#844 - *ஒரு ஆசாரியர்... எப்படி
லேவியராக மாறினார்... இதற்கு வேதாகமத்தில்
பதில் உள்ளதா...?* இயேசு ஆசாரியர் ஆனால் லேவி கோத்திரராக ஊழியம் செய்தார்... அதை தொடர்புப்படுத்தி கேட்கப்பட்ட கேள்வி..
*பதில்*
இந்த
முக்கியமான கேள்விக்காய் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இயேசு
கிறிஸ்து லேவி முறைப்படி ஆசாரியராக வரவில்லை. காரணம் அந்த சந்ததிக்கு லேவி என்ற ஒரு
தகப்பன் தான் ஆரம்ப புள்ளி வைக்கிறார் !! கிறிஸ்துவானவர் ஆரம்பம் முடிவும் இல்லாதவரல்லவா
!!
இந்த
கேள்விக்கான விளக்கத்தை மிக தெளிவாக எபிரேய ஆக்கியோன் எழுதியிருக்கிறார். அதை அப்படியே வேதாகமத்திலிருந்து இங்கு
பதிவிடுகிறேன்.
அவசியமான
நேரடி வசனங்களை கீழே பதிவிடுகிறேன்.
*மிக
கவனமாகவும் பொருமையாகவும் நிதானமாகவும் வாசிக்கும்படி தயவாய் கேட்டுக்கொள்கிறேன்*.
எபி. 5:1 அன்றியும்,
மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக்
காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி
நியமிக்கப்படுகிறான்.
எபி.
5:4 மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய,
ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.
எபி. 5:5 அந்தப்படியே கிறிஸ்துவும்
பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய
குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே
அவரை உயர்த்தினார்.
எபி. 6:20 நமக்கு முன்னோடினவராகிய
இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள்
பிரவேசித்திருக்கிறார்.
எபி.
7:1 இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான
தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு
இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
எபி. 7:3 இவன் (மெல்கிசேதேக்கு) தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
எபி. 7:4 இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத்
தசமபாகம் கொடுத்தான்.
எபி.
7:5 லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி
தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.
எபி. 7:6 ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி,
வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான்.
எபி.
7:11 அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் *லேவிகோத்திர
ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்*;
அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய
முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?
எபி.
7:12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்.
எபி.
7:13 *இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ.
அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே*.
எபி.
7:14 *நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது*;
அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும்
சொல்லவில்லையே.
எபி.
7:15 அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு
ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால் (சங் 110:4), மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.
எபி. 7:16 அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,
எபி.
7:17 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர்
என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
எபி.
7:18 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.
எபி.
7:20 அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்;
இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும்
ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும்
இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.
எபி.
7:21 ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது
எவ்வளவு விசேஷித்த காரியமோ,
எபி.
7:22 அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.
எபி.
7:23 அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால்,
ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
எபி.
7:24 இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.
எபி.
7:25 மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக
வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய
இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
எபி. 7:26 பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
எபி.
7:27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும்,
பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை;
ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.
எபி.
7:28 நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது;
நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும்
பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம் kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக