் நிழலில் கீழ் தள்ளும் படியாக பாடலலை இயற்றி பாடினார்கள். 1சாமு. 18:6-7

அந்த வரிகள் இராஜாவாகிய சவுலுக்கு எரிச்சலாயிருந்தது. 1 சாமு. 18:8

அந்த நிகழ்விலிருந்து சவுலுக்கு தாவீது மீது ஒரு தவறான தீய பார்வை இருந்தது. 1சாமு. 18:9

சவுல் பொறாமையால் தன் நிலையில் நிற்கமுடியவில்லை. பல சந்தர்ப்பங்களில், அவர் அந்த இளைஞனை நேரடியாகக் கொல்ல முயன்றார். 1சாமு. 18:11; 1சாமு. 19:10.

மேலும் பொறாமையானது மிகவும் மோசமானதான திட்டங்களை வகுக்க தூண்டியது (1சாமு. 18:21,25).

பிடிவாதம், அகங்காரம், பொறாமை குணங்கள் மோசமான கூட்டணியாகும். ஒன்றுக்கொன்று கைக்கோர்த்துக்கொண்டு மற்றவர் வாழ்க்கையை ஜெயிப்பதாக நினைக்க வைத்து சொந்த வாழ்க்கையை பாழாக்கிவிடும் என்பதற்கு சவுல் ஒரு தெளிவான உதாரணம்.

இது போலவே சபையில் ஒருவர் சில தாளந்துகளைக் கொண்டு வளர்ந்து வருவதை காணும் போது –  முன்னிற்பவர்கள் அவர்களை இன்னும் வளர்க்க உறுதுணையாக இருக்க வேண்டியது பாடம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக