வியாழன், 28 நவம்பர், 2019

#633 - கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?...

#633 - *கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா?*...

*பதில்*

கி.பி. 360ம் ஆண்டில் கிறிஸ்துமஸ் என்ற பண்டிகையை கத்தோலிக்கர்கள்  அறிமுகப்படுத்தினார்கள்.

டிசம்பர் 25க்கும் கிறிஸ்துவிற்கும் சம்பந்தமேயில்லை என்பது வேத நிகழ்வுகளின் அடிப்படையிலும் கிறிஸ்துமஸ் என்ற பண்டிகையின் மூலஆதாரமும் தெளிவாக விளக்குகிறது. லூக்கா 2:8, 2:3

கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடியதாக வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

கிறிஸ்துவின் இறந்த நாளை நினைவு கூறும்படி தான் கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.

மேலும் ஆரம்பத்தில் கத்தோலிக்கர்கள்
மேரி க்ரைஸ்ட் மாஸ் (Mary Christ Mass) என்று துவங்கினார்கள்.

மேரி குறிக்கப்படுவதால் – கத்தோலிக்கர் அல்லாதவர்கள் கொண்டாடுவதில்லை என்று மேரியை மெர்ரி ஆக்கினார்கள் (Merry Christ Mas). ஆகவே மற்ற கிறிஸ்தவ மதத்தினர் கொண்டாட ஆரம்பத்தனர்.

மற்ற மதத்தினரையும் உள்ளே இழுக்க வேண்டும் என்று வியாபாரிகள் விரும்பியதால் க்ரைஸ்ட்ஐயும் எடுத்துப்போட்டார்கள் – இப்போது மேரியும் இல்லை கிறிஸ்துவும் இல்லை – வெறும் களியாட்டும் குத்தாட்டமுமாகி – X-Mas ஆகிவிட்டது.....

எக்ஸ் என்றால் – ஒன்றுமில்லாத கூட்டம் !!!
Mary Christmas became Merry Christ mas became now X-Mas !!!

படிக்க கொஞ்சம் கஷ்டமானாலும் – இது தான் உண்மை.

கிறிஸ்துவை நினைக்கிறோம் என்று கிறிஸ்துவிற்கு விரோதமாக செய்து விடகூடாது.

*** அட்டை படத்தில் வரும் மூன்று சாஸ்திரிகள் – வேதாகமத்தில் இல்லை !!

*** அட்டை படத்தில் இருப்பது போல் மூன்று சாஸ்திரிகளோடு +  பிறந்த குழந்தை + மாட்டு தொழுவம்  - வேதாகமத்தில் இல்லை !!

இந்த வேதாகமத்திற்கு விரோதமான பண்டிகையிலிருந்து விலகியிருப்பது ஆசீர்வாதம்.

வேறெந்த நாளிலும் வெளியே வராத அநேகர் அந்த நாளிலாகிலும் சபைக்கு வருகிறவர்களை நான் உதாசீனபடுத்தாமல் – அன்று சத்தியத்தை சொல்லி கொடுத்து பிரயோஜனபடுத்திக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு....

பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து வந்த நோக்கத்தையும், அவர் கொடுத்த போதனையையும் கடைபிடிக்கும் போது நிச்சயம் பரலோகம் போக முடியும்.

அவர் கூறாததை செய்யும் போது – நிச்சயம் பரலோகம் போக முடியாது.

கிறிஸ்துமஸ் என்றதும் - *இயேசுவை விட்டுவிட்டு* கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம், 3 சாஸ்திரிகள் பின்னாடி உலகமே போய்க்கொண்டு இருக்கிறது. இவைகளை  எல்லாம் வேதத்தில் தேடி தேடி நானும் அலுத்து போனேன்.  *வேதாகமத்தில் எங்கேயும் காண முடியவில்லை*.

வேதாகமத்தில் இல்லாததை கடை பிடித்தல் தண்டனையை வருவிக்கும்.

பாவிகளை இரட்சிக்க வந்த இயேசுவின் பிறந்த நாள் என்று சொல்லி, அன்று பிராந்தி கடையும் பீர் வியாபாரமும் விபசார விடுதிகளும் களை கட்டுகிறது - வேதனையிலும் வேதனை.

6 லட்சம் புருஷர்கள் மோசேயின் மூலம் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார்கள் – ஆனால் 2 பேர் மாத்திரம் தேவனுடைய பேச்சை முழுமையாய் கேட்டதினால் கானான் தேசத்தில் பிரவேசித்தார்கள்.

போகிற போக்கை பார்த்தால் வேதாகமத்தையே நைசாக மற்றிவிடுவார்களோ என்று தோன்றுகிறது !!

பாவத்தை விட்டு – மீட்பரை பற்றிகொள்ளுவோம்.

தேவனுக்கு கீழ்படிவதை காட்டிலும் மனுஷனுக்கு கீழ்படிவது உத்தமமாய் இருக்குமோ? அப். 5:29

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக