சனி, 19 அக்டோபர், 2019

#569 - நன்மை தீமை அறியதக்க கனி எது?

#569 - *நன்மை தீமை அறியதக்க கனி எது?*

*பதில்*
எந்த கனி என்பதை வேதம் குறிப்பிடவில்லை.

நன்மை தீமை அறியதக்கது என்றால் என்ன என்கிற கோணத்தில் உங்கள் கேள்வியாக இருந்தால் அதற்கான பதில் கீழே:

மனிதன் கீழ்படிவதை சோதிக்கும் வண்ணம் இந்த கட்டளை அவனுக்கு கொடுக்கப்பட்டது (ஆதி. 2:16-17)

தேவன் சொல்வதை அப்படியே கேட்பது நன்மை. கீழ்படியலாமா வேண்டாமா என்று யோசித்த போது வாழ்வின் நாசத்தை வரவழைத்தது (ஆதி. 3:1-3)

அந்த கனியை புசித்த போது எது தவறு என்பதை அவர்கள் புத்தி உணர்த்தியது (ஆதி. 3:10)

அவர்கள் அந்த கனியை புசிக்கும் முன்னர் ஒளிந்து இருக்க வேண்டும் என்று அவர்கள் புத்திக்கு எட்டவில்லை மாறாக தேவனோடு சகஜமாக பழகினர் (ஆதி. 3 3:8, 2:15, 23-25)

தீமை எவை என்பதை யோசிக்கும் திறன் அந்த கனியை புசித்தவுடன் தெரிந்து கொண்டார்கள் (ஆதி.  3:7)

பரிசுத்தத்திற்கு விலகி ஓட வேண்டும் என்னும் பிரிவை உணர்ந்தார்கள் (ஆதி. 3:8)

அந்த கனியை புசியாதிருந்தால் ஒரு வேளை ஜீவ விருட்சத்தின் கனியை அவர்கள் கண்டுபிடித்து சாப்பிட்டு காலாகாலமாக வாழ்ந்திருக்க முடியும் (ஆதி. 2:9, 3:22, 24)

தீமையை அறிவதை அறிந்து கொண்டதால் நித்தியத்தை கண்டறியும் நிலைமையை நம் மீது வரப்பண்ணினார் - வெளி. 2:7, 22:1-2, 14, 19

கிறிஸ்துவை பற்றிக் கொண்ட நாம் ஆதாம் ஆரம்பத்தில் இழந்த அந்த நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கிறோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
 
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் :

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக