அவர்கள்
கோயில் பிரசாதம் கொண்டுவந்தால் என்ன சொல்வது? (நான் எப்போதும் மறுத்து விடுகிறேன், ஆனால் அவர்கள் மனம் கோணகூடாது என்று சிலர்
வித்தியாசமாக அனுகுகிறார்கள்)
*பதில்* - உங்களது கேள்விக்கான பதில் நேரடியாக இரண்டு அதிகாரத்தின் வசனங்களில் உள்ளதை அப்படியே பதிவிடுகிறேன்.
1கொரி. 8:4
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது
ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
1கொரி. 8:8
போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை,
புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு
குறைவுமில்லை.
1கொரி. 8:9
ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும்
பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.
1கொரி. 8:10
எப்படியெனில், அறிவுள்ளவனாகிய
உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?
1கொரி. 8:11
பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
1கொரி. 8:12
இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப்
புண்படுத்துகிறதினாலே, நீங்கள்
கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.
1கொரி. 8:13 ஆதலால்
போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு,
என்றைக்கும் மாம்சம்
புசியாதிருப்பேன்.
1கொரி. 10:25
கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும்
விசாரிக்கவேண்டியதில்லை.
1கொரி. 10:26
பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
1கொரி. 10:27
அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால்,
மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும்
விசாரியாமல், உங்கள்
முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.
1கொரி. 10:28
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால்,
அப்படி அறிவித்தவனிமித்தமும்
மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
1கொரி. 10:29
உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே
சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய்
எண்ணப்படவேண்டுவதென்ன?
1கொரி. 10:30 மேலும்
நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?
உங்கள்
கேள்விக்கு மேலே உள்ள வசனங்களினூடே நேரிடையான விடை உள்ளது என்று நம்புகிறேன்
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக