வெள்ளி, 5 ஏப்ரல், 2019

#89 - யெகோவா சாட்சியனரின் போதனைகளும் வேத விளக்கங்களையும் பகிரவும்.

#89 - *யெகோவா சாட்சியனரின் போதனைகளும் வேத விளக்கங்களையும் பகிரவும்*.

*பதில்*:
மிக அதிகமாய் கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப்படும் போதனைகளை குறித்து நீங்கள் கேட்டமைக்கு மிக்க நன்றி. முழுவதுமாய் அவர்களை குறித்து எழுத எனக்கு மனமுன்டு. இந்த குழுவில் அவ்வளவு நீளம் எழுதினால் உபயோகமாக இருக்காது என்று கருதி இரத்தின சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.

*அவர்கள் முன்வைக்கும் காரியங்களில் சில கீழே*:
1- அரசியல் ரீதியாக இருக்கும் எந்த அரசாங்கமும் – பிசாசினுடையது
     (ஆதாரம் "Make Sure of All Things" p. 62)
2- 1,44,000 பேர் மாத்திரம் பரலோகம் போகமுடியும் (Let God Be True p. 121)
3- 1000 வருடம் கிறிஸ்து இந்த பூமியை அரசாளுவார் (Let God Be True p. 121)

இப்படி இன்னும் ஏராளமான தவறான போதனைகள் உண்டு !!

இருந்தபோதிலும் மிகவும் பரவலாக பேசப்படும் இந்த கேள்வியைக்குறித்து மாத்திரம் இப்போது பார்க்கலாம்.

வேத குறிப்புகளை பார்ப்போம்.

*கேள்வி* : 1-  *அரசியல் ரீதியாக இருக்கும் எந்த அரசாங்கமும் – பிசாசினுடையது* ("Make Sure of All Things" p. 62)

அரசாங்கத்திற்கு கீழ்படிய வேண்டும் என்று வேதம் கற்பித்திருக்க இவர்களுடைய இந்த கருத்து வேதத்திற்கு முற்றிலும் முரணானவை. ஆதார வசனங்கள் கீழே:

ரோ. 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

தீத்து 3:1 துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்,

தீத்து 3:2 ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொருமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.

1பேதுரு 2:13-17 நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிருக்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.

மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள்.

நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.

எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.

*கேள்வி* 2- *1,44,000 பேர் மாத்திரம் பரலோகம் போகமுடியும்* (Let God Be True p. 121)

கீழே உள்ள வசனத்தின் படி அவர்கள் தங்கள் கருத்தை வலியுறுத்துகிறார்கள்.

வெளி. 14:1-5 பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.

அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.

அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.

ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.

இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.

*விளக்கம்*:

வெளிபடுத்தல் புஸ்தகமானது *வெளிபடுத்தப்படவேண்டும்* – அந்த புஸ்தகம் ஏறத்தாழ *99சதவீதம் அடையாள மொழியினால் எழுதப்பட்டவை* – written in Symbolic Language.

முதல் வசனத்திலேயே அந்த பதம் கொடுக்கப்படுகிறது.

(KJV) The Revelation of Jesus Christ, which God gave unto him, to shew unto his servants things which must shortly come to pass; and he sent and *signified* it by his angel unto his servant John.

ஆகவே வசனங்களை ஆராயாமல் - அப்படியே பொருள் கொள்ளும் போது நாம் தவறான அர்த்தத்தை புரிந்து கொள்வோம்.

1-
1,44,000 பேரும் – தேவ தாசர்கள் (வெளி. 7:3). நெற்றியில் உள்ள குறி இரட்சிப்பை குறிக்கிறது (எபே. 1:13-14)

2-
அவர்கள் மீட்கப்பட்டவர்கள் (வெளி. 14:3).

12 – பழைய ஏற்பாட்டில் கோத்திரத்தையும் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களையும் குறிக்கிறது.

1000 – முழுமையை குறிக்கிறது.

அதாவது :
12 X 12 X 1000 = 1,44,000 = முற்றிலும் முழுமை !!!

மிக தெளிவாக சொன்னால் – யோ. 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன் என்றார் கிறிஸ்து.

இந்த 1,44,000 மாத்திரம் பரலோகம் போவதாயிருந்தால் – வெளிபடுத்தல் புஸ்தகத்தில் சொல்லப்பட்ட வசனத்தை நன்கு கவனித்து கீழ்வரும் கேள்வியை நீங்களே கேட்டு கவனியுங்கள்:

1-அவர்கள் அனைவரும் இஸ்ரவேலர்கள் என்று சொல்கிறார்கள் அதாவது யூதர்கள் – அப்படியென்றால் இரட்சிக்கப்பட்ட புறஜாதியினர் எங்கு போவார்கள் !!

பரலோகத்தில் தேவனுக்கு முன்பாக சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கும் பெரும் கூட்டத்தை எதிர்ப்பது போல இந்த மக்களின் போதனை உள்ளது என்பதை நாம் இனியும் மறுக்காமலிருக்க முடியுமா?

2-ஸ்திரீகளால் கறைபடாதவர்கள் பரலோகத்தில் இருப்பது என்றால் – பெண்கள் பரலோகம் போவதில்லையா?

அப்படியானால் திருமணம் ஆகாதவர்களும் மற்றும் ஆண்கள் மட்டுமே பரலோகம் போகமுடியும் என்று சொல்கிறார்களா? இதுவும் வேதத்திற்கு முரணான ஒரு கொள்கையே.

இன்னுமொரு சுவாரஸ்யமாக அவர்கள் சொல்வது என்னவென்றால் – 1,44,000 பேரில் பேதுருவும் ஒருவர் என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகிறார்கள்.

அவர் யூதர் மற்றும் ஒரு ஆண், ஆனால் அவருக்கு மனைவி இருந்ததால் (I கொ. 9: 5), அவர் ஒரு பெண் கறைபடாதவர் அல்ல என்று எப்படி சொல்லமுடியும்?

ஆகவே வெளிபடுத்தல் புஸ்தகத்தை நாம் கவனமாக கையாள வேண்டும்.

1-கொடுக்கப்பட்ட எண்கள்
2. கோத்திரங்கள்
3. கரைபடாதவர்கள்
4. கருத்துக்களைக் குறிக்கும் குறியீடுகள்
போன்றவையை நன்கு அறிய வேண்டும்.


யெகோவாவின் சாட்சிகள் சிலர் பூமிக்குரிய மனிதர்களாகவும் மற்றவர்கள் ஆன்மீக மனிதர்களாகவும் வளர்க்கப்பட்டுள்ளனர் என்கின்றனர்.

ஆனால் நாம் அனைவரும் ஆவிக்குறியவர்கள் என்று பவுல் கூறுகிறார் - I கொ. 15: 42-53

இதைச் நியாயபடுத்த - யெகோவாவின் சாட்சிகள் இந்த பத்தியில் 1,44,000 பேரைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்று கூறுகின்றனர். ஆனால் அத்தகைய வரம்பு இந்த பத்தியில் குறிப்பிடப்படவில்லை அல்லது குறிக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக பவுல் தெளிவாக கூறுகிறார், இது அனைவருக்கும் பொருந்தும் என்று - I கொ. 15: 51-52

இதை 1 யோ. 3: 2 ஆதரிக்கிறது, இது நாம் மறுரூபமாக்கப்படுவோம் என்றும் கூறுகிறது.

உயிர்த்தெழுதலில், நீதிமான்கள் அனைவரும் இயேசுவோடு சேருகிறோம் – 1 தெச. 4: 16-17

மேலும் இயேசுவின் ராஜ்யம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல - யோ.  18:36

யெகோவாவின் சாட்சிகள் எதிர்காலத்தில் இயேசுவுக்கு அதிகாரமும் ராஜ்யமும் வழங்கப்படுவதாக சொல்கிறார்கள்.

ஆனால் இயேசுவுக்கு ஏற்கனவே எல்லா அதிகாரமும் இருக்கிறது - மத்தேயு 28:18

இயேசு தம்முடைய ராஜ்யத்தை பிதாவிடம் திரும்பக் கொடுக்கும் போது தான் முடிவு வருகிறது – 1 கொ. 15: 20-28

நாம் இப்போது கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தில் இருக்கிறோம் என்று பவுல் கூறுகிறார், ஏனென்றால் நாம் அதில் நுழைந்திருக்கிறோம் - கொலோசெயர் 1:13

அவர்களின் சொர்க்கத்தைப் பற்றி பேச பூமியில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு பகுதி - ஏசா. 65: 21-23

இது ஒரு அழகான விளக்கம். ஆனால் பெரும்பாலும், சூழலைப் படிக்கும்போது ஒரு குறைபாடு இருக்கிறது - ஏசாயா 65:20

மக்கள் இன்னும் மரிக்கிறார்கள் அல்லவா !  இந்த உலகில் இன்னும் பாவிகள் இருக்கிறார்கள் என்று இந்த விளக்கம் கூறுகிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா!

ஆனால் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பூமிக்குரிய சொர்க்கத்தில், பாவம் உலகத்திலிருந்து சுத்திகரிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

பரலோகம் போவதற்கு ஒரு பெறும் பரம்பரையே காத்திருக்கிறது – 1 பேதுரு 1: 3-6

பரலோகத்தில் பல அறைகள் உள்ளன - யோவான் 14: 2-3

*அப்படியென்றால் இந்த 1,44,000 யார்*?
அவர்கள் தற்போது பூமியில் எந்த நேரத்திலும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

பூமிக்கு எதிராகக் கொண்டுவரப்பட வேண்டிய உபத்திரவத்திலிருந்து முத்திரையிடப்பட்ட (பாதுகாக்கப்பட்ட) மக்கள் இவர்கள் - வெளி. 7: 1-2

ஆனால் அவர்களுடைய அந்த பாதுகாப்பானது (வைக்கப்பட்ட முத்திரையானது)  உபத்திரவத்தின் மூலமாக கொலை செய்யப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்காது - வெளி. 11: 7

பூமியின் தீங்கிலிருந்து விடுவிக்கப்படும் ஒரு பாதுகாப்பு மட்டுமே. இது மக்கள் முத்திரையிடப்படும் வரை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது - வெளி. 7: 3

அவர்கள் அனைவரும் ஆன்மீக இஸ்ரவேலர்கள் - யாக். 1:1; 1 பேதுரு 1:1; கலா. 6:16; பிலி. 3:3

*திரளான கூட்டம் யார்*? - வெளி. 7:13
அவர்கள் உபத்திரவத்திலிருந்து வெளியே வந்தவர்கள் - வெளி. 7:14

இனி பாதுகாப்பு தேவையில்லாதவர்களாகையால் முத்திரை வைக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.

அவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக தேவதூதர்களுடன் இருக்கிறார்கள் - வெளி. 7:15

இவர்கள் அனைத்து வயதினரிடமிருந்தும் மீட்கப்பட்டவர்கள், தேவனின் உன்னதமான புகழைப் பாடுவதற்காக தேவனுக்கு முன்பாக சேர்ந்தவர்கள்.

அவருடைய வேதத்தில் கற்பித்தபடி நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய விருப்பத்திற்கு ஏற்ப மாற்றுவதன் மூலம் நீங்களும் நானும் அந்த பெரிய கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் - ஒரு தவறான மதத்தின் மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாட்டைப் பின்பற்றுவதன் மூலம் அல்ல.

*அடுத்த கேள்வி*:
3- *1,000 வருடம் கிறிஸ்து இந்த பூமியை அரசாளுவார்* (Let God Be True p. 121)

*வசனங்களை வாசிக்கவும்*:
யோ. 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

ரோ. 14:17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

லூக்கா 17:20 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
லூக்கா 17:21 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

*இராஜ்ஜியம் என்பது சபை*.
பரலோக இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்டது கிறிஸ்து பரலோகம் போன 10ம் நாளில் (அப். 2)

கொலோ. 1:12-14 ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

*கிறிஸ்துவின் 2ம் வருகையில் இந்த இராஜ்ஜியத்தை பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுப்பார்*

1கொரி. 15:22-24 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக