வியாழன், 28 நவம்பர், 2019

#631 - வேதாகமம் என்றால் என்ன? எனக்கு தெரியாது?

#631 - *வேதாகமம் என்றால் என்ன? எனக்கு தெரியாது? விளக்கவும்*

*பதில்*
ஆகமம் என்றால் – கடவுளின் வார்த்தைகள் அடங்கிய வரிகள்
வேதம் என்றால் – புத்தகம்.

வேதம் + ஆகமம் = வேதாகமம்

அகராதியின் ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படையான கிறிஸ்தவத்தை அறியாத ஒரு நபருக்கு வேதாகமம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் மேலே விவரித்திருக்கிறேன்.

அந்த வார்த்தைக்கான விரிவு - வேதத்திலிருந்து கவனிக்கவும்:

1)
வேதம் என்று தமிழ் வேதாகமத்தில் வரும் இடங்கள்:

சங்கீதம் 19:7 - கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

மேலும் சங். 119:77, 92, 142, 174, ஏசா. 51:4, எரே. 8:8, ரோ. 10:11, 11:2, கலா. 3:8, 22, 4:30

எளிமையான தமிழாக்கத்தின் புரிதலுக்காக – கத்தோலிக்கர்களின் மொழிப்பெயர்ப்பை கவனித்தால் :
திருப்பாடல்கள் 19:7 - ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.

ஆகவே வேதம் அல்லது சட்டம் என்பது = வரிகளை அல்லது எழுத்தைக் குறிக்கிறது.

2)
ஆகமம் என்று தமிழ் வேதாகமத்தில் வரும் இடங்கள்:

அப்போஸ்தலர் 8:30 - அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.

ஆகமங்கள் என்று மாற்கு 1:3, லூக்கா 24:44, அப். 15:21, 28:23, ரோ. 16:25, 2கொரி. 3:15

ஆகமத்தை என்று 2இரா. 11:12, 2நாளா. 23:11, ஏசா. 8:16, 8:20, மாற்கு 12:26, லூக்கா 3:5, யோ. 6:45, அப். 8:28, 8:30

எளிமையான தமிழாக்கத்தின் புரிதலுக்காக – கத்தோலிக்கர்களின் மொழிப்பெயர்ப்பை கவனித்தால் :
திருத்தூதர் பணிகள் அதிகாரம்-8:30 -  பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, "நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?" என்று கேட்டார்.

நூல் என்பது சுருள் அல்லது புத்தகத்தைக் குறிக்கிறது.

ஆகமம் என்றால் – கடவுளின் வார்த்தைகள் அடங்கிய வரிகள்
வேதம் என்றால் – புத்தகம்.

வேதம் + ஆகமம் = வேதாகமம்

உலகம் தோன்றியது முதல் – அழியும் வரை உள்ள சகலவற்றையும் சொல்லும் எல்லா காலங்களையும் விவரிக்கும் ஒரே புத்தகம் வேதாகமம்.

பழைய ஏற்பாடு என்றும்
புதிய ஏற்பாடு என்றும்
இது 2 பொிய பிரிவுகளை கொண்டுள்ளது.

தேவன் மனிதனுக்கு கொடுத்த கட்டளைகளை மீறினதால் தனக்கென்று ஒரு சந்ததியை தெரிந்தெடுத்து அவர்களுக்கு கொடுத்த சட்டங்களின் முறைகளை முதல் 4 புத்தகங்களிலும்,
பின்னர் நியாயாதிபதிகள் மூலம் வழிநடத்தினதையும்
பின்னர் இராஜாக்கள் மூலம் வழிநடத்தினதையும்
பின்னர் தீர்க்கதரிசிகள் மூலம் வழிநடத்தினதையும்
பின்னர் தாமே வந்து செயல்படுத்தி நிறைவேற்றினதையும்
பின்னர் அதை தன் சீஷர்கள் மூலம் பறைசாற்றினதையும்
66 புத்தகங்கள் அடங்கிய இந்த வேதாகமம் என்பதாகும்.

இந்த உலகம் எப்படி உருவாக்கப்பட்டது
மனிதன் எப்படி உருவாக்கப்பட்டான்
அவன் யாருக்கு கீழ்படியவேண்டும்
அவன் மரித்ததும் எங்கு போவான்
மரித்தப்பின் அவனின் வாழ்க்கை என்ன என்ற சகல செய்தியும் இந்த வேதாகமத்தில் பார்க்க முடியும்.

எந்த மனிதனும் மரித்தபின் பூணையாகவோ நாயாகவோ மறுஜென்மம் எடுத்து வரமுடியாது.

தங்கள் வாழ்க்கையில் செய்த சகல நன்மைக்காகவும் தீமைக்காகவும் பரிசுகளும் தண்டனைகளும் இயேசு கிறிஸ்து மறுபடியும் வரும்போது நிச்சயம் நடக்கும் – விளைவுகள் காலவரையின்றி எப்போதும் என்றென்றும் நித்தியமாக இருக்கும். ஆகவே நாம் இப்போது உயிரோடு இருக்கும் போதே – நம் செய்கைகளை சரிபார்த்து – அந்த தண்டனைக்கு தப்பித்துக் கொண்டால் – நித்திய சந்தோஷமடைவது நிச்சயம்.

பிறந்து வளர்ந்து 25வருடம் படிக்கிறோம்.
பின்னர் 30 வருடம் உழைக்கிறோம். (25+30 = 55 வயது)
வேலையிலிருந்து ஓய்வு எடுத்து - 20 வருடம்  (சுமார் 75 வயது) சுகமான வாழ்க்கை வாழ கஷ்டப்படுகிறோம்.

ஆனால் – மரித்தபின் உள்ள நிரந்தரமான வாழ்க்கையை சுகமாக சந்தோஷமாக வாழவேண்டியதை சரியாக தெரிந்தெடுத்தீர்களா என்பதை ஊர்ஜீதப்படுத்திக்கொள்ளவும்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கேட்டு
ஞானஸ்நானம் எடுத்து
அவர் வழிகளில் நிலைத்திருந்தால்
நித்திய வாழ்வை பெற்றுக்கொள்வோம் என்று இந்த வேதாகமம் நமக்கு தெரிவிக்கிறது.

இந்த வேதாகமத்தில் எழுதப்பட்டவை 99% அனைத்தும் நடந்து விட்டது !!
ஆகவே இதுவும் நடக்கும் என்பதால் – நாங்கள் இந்த வேதாகமத்தை பின்பற்றுகிறோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக