செவ்வாய், 14 ஜனவரி, 2020

#713 - மத்தேயு 3:6 தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் (யோவான்) ஞானஸ்நானம் பெற்றார்கள். யோவானிடம் பாவத்தை அறிக்கையிட்டர்கள் என்று அர்த்தமா? விளக்கவும்.

#713 - *மத்தேயு 3:6  தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் (யோவான்) ஞானஸ்நானம் பெற்றார்கள். யோவானிடம் பாவத்தை அறிக்கையிட்டர்கள் என்று அர்த்தமா? விளக்கவும்*.

*பதில்*
தங்கள் பாவங்கள் தங்களுடையது என்பதை ஒப்புக்கொள்வதென்பது மனந்திரும்புதலை குறிக்கிறது.

இவ்வாறு முழு குற்றச்சாட்டையும் தங்களைத் தாங்களே எடுத்துக் கொள்வதால் கடவுளையோ மற்ற மனிதர்களையோ காரணம் காட்டாமல் உண்மையான மனந்திரும்புதலுக்கு இது அவசியமானதை காண்பிக்கிறது.

தேவன் அனைவரது உள்ளந்திரியங்களையும் எப்போதும் அறிந்தவர்.

வெளியரங்கமாக தங்கள் பாவத்தை அறிக்கையிட்டதால் – யோவானும் அதை கேட்கிறவராக இருக்கிறார் – ஏசா. 29:15, சங். 139:4.

இந்த பரிசேயர்கள் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டதற்கும் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்று சொன்ன கட்டளைக்கும் எதிர்மறை வேறுபாடு உண்டு.

யோவான் கொடுத்தது – மனந்திரும்புதலுக்கென்ற ஞானஸ்நானம் (அப். 19:4, மத். 3:11, மாற்கு 1:4, யோ. 1:31

இயேசு கிறிஸ்து கொடுத்த கட்டளையோ – பாவமன்னிப்புக்கென்ற ஞானஸ்நானம் – அப். 2:38, அப். 22:16, 1கொரி. 6:11, தீத்து. 3:5, எபி. 10:22, மத். 28:19-20

ஆகவே புதிய ஏற்பாட்டு காலத்தில் ஞானஸ்நானம் எடுக்கும் போது பாவத்தை அறிக்கையிடாமல் விசுவாசத்தை - இயேசு தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிட்டு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும். அப். 8:37, அப். 9:20; மத். 16:16; யோ. 6:68-69, யோ. 9:35-38, யோ. 11:27, யோ. 20:31; 1கொரி. 12:3; 1யோ. 4:15, 1யோ. 5:1, 1யோ. 5:5, 1யோ. 5:10-13

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக