ஞாயிறு, 10 நவம்பர், 2019

#605 - மீறுதல் செய்தது ஆதாமா?? ஏவாளா??

#605 - *மீறுதல் செய்தது ஆதாமா?? ஏவாளா?*

ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரியானவளே வஞ்சிக்கப்பட்டு, மீறுதலுக்கு உட்பட்டாள், என்று 1தீமோத்தேயு -3:14 கூறுகிறது,

அதே வேளை,  ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, என்று
ரோமர் -5:15, 17, 18 கூறுகிறது.

மீறுதல் செய்தது ஆதாமா?? ஏவாளா??

ஏவாளின் மீறுதலுக்கு ஆதாம் ஒருவேளை இணங்காமல், நன்மை தீமை அறியத்தக்க கனியை புசியாமல் தவிர்த்து இருப்பாரானால்???

இன்று உலகம் எப்படி இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்??
விளக்கும்படி தயவாக கேட்கிறேன்.


*பதில்*
நன்மை தீமை அறியதக்க கனியை புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னபோது ஏவாள் உருவாக்கப்படவேயில்லை !! ஆதி. 2:16, 18

அந்த கட்டளையை தேவன் ஆதாமிடத்தில் தான் சொன்னார்.

தன் மனைவி செய்த தவறுக்கு கணவனே முழு பொறுப்பு.
கணவனே தன் மனைவிக்கு அதிகாரி தலையாக இருக்கிறான்.

எபே. 5:23, ஆதி. 3:16, எபே. 5:22

மனைவியானவள் *எந்த காரியத்திலேயும்* தன் புருஷனுக்கு கீழ்படிந்திருக்கவேண்டும் எபே. 5:24

கணவனின் பேச்சை மீறினால் தன் வம்சத்திற்கே பாவத்தை சேர்த்த ஏவாள் மிகப்பொிய உதாரணம்.

ஆகவே தான் பெண்கள்  - ஆண்களுக்கு பிரசங்கம் செய்வது அயோக்கியம் என்று வேதம் சொல்கிறது (1கொரி. 14:35)

மனிதன் கீழ்படியாமல் போவான் என்பது தேவனுடைய ஆதீனத்தில் இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை சங்கீதம் 139, 1கொரி. 2:16, யோபு 22:2, யோபு 40:2, ரோ. 11:34

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக