#898 - *ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே
வழக்காடாதே*. நீதி 3:30 - விளக்கவும்
*பதில்*
எந்த
அடித்தளமும் இல்லாதபோது,
ஒரு புகாரை உருவாக்கி நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாமலேயே வார்த்தைகளால்
வம்புக்கு இழுத்து சர்ச்சைக்குரிய வகையில் சிக்கவைத்து சண்டையிட தூண்டி தீய செயல்களால்,
வழக்குகளால், யாதொருவரையும் அகப்படுத்தாதேயுங்கள்
என்கிறார் பிரசங்கி.
கிறிஸ்துவின்
போதனையோ – ஒருவர் நம் கண்ணத்தில் அறைந்தாலும் அமைதியாக இருந்து மீதம் இருக்கும் மறு
கண்ணத்தையும் காண்பித்து அவன் கோபம் தீர்த்துக்கொள்ள விட்டு விடு என்கிறார் – மத்.
5:39
நீதிமானுக்கு
ஒருவன் தீங்கு செய்தால் – அவனை தேவனே தண்டிக்கும்படி மௌனமாக விட்டுவிடவேண்டும். நாம் முந்திக்கொண்டு நம் சக்திக்கு உட்பட்டு
எதையாவது திரும்ப செய்து விட்டால் துன்புறுத்தினவன்
தேவ ஆக்கினைக்கும் தப்பித்துக்கொள்வான் !! ரோ. 12:19
கோபக்காரன்
வழக்கைக் கொளுவுகிறான்;
மூர்க்கன் பெரும்பாதகன். நீதி. 29:22
கர்த்தருடைய
ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல்,
எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும்,
தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். 2தீமோ. 2:24
மூடனுடைய
உதடுகள் விவாதத்தில் நுழையும்,
அவன் வாய் அடிகளை வரவழைக்கும். நீதி. 18:6
ஞானமுள்ளவன்
பயந்து தீமைக்கு விலகுகிறான்;
மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான். நீதி. 14:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக