திங்கள், 27 மே, 2019

#180 - கிறிஸ்தவர்கள் TV பார்க்கக்கூடாது. ஆனால் நேரடி நிகழ்ச்சிகளையும் நாட்டு நடப்பு செய்திகளையும் தொலைகாட்சியில் பார்க்கலாமா?

#180 - *கிறிஸ்தவர்கள் TV பார்க்கக்கூடாது. ஆனால் நேரடி நிகழ்ச்சிகளையும் நாட்டு நடப்பு செய்திகளையும் தொலைக்காட்சியில் பார்க்கலாமா?*

*பதில்:*
தொலைக்காட்சியை பார்ப்பது பாவம் என்று பறைசாற்றின பெந்தேகோஸ்தேயினர் கூட இப்போது தங்கள் விளம்பர ஆடம்பர நிகழ்ச்சிகளை தொலைகாட்சியில் கொண்டு வந்து வசூல் வேட்டையை  தொடங்கி வருடங்கள் போய்விட்டது !!

தொலைகாட்சியை பார்ப்பது தவறு என்ற கருத்து – தவறானவைகளை பார்ப்பது தவறு என்ற அர்த்தத்தில் துவங்கினது.

ஆரம்ப காலங்களில் சினிமா நிகழ்வுகளை, சினிமா பாடல்களை, சினிமா காரரின் சரித்திரங்களை ஒலிபரப்பினார்கள் – அதை காண்பவர்கள் அப்படிப்பட்ட பழக்கங்களை பின்பற்றுவதற்கு ஏதுவாகும் என்று அதை எதிர்த்தார்கள்.

இப்போதோ – தொலைகாட்சியில் நாட்டு நடப்பு செய்திகள், வேதாகம செய்திகள் என்று பல வகையான பிரயோஜனமான நிகழ்ச்சிகள் நம் ஆத்மீக மற்றும் உலக அறிவை வளர்க்கும் கருவியாக மாறியுள்ளது.

என்னை பொறுத்த வரையில் – இந்த கால அடிபடையில் சொல்ல வேண்டுமென்றால், தொலைகாட்சியை விட கையிலேயே எப்போதும் வைத்திருக்கும் மொபைல் Phone அதைவிட மிக மிக ஆபத்தானது !!

எதை பார்க்கிறோம் – எதற்கு நம் கவனத்தை செலுத்துகிறோம் என்பதே முக்கியம்.

சினிமாவில் காணாத ஆபாசம் இப்போது சாலையில் நடந்து போகும் போதே நேரிடையாக காணமுடிகிறது !!

நன்மையானதை பற்றிக்கொள்ளவேண்டும்.

வேதாகம வசனம் சொல்கிறது –
சத்தியத்தை*யும்* அறிவீர்கள் – சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று (யோ. 8:32)

கவனிக்கவும் –
சத்தியத்தை அறிவீர்கள் என்று சொல்லவில்லை –
சத்தியத்தையும் அறிவீர்கள் என்று சொல்கிறது வசனம்...

பலவற்றை நாம் அறியும் போது – சத்தியத்தையும் அறிகிறோம்..... ஆனால் நம்மை விடுதலையாக்குவது சத்தியமே என்று உணர்ந்து அதற்கு மாத்திரம் செவிகொடுக்கும் போது நமக்கு பரிசுத்தம் !!!

TV Reality Show பார்க்கலாம் பார்க்கக்கூடாது என்று யார் தடை போட்டாலும் மொபைலிலும் செய்தி தாளிலும் வரும் ஆபாசங்களும் தெருக்களில் காணும் ஆபாசங்களையும் சுவரொட்டிகளில் காணும் ஆபாசங்களையும் நம் கண்களிலிருந்து நாம் மறைக்கமுடியுமா?  சிந்தையே காரியம்...

ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடந்து  எவருக்கும் இடறலற்றவர்களாயிருப்போம்.  (1கொரி. 10:31-33)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

 

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக