*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
அன்பின் ரூபமாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்ட சொன்னதன் அர்த்தம் “*பொறுமையை*” குறிக்கிறது.
தன்னை விரோதிக்கிறவர்களையும் ஆதாயபடுத்துவதன் நோக்கமாகவே கிறிஸ்து இருந்தார்.
அப்போஸ்தலர் பவுலும் கூட, “எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக் குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப் போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்” என்றார். (2கொரி. 11:12)
தன் கொள்கையில் இல்லாதவர்களை தடுக்கவேண்டாம் என்று சொன்னார் இயேசு கிறிஸ்து.. லூக். 9:50
எல்லா காலத்திலும் கிறிஸ்துவை எதிர்க்க ஜனங்கள் எழுந்தார்கள். உணர்ந்தவர்கள், தங்கள் ஆத்துமாக்களை சம்பாதித்தார்கள். முரண்பாடு கொண்டவர்களோ “விழுந்து போனார்கள்” மத். 21:44
எமோரியரின் அக்கிரமம் நிறைவாகும் வரை இஸ்ரவேல் ஜனம் கஷ்டப்பட்டது. அக்கிரமம் மிகுதியான (நிறைந்த) பொழுது, பிடுங்கப்பட்டு போனது !! ஆதி. 15:16
அன்பும், நீடிய பொறுமையும், பராக்கிரமும், பயங்கரமுமான ஜீவனுள்ள தேவனை நாம் ஆராதிக்கிறோம்.
அவரை போல, நாம் ஒரு போதும் எவர் மீதும், வெறுப்பு கொள்ளாமல் சகல பொறுமையோடும், ஜெபத்தோடும் இருப்போம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக