வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

#337 - இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் - விளக்கவும்

#337 *இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 16:28 -  Dear Sir, pls explain this verse 👆... Thank u.

*பதில்* :
வேதத்தை *படிப்பதோடு  நின்று விடாமல்* – புரிந்ததும் வேதத்தின் படி நம் கிறிஸ்தவ வாழ்க்கையை *திருத்திக்கொள்வதே* மிக மிக அவசியம். கூப்பிடுகிறவன் அல்ல செய்கிறவனே பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் !! (மத். 7:21)

இந்த நல்ல கேள்விக்காய் நன்றி !!!

அங்கே நின்றவர்கள் கிறிஸ்துவால் அழைக்கப்பட்ட சீஷர்கள் / அப்போஸ்தலர்கள் (வ24). இதே சம்பவம் மாற்கு 8:34-9:1, லூக்கா 9:23-27லிலும் காணமுடியும்.

இந்த வார்த்தைக்கு முன்னதாக கிறிஸ்து சொன்னவைகளை கவனிக்கும் போது இந்த வரிகளின் அர்த்தம் புரியும்.

தன் சபையை கட்டுவேன் என்றார் கிறிஸ்து (வ18).
மேலும் பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோள்களை பேதுருவுக்கு தருவேன் என்றார். (வ19)

அந்த சாவியை (சுவிசேஷத்தை - யோ. 3:3-5) உபயோகித்து பேதுரு முதல் முதல் யூதர்கள் மத்தியில் (அப். 2) இராஜ்ஜியமாகிய சபை துவங்கப்பட்டது. மேலும் முதல் முதலில் புறஜாதிகளின் மத்தியிலும் பேதுருவின் (அப் 10) மூலமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

தம்முடைய சீஷர்கள் “நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணுவீர்கள்.....என்றார் கர்த்தர் (லூக். 22:30), இது கர்த்தருடைய இராப்போஜனத்தை திருச்சபை கடைப்பிடிப்பதில் நிறைவேற்றப்படுகிறது (1 கொரி. 10:16, 21).

அப்போஸ்தலன் யோவான் ஆசியாவின் ஏழு சபைகளுக்கு எழுதியபோது (வெளி. 1: 4), கிறிஸ்துவின் “ராஜ்யத்தில்” அவர்களுடன் பங்குதாரராக இருப்பதை அவர்களுக்குத் தெரிவித்தார் (வெளி. 1: 6, 9).

அதே வேளையில் – கிறிஸ்துவின் வருகையில் அனைவரும் நியாயதீர்ப்படைந்து நித்தியமான தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிப்போம்.

"பல இன்னல்களின் மூலம் நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்" என்று பவுல் கிறிஸ்தவர்களுக்கு எச்சரித்தார் (அப்போஸ்தலர் 14:22).

"கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; " (2தீமோ. 4:18). என்றார் பவுல்.

இதேபோல், விசுவாசிகளுக்கு "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும். என்று பேதுரு எழுதினார் (2பேதுரு 1:11).

ராஜ்யம் என்ற சொல்லைப் பற்றி பல தவறான கணிப்புகளும் கருத்துக்களைக் வைத்து பறை சாற்றி புத்தகங்களும் எழுதிக் கொண்டு இருக்கும் இந்த காலங்களில், கவனமாக *வேதாகமத்தை சரியாய் பகுத்து* படித்து புரிந்து நம்மை மாற்றி கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவின் இராஜ்ஜியம் என்பது கிறிஸ்து துவங்கிய சபையை குறிக்கிறது (கொலோ. 1:13)

தான் தற்போது ஆழுகை செய்து கொண்டிருக்கும் இராஜ்ஜியத்தை – தமது 2ம் வருகையில் அனைவரையும் சேர்த்து நியாயந்தீர்த்து கடைசியாக இந்த  இராஜ்ஜியத்தை பிதாவானவர் கையில் ஒப்புக்கொடுப்பார் (1கொரி. 15:23-25)

அங்கே நின்றவர்கள் சிலரை தவிர அனைவரும் கிறிஸ்துவின் இராஜ்ஜியமாகிய சபை துவங்கின நாளில் இருந்தார்கள் (அப். 2:14)

இந்த சம்பவத்தை காணமுடியாமல் விடுபட்டவர் – யூதாஸ் ஸ்காரியோத்து (அப். 1:18, மத். 27:5)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக