புதன், 12 ஆகஸ்ட், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 12 Aug 2020

 *தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee

இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

மனுஷனுடைய மூளை எப்போதும் (உண்மைக்கு மாறாக) உல்டாவாகவே யோசிக்கும். பிசாசு துவக்கத்திலேயே மாற்றி போட்டதின் விளைவு !!

இயேசுவே நேரடியாக வந்த போதும்,
மனிதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் இப்படி இல்லை,
அவர் அப்படி இல்லை என்று மறுத்து விட்டார்கள். (மத் 11:19)

அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்போ, புலம்பினார்கள் ! மத் 27:54

பல வேலைகளில் நாமும் இப்படி தான்.
இருப்பதை ஏற்க மறுத்து - மனம் சொல்வதை (இல்லாததை) எதிர்பார்த்து தற்காலத்தில் அநுபவித்துக்கொண்டிருப்பதை தொலைத்து விடுகிறோம்.

தற்போது இருப்பதை அங்கீகரித்து – அதில் திருப்தியையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினால் மாத்திரமே – அதை பல மடங்காக அதிகரித்து வருஷிக்கச்செய்வார் தேவன். மத் 25:23

இருக்கும் ஆசீர்வாதத்தை வேண்டாம் என்று உதாசீனபடுத்தி தூக்கி எறிந்தால் - (மத் 25:18), சொற்பமாக கொடுக்கப்பட்டதையும் இழந்து விடுவோம்.

ஆகவே – வாழ்க்கையோ, கணவனோ, மனைவியோ, எந்த நிலைமையையோ, வேலையோ, வறுமையோ, வசதியோ, வியாதியோ – எதையும் வெறுக்காமல், உதாசீனப்படுத்தாமல் அதற்காக நாம் தேவனை ஸ்தோத்தரித்து சந்தோஷமாய் மனரம்மியமாய் ஏற்றுக்கொள்ளும்போது தேவன் சகலத்தையும் நன்மையாக்குவார்.. 1தீமோ 6:8, 1கொரி 7:20, 1யோ 3:20, யோபு 42:2, சங் 114:8

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M

வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக